12/31/2013


            
தற்போது சந்தையில் உள்ள கைப்பேசிகளில் வினைத்திறன் கூடிய கைப்பேசிகளாக சம்சுங் தயாரிப்புக்களே காணப்படுகின்றன.
இதனை தக்க வைப்பதற்கு அந்நிறுவனம் புதிய அதிவேகம் கொண்ட சிப்பினை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இதன்படி மொபைல்களுக்கான உலகின் முதலாவது 8GB LPDDR4 DRAM சிப்பினை தயாரிக்கின்றது. இச்சிப்பினை உள்ளடக்கியதாக வெளிவரவுள்ள கைப்பேசிகளில் 4GB வரையிலான RAM இனை பயன்படுத்தக்கூடியதாக இருப்பதுடன் கைப்பேசிகளின் வினைத்திறன் 50 சதவீதத்தினால் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிவேகம் கொண்ட சிப்பினை உருவாக்கும் முயற்சியில் சம்சுங்...

http://www.tamileditor.com/wp-content/uploads/2013/06/bill-gates.jpg
மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைவரான பில்கேட்ஸ் பொலிவுட் நடிகர் அமீர் கானை சந்தித்து பேச விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
அமீர் கானின் பல்வேறுபட்ட சமூக சேவைகளில் ஈடுபடும் நடவடிக்கைகளால் அவரது புகழ நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது. இதனால் அமீh கானை சந்திக்க பல பிரபலங்களும் ஆர்மாக உள்ளனர்.
இந்நிலையில் சமூக சேவைகளில் அக்கறைகொண்ட மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸும் அமீர் கானை சந்திக்க விரும்புவதாக தனது வலைப்பூவில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பில்கேட் அவருடைய வலைப்பூவில் எழுதியிருப்பதாவது, பொலிவுட் நடிகரும், சமூக ஆர்வலருமான அமீர் கானை சந்திக்க ஆவலாக உள்ளேன். யுனிசெப் தூதுவராக இருக்கும் அவரது பணிகள் குறித்து கேட்டறிய விரும்புகிறேன். அவரது தொலைக்காட்சி நிகழ்ச்சியான சத்யமேவ ஜெயதே குறித்து அறிய ஆவலாக இருக்கிறேன்.

அமீர்கானை சந்திக்க விரும்பும் பில்கேட்ஸ்


                 


என்னதான் அறிவியல் வளர்ந்தாலும், மக்கள் சில விடயங்களை தவறாக புரிந்து கொண்டுள்ளனர்.
வைரம்
வைரம் என்பது மிக உயர்ந்த விலையுள்ள ஆபரணம் ஆகும் . இது எங்கிருந்து கிடைக்கிறது என்று தெரியுமா, ஆம் பூமிக்கு அடியில் புதைந்துள்ள இறுகிப்போன நிலக்கரியில் இருந்து தான் இந்த அரிய வகை வைரம் நமக்கு கிடைக்கிறது.
ஆனால் இது எந்த ஆழத்திலிருந்து கிடைக்கிறது என்பது எத்தைனை பேருக்கு தெரியும்.
அனைவரும் இது பூமிக்கு அடியில் 2 மையில் தொலைவில் கிடைக்கும் என்று கருதியிருப்பார்கள்.
ஆனால் பூமிக்கு அடியில் 90 மையில் தொலைவில் தான் இந்த வைரம் இருக்கும்.
வௌவால்
வௌவால் ஒரு வித்தியாசமான உயிரினம், இவைகளுக்கு கண்கள் இல்லை என்பது உண்மைதான்.
ஆனால் இந்த உரினத்தால் பார்க்கவும் முடியும் . இவைகள் தங்கள் மீஒலி எனப்படும் சத்தத்தை எழுப்பி அதன் மூலம் தனக்கு எதிரில் என்ன பொருள்கள் இருக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ளும் தன்மை கொண்டது.
சுத்தமான தண்ணீர்
சுத்தமான தண்ணீரில் அவ்வளவாக மின்சாரம்பாயாது. ஆனால் தண்ணீரில் நின்று மின்சாரக் கம்பியய் பிடித்தால் மின்சாரம் பய்கிறதே அது ஏன் என்று கேட்கலாம்.
பொதுவாக தண்ணீரில் பல வகையான மினரல்கள் மற்றும் அழுக்குகள் படிந்திருப்பதால் அதில் மின்சாரம் பாய்கிறது.
ஆனால் சுத்தமான நீரில் இப்படிப்பட்ட தாதுக்கள் இல்லாதிருப்பதால் மின்சாரம் பாய்வதில்லை.
மருக்கள்
மனிதனின் மருக்கள் உருவாகக் காரணம் தவளைகள் மற்றும் தேரைகள் என்று பலரும் கருதுகின்றனர் இது தவறான கூற்றாகும்.
இதற்கு காரணம் தேரைகள் அல்ல, மனிதர்கள் தான், மருக்கள் இருக்கின்ற ஒருவரிடம் கைகளைக் குலுக்கினால் இவ்வாறான மருக்கள் தோன்றும் என்று அறிவியல் அறிஞர்கள் பலர் கூறியுள்ளார்கள்.
தீக்கோழி
தீக்கோழியை யாராவது அச்சுறுத்தினால் அவற்றின் தலையை மணலில் புதைத்துக்கொள்ளும் என்று சிலர் கூறுவார்கள்.
ஆனால் அவற்றினை அச்சுறுத்தினால் அவைகள் இறந்தவைகளைப் போல செயல்பட்டு தப்பிக்க முயலுமாம்.
மனித இரத்தம்
மனிதன் இறந்த பின்பு மனித இரத்தம் பார்ப்பதற்க்கு நீலமாகவோ அல்ல அடர்ந்த சிவப்பு நிறமாகவோ இருக்காது.
ஆனால் தோலின் வழியாக பார்த்தால் இரத்தமானது எப்பொழுதும் நீல நிறமாகவே காட்சியளிக்கும்.

தவறாக புரிந்து கொண்டுள்ள ஏழு அறிவியல் உண்மைகள்,,,

logo-googleஒருவரது இறப்புக்குப் பின் சம்பந்தப்பட்டவரின் தகவல்களை அழித்திடும் ‘புதிய’ வசதியை ஜி-மெயில், கூகுள் ப்ளஸ் உள்ளிட்ட சேவைகளில் ஏற்படுத்தி, இணையத் தொழில்நுட்ப உலகில் பரபரக்க வைத்திருக்கிறது கூகுள்.
ஒரு கணக்கைச் செயலிழக்க வைப்பதற்கான தேதி குறிக்கும் உணர்வுப்பூர்வமான விஷயத்தை கூகுள் நிறுவனம் செயல்படுத்தி இருக்கிறது. இப்படி ஒரு வசதியை ஏற்படுத்திய முதல் முன்னணி நிறுவனம் என்ற சிறப்புக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறது கூகுள் நிறுவனம்.
தன் வாழ்நாளுக்குப் பிறகு, தன்னுடைய மெயில் அக்கவுண்ட், சமூக வலைத்தளப் பக்கம் மற்றும் அவற்றில் உள்ள டேட்டாக்கள் என்ன ஆகும் என்று இணையவாசிகள் பலரும் யோசிப்பது உண்டு. அந்த டேட்டாக்களை அழித்துவிடுவதற்கான வசதியைத்தான் கூகுள் இப்போது செய்திருக்கிறது.
இதற்கு இரண்டு விதமான வாய்ப்புகள் தரப்பட்டுள்ளது. ஒரு பயனாளி தனது அக்கவுண்டை முழுமையாக டெலிட் செய்யும் தேதியை தேர்ந்தெடுத்துக்கொள்வது என்பது முதல் வாய்ப்பு. அல்லது, தனக்கு நம்பகமான ஒரு நபரை முன்கூட்டியே பரிந்துரைத்து, தன் மறைவுக்குப் பிறகு அந்த நபரால் தனது அக்கவுண்டை டெலிட் செய்துவிடுவது இரண்டாவது வாய்ப்பு.
ஒரு பயனாளியின் டேட்டாக்கள் எப்போதும் ரகசியமாகப் பாதுகாப்பதற்கு, இந்தப் புதிய வசதி வழிவகுக்கும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுவரைத் தயக்கம் காட்டி வந்த ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட முன்னணி சமூக வலைத்தளங்களும், கூகுளின் இந்தப் புதிய வசதிக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து, தனது முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூகுளின் ‘தேதி குறித்தல்’ தொடர்பான வசதி பற்றி முழுமையாக அறிய – http://googlepublicpolicy.blogspot.co.uk/2013/04/plan-your-digital-afterlife-with.html

இறப்புக்குப் பின் தகவல்களை அழிக்கும் கூகுளின் புதிய வசதி!

            

முதற்தர இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனமான சம்சுங் ஆனது டேப்லட் விற்பனையில் சாதனை நிகழ்த்தியுள்ளது.
அதாவது 2013ம் ஆண்டில் 40 மில்லியனிற்கும் அதிகமான டேப்லட்களை விற்றுத்தீர்த்துள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றும் குறைந்த விலையில் காணப்படும் Galaxy Note 10.1 என்ற டேப்லட்டே அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டதாக கொரிய நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
முதலாவது காலாண்டில் 9.1 மில்லியன் டேப்லட்களும், இரண்டாவது காலாண்டில் 8.4 மில்லியன் டேப்லட்களும், மூன்றாவது காலாண்டில் 10.5 மில்லியன் டேப்லட்களும் இறுதிக் காலாண்டில் 12 மில்லியன் டேப்லட்களும் விற்கப்பட்டுள்ளன.

டேப்லட் விற்பனையில் சாதனை படைத்தது சம்சுங்...

mobiles* மொபைல் போனுக்கு முதல் எதிரி ஈரம். எனவே தண்ணீர், வியர்வை அதனுள் செல்லாமல் பாதுகாக்கவும்.
* ஒருவரின் மொபைல் போனை எடுத்து, அவருக்கு வந்த செய்திகள், அழைப்புகளைப் பார்ப்பது அநாகரிகமான செயல்.
* பலர் கூடும் பொது இடங்களில், வைப்ரேஷன் மட்டும் வைத்து இயக்கவும். உங்கள் அழைப்புக்கான டோன் ஒலித்து, பிறரின் கவனத்தை ஈர்ப்பதனைத் தவிர்த்திடுங்கள்.
* செல்லமாகப் பேசுவது, கோபத்தில் திட்டுவது போன்ற பேச்சுக்களை தனியிடம் சென்று வைத்துக் கொள்ளுங்கள்.
* திரையில் உள்ள லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே (LCD) மீது அழுத்தத்தைப் பிரயோகித்தால் திரை கெட்டுவிட வாய்ப்பு உள்ளது. எனவே பாக்கெட்டில் போனை வைத்திடுகையில் ஏதேனும் கூர்மையான அல்லது பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பொருள் மொபைல் போனுடன் உரசிக் கொண்டிருக்கிறதா என்பதைக் கவனித்துச் செயல்படவும். போம் கவர்கள் அல்லது பிளாஸ்டிக் கவர்கள் இந்த வகையில் பாதுகாப்பு தரலாம்.

மொபைல் டிப்ஸ்

facebook-owner
இன்றைய சமூகவலைதள உலகின் ராஜா என்றழைக்கப்படும் ஃபேஸ்புக் இணையதளம் 1 பில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.
இன்று இணையத்தை பயன்படுத்தும் பெரும்பாலானோருக்கு தெரிந்த இவ்வளவு பெரிய சமூக வலைதளமான ஃபேஸ்புக் உருவான கதையை பார்க்கலாம்.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர் மார்க் ஸுக்கர்பெர்க் (Mark Zuckerberg)என்பவரால் யதேச்சையாக உருவாக்கப்பட்டதுதான் இந்த ஃபேஸ்புக்(FACEBOOK).
தன்னை கைவிட்டுப்போன காதலியின் நினைவிலிருந்து மீள்வது எப்படி என்று ஒரு நாள் இரவு யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் இந்த எண்ணம் அவருக்கு வந்தது.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு வழக்கம் உண்டு. அங்கு பயிலும் மாணவர்கள், வேலை செய்யும் ஆசிரியர்கள் தொடர்பான விவரங்கள் அச்சிடப்பட்ட புத்தகம் ஒன்றை மாணவர்களுக்கு அந்தப் பல்கலைக்கழக நிர்வாகம் கொடுத்து வந்தது.
அந்தப் புத்தகத்தை மாணவர்கள் ஃபேஸ்புக் என்று குறிப்பிடுவது வழக்கம். இந்த ஐடியாவைத்தான் ஸுக்கர்பெர்க் எடுத்துக் கொண்டார். தனது சக மாணவர்களான எட்வர் டோ சவேரின், டஸ்டின் மொஸ்கோவிட்ஜ், கிறிஸ் ஹ்யூக்ஸ் ஆகியோரை சேர்த்துக் கொண்டு இணையதளம் ஒன்றை அவர் உருவாக்கினார்.
முதலில் ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமே அதில் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
பின்னர் மற்ற கல்லூரி மாணவர்களும் அனுமதிக்கப்பட்டனர். அதற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
தற்போதோ 13 வயதுக்கும் மேற்பட்ட எவரும் இதில் உறுப்பினராக முடியும். அவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் முகவரி மட்டும் இருந்தால் போதும்.
2005ம் ஆண்டு காதலில் மனம் உடைந்த இளைஞனால் விளையாட்டாக உருவாக்கப்பட்ட இந்த இணையதளம், தற்போது அவனை உலகின் முக்கியமான பணக்காரர்களில் ஒருவனாக ஆக்கி இருக்கிறது.
அது நம் காலத்தின் (காதலின்?) அதிசயம் என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் ஆறே வருடங்களில் இந்த பிரமாண்ட அதிசயம் நடந்திருக்கிறது.
இன்று இந்த இணைய தளத்தை வாங்குவதற்கு உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் எல்லாம் போட்டி போடு கின்றன. வணிகரீதியில் மதிப்பு வாய்ந்த எம்.டி.வி. நிறுவனத்துக்கு இணையாக வாங்குவதற்கு போட்டி போடப்படும் நிறுவனங்களில் ஒன்றாக ஃபேஸ்புக் இருக்கிறது. இதில் உலகப்புகழ் பெற்ற மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முதலீடு செய்திருக்கிறது.
இவ்வளவுக்கும் ஃபேஸ்புக் லாபம் குவிக்கும் நிறுவனமாக இல்லை. 2009ம் ஆண்டில்தான் முதன்முதலாக அது லாபம் ஈட்டும் நிறுவனமாக மாறியது. ஆனால், அதற்கு முன்பிருந்தே இவ்வளவு போட்டி.
தற்போது ஃபேஸ்புக் கைபேசி தயாரிப்பிலும் களமிறங்கியுள்ளது.
மக்கள் ஏன் விரும்புகிறார்கள்?
ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை மக்கள் ஏன் விரும்புகிறார்கள்? மனித உறவுகள் பலவீனம் அடைந்து வரும் இன்றைய உலகில் மனிதர்கள் தீவுகளாக மாறிக்கொண்டு இருக்கிறார்கள்.
பழைய காலத்தைப்போல குடும்பம் என்பது வலுவான அமைப்பாக தற்போது இல்லை. குடும்ப உறவுகள் சிதைந்து கொண்டிருக்கின்றன. இதனால், தனித்து விடப்பட்ட மனிதர்கள் உறவுகளைத் தேடி அலைகிறார்கள்.
உறவின் பொறுப்புகளை எடுத்துக்கொள்ளாமல், பயன்களை மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிற நவீன மனிதர்களுக்குக் கிடைத்திருக்கும் வரப்பிரசாதம்தான் இத்தகைய இணையதளங்கள்.
இவற்றில் நீங்கள் உங்களது உணர்வுகளை நினைத்த நேரத்தில், நினைத்த விதமாக வெளிப்படுத்தலாம். புதிய நண்பர்களைத் தேடிக்கொள்ளலாம். அவர்களோடு அரட்டை அடிக்கலாம், ஆவேசப்படலாம். புகைப் படங்களைப் பரிமாறிக் கொள்ளலாம்.

FACEBOOK உருவான சுவாரஸ்யமான கதை

http://www.prlog.org/10034528-latest-dell-xps-laptop-computer.jpg
Desktop Computer மட்டுமே பயன்படுத்தும் பல பேருக்கு எப்படியாவது ஒரு லேட்ப்டாப் வாங்கிவிடவேண்டும் என்று நீண்ட கால கனவு ஒன்று இருக்கத்தான் செய்யும்.
அப்படி கனவு காணும் பலருக்கு பணம் பட்ஜெட் பற்றாக்குறை பிரச்சனையால் லேப் டாப் வாங்க முடியாமல் கால நேரம் தள்ளிபோக்கொண்டிருக்கும்.
ஆனால் சிலருக்கு ஒரு லேப்டாப் வாங்கும் அளவுக்கு பணம் இருந்தும் நம்மால் ஒரு தரமான லேப்டாப்பை பார்த்து வாங்க முடியாது அப்படி வாங்க வேண்டுமென்றால் நல்ல கணினி அறிவு உள்ள ஒரு நண்பர் நம்முடன் ஒன்றாக வரவேண்டுமே அவரை நாம் எங்கு தேடி பிடிப்பது யாரை நம்புவது என்று தெரியாமல் லேப்டாப் வாங்கும் படலம் தள்ளிப்போய்க்கொண்டிருக்கும்.
இனி கவலை வேண்டாம் இந்த பதிவு உங்களுக்காகத்தான். நீங்களே தனியாக தைரியமாக சென்று ஒரு தரமான லேப்டாப்பை உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி வாங்கி வரலாம்.
லேப்டாப் வாங்க வேண்டும் என்றால் முதலில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரியான லேப்டாப் பிராண்ட் எதனை வாங்குவதென்று தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
சிறந்த பிராண்ட் லேப்டாப் வாங்கவேண்டுமென்றால் முதலில் இங்கு கொடுப்பட்டுள்ள சிறந்த பிராண்டில் எந்த பிராண்டை வாங்கவேண்டுமென்று முடிவுசெய்துகொள்ளுங்கள்…..
SONY
HP
DELL
SAMSUNG
THOSHIBA
LENOVA
ACER
சரி இனி நீங்கள் வாங்கப்போகும் இந்த பிராண்ட் லேப்டாப்புகளில் எந்தெந்த விசயத்தை கவனமாக பார்க்கவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்…
Laptop Configuration
Processor
Processor என்பது அனைத்து லேப்டாப் Mother Board களிலும் மிக முக்கியமாக பொருத்தக்கூடிய சதுரமான ஒரு சிப். இந்த Processor இன்றைய மார்கெட்டில் அதிக தரம் உள்ளதாக விற்பனையில் உள்ளது Intel Core i7. அடுத்ததாக Intel Core i5 அடுத்ததாக Intel Core i3 என்பதாகும்.
எனவே நீங்கள் விலை கூடுதலான ஒரு லேப்டாப்பை வாங்க வேண்டுமென்றால் முதலில் நல்ல ஒரு பிராண்டை தேர்ந்தெடுத்துக்கொண்டு இந்த Processor ஐ
Intel Core i7
Intel Core i5
Intel Core i3
என்ற வரிசையில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.
இந்த மூன்று வகையான Core வரிசையில் உள்ள Processor களில் ஒன்று உங்கள் பட்ஜெட்டுக்கு விலை கூடுதல் என்று நீங்கள் நினைத்தால் இவைகளை விட தரம் குறைந்த Intel Core 2 Duo அல்லது Intel Dual Core என்ற Processor ஐ நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
இதை விட தரம் குறைவான Processor ஐ நீங்கள் தேர்ந்தெடுத்தால் அது இன்றைய நவீன டெக்னாலஜிக்கு பொருத்தமானதாக இருக்காது.
Intel® Core™ i7-640M Processor 2.80 GHz
அடுத்ததாக இங்கு மேலே காண்பதுபோல் இந்த Processor உடன் 2.80 GHz என்று குறிப்பிடு இருப்பதை போல நீங்கள் வாங்கும் லேப்டாப்பிலும் ஒரு நம்பருடன் GHz என்று குறிப்பிட்டு இருக்கும். இந்த நம்பரையும் நீங்கள் கவணமாக பார்க்கவேண்டியது மிக அவசியம். ஏனென்றால் இந்த 2.80 GHz என்பதை விட 2.00 GHz அல்லது 1.60 GHz என்பதன் Processor வேகம் மிக குறைவானது. 2.00 GHz லேப்டாப் மாடலை விட 2.80 GHz லேப்டாப் மாடலின் விலை குறைவானதாக இருக்குமேயானால் வேறு எந்த டெக்னாலஜி இதில் இல்லை என பார்க்கவேண்டியது அவசியம்.
RAM
அடுத்ததாக மிக முக்கியமான விசயம் RAM. நீங்கள் கம்ப்யூட்டரை திறந்த பிறகு ஒன்றுக்கு மேற்பட்ட புரோகிராம்களை பயன்படுத்தும்பொழுது கம்ப்யூட்டரின் வேகம் குறைந்துவிடாமல் பாதுகாப்பதில் இந்த RAM மிக முக்கிய பங்கு வகுக்கிறது. அதனால் இன்றைய அட்வாண்ஸ் புரோகிராம்களை பயன்படுத்த நினைக்கும் நீங்கள் குறைந்தது 2 GB RAM இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள். (4 GB RAM இருந்தால் சிறந்தது) இதில் இன்னொரு முக்கியமான விசயம் DDR3 என்ற அட்வாண்ஸ் டெக்னாலஜி கொண்ட RAM நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் பொருத்தப்பட்டுள்ளதா என கேளுங்கள். ( பொதுவாக விலை குறைந்த லேப்டாப் வாங்கும்பொழுது அதில் DDR2 RAM மட்டுமே பயன்படுத்தப்படுகிறது).
HARD DISK
அடுத்தாக நீங்கள் கவனிக்கவேண்டியது இந்த ஹார்ட் டிஸ்க். பொதுவாக கம்ப்யூட்டரை பற்றிய விபரங்கள் அதிகம் அறியாதவர்கள் கம்ப்யூட்டரின் இயங்கும் வேகம் அதில் பொருத்தப்படும் ஹார்ட் டிஸ்கின் அளவை பொருத்துதான் உள்ளது என தவறாக என்னுகிறார்கள். கம்ப்யூட்டர் இயங்கும் வேகத்திற்கும் இந்த ஹார்ட் டிஸ்கின் அளவுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. ஆனால் இன்றைய மென்பொருள்களின் அதி வேக வளர்ச்சியின் காரணமாக நாம் ஹார்ட் டிஸ்க் அளவிலும் கொஞ்சம் கவணம் செலுத்த வேண்டி உள்ளது.
நீங்கள் கோரல்ட்ரா, போட்டோசாப் போன்ற போட்டோ டிசைனிங் மென்பொருள் மற்றும் வீடியோ டிசைன் செய்யும் மென்பொருள்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துபவராக இருந்தால் மற்றும் உங்களுக்கு விருப்பமான ஆடியோ வீடியோ பைல்களை உங்கள் லேப்டாப்பில் காப்பி செய்து வைத்து பயன்படுத்தும் பழக்கம் உள்ளவராக இருந்தால் உங்கள் ஹார்ட் டிஸ்கின் அளவு குறைந்தது 320 GB இருக்கவெண்டும்.
ஆடியோ வீடியோ கம்ப்யூட்டரில் காப்பி செய்ய தேவை இல்லை என்றால் 160 GB போதுமானது.
எனக்கு எந்த தேவையும் இல்லை மைக்ரோசாப் ஆபீஸ் மட்டும் தான் பயன்படுத்துவேன் அடுத்ததாக நான் இண்டெர்நெட் பயன்படுத்துவேன் அதோடு யூடுப் பயன்படுத்துவேன் என்று நீங்கள் சொல்பவராக இருந்தால் உங்களுக்கு 80 GB ஹார்ட் டிஸ்க் என்பதே மிக அதிகம்.
பொதுவாக இந்த ஹார்ட் டிஸ்குகளில் நீங்கள் பார்க்கவேண்டிய இன்னொரு விசயம் அதன் வேகம். SPEED 7200 RPM அல்லது SPEED 5400 RPM போன்றவை மிக சிறந்தது. இதனை விட நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் ஹார்ட் டிஸ்க் ஸ்பீடு குறைந்ததாக இருந்தால் அங்கு இருப்பதில் எது கூடுதலாக RPM என்பதை தேர்ந்தெடுங்கள்.
DVD DRIVE
நீங்கள் மேலே குறிப்பிட்டது போன்று பிராண்டட் லேப்டாப் வாங்கும்பொழுது DVD டிரைவை பற்றி அதிக கவணம் எடுக்க தேவை இல்லை. ஏனென்றால் பிராண்டட் லேப்டாப்புகளில் அதற்கு பொருத்தமான தரமிக்க DVD டிரைவ் பொருத்தி இருப்பார்கள். இந்த டிரைவில் SuperDrive 8x(DVDR DL/DVDRW/CD-RW) என்பது போன்ற குறிப்பு இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள்.
GRAPHIC CARD
பொதுவாக விலை குறைந்த லேப்டாப் அல்லது டிஸ்கவுண்ட் விலைகளில் கிடைக்கும் லேப்டாப்புகளில் இந்த கிரபிக் கார்டு இணைந்திருப்பது இல்லை. கீராபிக் கார்டு இணைக்கப்பட்டுள்ளது என்று அந்த லேப்டாப் குறிப்பில் எழுதப்பட்டிருந்தால் அது மற்ற லேப்டாப்பை விட விலை கூடுதலாகவே இருக்கும்.
சரி இந்த கிராபிக் கார்டு இணைந்திருப்பதால் நமக்கு என்ன பயன் ?
நீங்கள் வீடியோ அனிமேசன் மற்றும் போட்டோசாப், கோரல்ட்ரா டிசைனிங் செய்பவராக இருந்தால் மற்றும் வீடியோ கேம் அதிகம் பயன்படுத்துபவராக இருந்தால் உங்களுடைய லேப்டாப்பில் கிராபிக் கார்டு இணைந்திருப்பது மிக அவசியமான ஒன்று. அல்லது உங்கள் லேப்டாப்பில் அதிக தெளிவுமிக்க வீடியோ (HD High Definition Video) படங்களை பார்க்கவேண்டும் மற்றும் ஸ்டீரியோ இசையுடன் தெளிவான ஆடியோ பாடல்களை கேட்கவேண்டும் என்ற ஆர்வம் கொண்டவராக நீங்கள் இருந்தால் இந்த கிராபிக் கார்டு இணைந்துள்ள லேப்டாப் நீங்கள் வாங்குவது சிறந்தது.
இந்த கிராபிக் கார்டு இணைந்த லேப்டாப்பை நீங்கள் வாங்கும்பொழுது இன்னொரு முக்கியமான விசயத்தையும் பார்க்கவேண்டியது அவசியம். அதாவது இந்த கிராபிக் கார்டு Dedicated Graphic அல்லது Integrated graphics (shared memory) என இரண்டு வகைகளில் லேப்டாப்பில் பொருத்தப்படுகிறது.
இதில் Dedicated Graphic என நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் எழுதப்பட்டிருந்தால் இதுவே சிறந்தது.
இந்த Dedicated Graphic Card உங்கள் லேப்டாப்பில் இணைக்கப்பட்டிருந்தால் நீங்கள் அதிக கெபாசிடி உள்ள ஒரு வீடியோ கேம் விளையாடும் நேரத்தில் அந்த வீடியோ கேமுக்கு தேவையான மெமரியை இந்த Dedicated Graphic Card கொடுப்பதால் கம்ப்யூட்டர் எந்த விதத்திலும் வேகம் குறைவது இல்லை. கம்ப்யூட்டர் மெமரி அப்படியே இருக்கும். இதனால் வீடியோ கேம் இயங்குவதில் தடை எதுவும் ஏற்படாது.
ஆனால் Integrated graphics (shared memory) என்று குறிப்பிட்டுள்ள லேப்டாப் நீங்கள் வாங்கினால் இந்த வீடியோ மெமரி உங்கள் கம்ப்யூட்டரின் வேகத்தில் அதிக இடத்தை எடுத்துக்கொள்வதால் அதிக கெபாசிடி உள்ள வீடியோ கேம் விளையாடும்பொழுது கம்ப்யூட்டர் மெமரி குறைந்து கம்ப்யூட்டர் எரர் ஆக வாய்ப்பு இருக்கிறது.
அதனால் நீங்கள் 3D வீடியோ கேம் போன்ற அதிக கெபாசிடி உள்ள கிராபிக் பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் லேப்டாப்பில் Dedicated Graphic Card இணைந்துள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள்.
போட்டோசாப், கோரல்ட்ரா மற்றும் சின்ன சின்ன கிராபில் சாப்ட்வேர்கள் பயன்படுத்துபவராக இருந்தால் Integrated graphics (shared memory) உள்ள லேப்டாப் வாங்கினால் போதும்.
Operating System ( OS)
விலை அதிகம் உள்ள லேப்டாப் வாங்க நினைக்கும் நீங்கள் இந்த ஆபரேடிங் சிஸ்டத்தில் கவனக்குறைவாக இருந்துவிடாதீர்கள். ஏனென்றால் எல்லாம் சரியாக இருந்து ஆபரேடிங் சிஸ்டம் சரி இல்லை என்றால் லேப்டாப் பயன்படுத்துவதே சிரமம் என்று ஆகிவிடும்.
இப்பொழுதெல்லாம் அட்வான்ஸ் லேப்டாப்களில் Widows 7 அல்லது Windows 8 ஆபரேடிங்க் சிஸ்டம்தான் இன்ஸ்டால் செய்து விற்பனை செய்கிறார்கள். ஆனால் இந்த Windows 8 ல் பல வித்தியாசம் இருக்கிறது.
Windows 7 Ultimate
Windows 7 Professional
Windows 7 Home Premium
Windows 7 Home Basic
Windows 7 Starter version
இப்படி விண்டோஸ் 7 வெரிசனில் பல வகை உண்டு.
இதில் Windows 7 Ultimate மற்றும் Windows 7 Professional இவை இரண்டும் மிகச்சிறந்தது என்றாலும் இந்த வெரிசன் இணைக்கப்பட்ட லேப்டாப்புகள் மற்றவற்றை விட விலை மிக அதிகமாக இருக்கலாம். இருப்பினும் இதற்கு அடுத்ததாக மிக சிறப்பாக செயல்படக்கூடிய Windows 7 Home Premium வெரிசனையாவது நாம் வாங்குவது மிக சிறந்தது. மேலும் இதில் 64 Bit என்ற வெரிசனை தேர்ந்தெடுங்கள். Windows 7 Home Premium 32 Bit ஐ விட Windows 7 Home Premium 64 Bit கிராபிக் மென்பொருள் பயனடுத்துவதற்கு மிக சிறந்தது.
Widows 7 Home Basic மற்றும் Windows 7 starter Version இவை இரண்டிலும் நீங்கள் எந்த வித நவீன மென்பொருளையும் ( Software) சிறப்புடன் பயன்படுத்த முடியாது.
அல்லது தற்போது வந்துள்ள…
Windows 8 பதிந்த லேப்டாப்பை வாங்குங்கள்.
அடுத்ததாக புதிய வகை லேப்டாப்புகளில் மைக் வெப் கேம் அனைத்தும் இணைந்தேதான் வருகிறது. இருப்பினும் இவை உள்ளனவா என பார்த்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் உங்கள் லேப்டாப்பை LCD அல்லது LED T.V யில் HDMI வீடியோ கேபிள் மூலம் இணைத்து பயன்படுத்த விரும்பினால் நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் HDMI Port உள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள்.Memory Card Slot, Front Mic, Audio, SRS Speaker System இவை இணைந்ததா என பார்த்துக்கொள்ளுங்கள்.
இது தவிர நீங்கள் வாங்கும் லேப்டாபுக்கு இலவசமாக கிடைக்கும் மவுஸ் மற்றும் லேப்டாப் பேக் கிடைக்கிறதா என கேட்டுக்கொள்ளுங்கள்.

லேப்டாப் வாங்க போறிங்களா.? அப்ப இதை படிங்க…!

http://www.tamileditor.com/wp-content/uploads/2013/06/parthieeban-512x315.jpg
உலகளாவிய‌ ரீதியில் நவீன கைத் தொலைபேசி, சிலேடை Smart Phone and Tablets போன்றவற்றில் இயங்கும் மென்பொருள் விளையாட்டுகளின் சந்தை இந்த ஆண்டில் 12 பில்லியன் டொலர்களைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
நவீன உற்பத்தி முறைகளினால் மூளைசாலிக் கருவிகளின் விலையில் வீழ்ச்சி, அதே நேரம் அவற்றின் இயக்க வேகம் அதிகரிக்க, இவற்றைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. இளம் சந்ததியின் கைகளில் இணைபிரியா நன்பனாக இவை போய்ச் சேர்ந்துள்ளன.
இத்தகைய சூழ்நிலையில் இந்தக் கருவிகளில் இயங்கும் விளையாட்டு மென்பொருட்களின் சந்தை நிச்சயமாக ஒரு வளரும் சந்தையாகும்.
பல பில்லியன் டொலர் மதிப்புள்ள இந்த தொழிற்துறையில் நம்மவரின் பங்களிப்பு எந்த அளவில் உள்ளது ? நம் இளம் சந்ததி இந்த மென்பொருட்களைத் தயாரிப்பதில் போதிய அறிவூட்டலைப் பெற்றுள்ளதா ? அல்லது நம் சமுதாயம் தொழில்நுட்பம் வளர்ந்து எட்டாத்தொலைவை அடையும் வரைத் தயங்கி நிற்கப் போகிறதா ? இந்தக் கேள்விகள் நிச்சயம் கேட்கப் பட வேண்டியவை.
வர்த்தக மென்பொருட்கள் போலல்லாது விளையாட்டு மென்பொருட்கள் தொழில்நுட்ப ரீதியில் சிக்கல் நிறைந்தவை. அவற்றின் எல்லைகள் வரையறைக்கு உட்பட்டவை அல்ல. விளையாட்டு மென்பொருட்களில் பயன்படும் பல தொழில்நுட்பங்களும் தந்திரோபாயங்களும் இன்று அமெரிக்க இராணுவம் ஆப்கானிஸ்தானில் டலிபான்களை மடக்க பயன்படுத்துகின்றது. இத்தகைய மென்பொருட்களை வடிவமைப்பவர்களின் திறமைக்கு இது ஒரு சான்று.
இந்தவகையில் ஜேர்மனியில் வளர்ந்துவரும் 16 வயதுடைய சிறுவர்களான ஈழத்துச் சிறுவன் பார்த்திபன் ரமேஷ் வவுனியனும் இந்தியா ஜெய்ப்பூரைச் சேர்ந்த அபே பன்சால் இருவரும் இணைந்து கூகிள் அன்ட்ரொய்ட்டில் இயங்கும் விளையாட்டு மென்பொருளை உருவாக்கி சாதித்துள்ளார்கள். இவர்களுடைய சாதனை நம் இளம் சந்ததியை அடைந்து அவர்களுக்கு ஓர் ஆர்வத்தையும் அவர்களின் அறிவியல் வாசலையும் திறந்து வைக்க வேண்டும்.
இன்று சிறந்து விளங்கும் மென்பொருள் தொழிநுட்பவியலார்கள் ஏதோ ஒரு கட்டத்தில் விளையாட்டு மென்பொருட்களை உருவாக்கியவர்களாகவே இருப்பார்கள். விளையாடு மென்பொருளை உருவாக்கும்போது அவர்களுக்கு ஆர்வத்தோடு தொழில்நுட்ப அறிவும், மூளையோடு சேர்ந்த நுண் அறிவும் கூடவே வளர்கின்றது.
அபே பன்சாலின் பெற்றோர்களான ரமேஷ் அகர்வால் , சீமா அகர்வால் இந்தியா ஜெய்பூரைச் சேர்ந்தவர்கள். பார்த்திபன் ரமேஷ் வவுனியனின் பெற்றோர்களான ரமேஷ் வவுனியன் ,சாந்தி ஈழத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இன்னும் பல சாதனைகளைப் படைக்க பார்த்திபன் ரமேஷ் அபே பன்சால் இருவருக்கும் வாழ்த்துக்கள்.
பார்த்திபன் ரமேஷ் , அபே பன்சால் உருவாக்கிய பரஷூட் பையன் விளையாட்டை தரவிறக்கம் செய்ய: play.google.com

பார்த்திபன் அபே உருவாக்கிய கூகிள் அன்ரொய்ட் விளையாட்டு மென்பொருள் சாதனை

Gmail_logo
இன்றைய உலகில் கணணி பயனாளர்கள் பெரும்பாலும் ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கை பயன்படுத்துகின்றனர்.
அந்த கணக்கை மட்டுமே நம்பி இருப்போர் பெரும்பாலான எண்ணிக்கையில் உள்ளனர். மேலும் சிலர் அவ்வப்போது மின்னஞ்சல் கணக்கை பயன்படுத்துகின்றனர்.
இவர்களின் கணக்கு ஒரு சில நேரங்களில் முடங்கி போய்விடும். அந்த நேரத்தில் அவர்களின் மின்னஞ்சல் கணக்கை பயன்படுத்துவதற்கு மூன்று வழிகளில் உள்ளது.
அவை Standard, HTML and Mobile. Standard வகையில் ஏதேனும் பிழை இருப்பின் மற்ற இரண்டு வகைகள் இயங்கிக் கொண்டு தான் இருக்கும்.
பெரும்பாலான நேரங்களில் Standard வகை தான் சிக்கலில் மாட்டிக் கொண்டு நமக்குக் கிடைக்காமல் இருக்கும். எனவே அந்த வேளையில் மற்ற இரண்டு வழிகளில் மின்னஞ்சலை பயன்படுத்தலாம்.
HTML வகையில் சென்று பெறுவது முதலில் நீங்கள் இந்த http://mail.google.com/mail/?ui=html இணைப்பிற்கு செல்ல வேண்டும்.
இது ஸ்டாண்டர்ட் வகைக்கு மாற்றானதாக இருக்கும். படங்கள் ஏதுமின்றி மிகவும் சாதாரணத் தோற்றத்தில் கிடைக்கும். இந்த இணைய முகவரியை புக்மார்க் செய்து வைத்துக் கொண்டால், Standard வகையில் பிரச்னை ஏற்படும் போது இதனைப் பயன்படுத்தலாம்.
கூகுள் மெயிலின் Mobile பதிப்பு உங்களது கைபேசிகளுக்கானது. இதனை உங்களது கணணியில் பெறுவதற்கு உங்கள் பிரவுசரின் அட்ரஸ் பாரில் m.gmail.com என டைப் செய்திட வேண்டும்.
ஐபோனுக்கான கூகுள் மெயில் தளத்தினைப் பெறுவதற்கு http://mail.google.com/mail/x/gdlakb/gp/என்ற முகவரியினை டைப் செய்து ஜிமெயிலை பெறலாம்.

ஜிமெயில் கணக்கு முடங்கி போனால் செய்ய வேண்டிய நடவடிக்கைகள்

காதலை எத்தனையோ விதங்களில் வெளிப்படுத்தலாம். அமெரிக்க வாலிபர் ஷான் தனது காதலை வீடியோ கேம் மூலம் வெளிப்படுத்தி, காதலி மனதையும் கவர்ந்து ஒட்டுமொத்த இணையவாசிகளையும் வியக்க வைத்திருக்கிறார்.செல்போன் பிரியர்கள் டாட்ஸ் கேமை (DOTS game) அறிந்திருக்கலாம். ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் விளையாடக் கூடிய கேமில் புள்ளிகள் தான் எல்லாம். இதில் உள்ள வண்ண புள்ளிகளை ஒன்றாக இணைக்க வேண்டும். 60 நொடிகளுக்குள் எத்தனை வண்ண புள்ளிகளை இணைக்க முடிகிறது என்பது தான் இந்த விளையாட்டின் சவால். ஆர்வத்தை தூண்டி அடிமையாக்கி விடும் கேம் என்று சொல்லப்படும் டாட்ஸ் விளையாட்டை ட்விட்டர் மற்றும் பேஸ்புக் மூலம் நண்பர்களை போட்டிக்கு அழைத்தும் விளையாடலாம்.

                       

இந்த விளையாட்டை நேசிக்கும் எத்தனையோ பேரில் அமெரிக்க இளம்பெண் கேசியும் ஒருவர். கேசி வேறு யாருமல்ல, நம்ம ஷானின் தோழி. கேசியை காதலித்து வந்த ஷான் அவரை மணம் செய்து கொள்ள விரும்பினார். தனது காதலை அவரிடம் சொல்லி விடவும் தீர்மானித்தார். ஆனால் வழக்கமான முறையில் இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக தனது காதலை சொல்ல விரும்பினார். இதற்கு அவர் தேர்வு செய்த வழி தான் டாட்ஸ் கேம். கேசி, டாட்ஸ் விளையாட்டு பிரியை என்பதால் அந்த விளையாட்டு வடிவிலேயே காதலை தெரிவித்தால் அவர் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவார் என நம்பினார்.
இந்த நம்பிகையோடு டாட்ஸ் விளையாட்டை உருவாக்கிய நிறுவனத்தை தொடர்பு கொண்டு, தன் காதலை சொல்லக்கூடிய வகையில் டாட்ஸ் கேமின் விஷேச வடிவை உருவாக்கித்தர முடியுமா என்று கேட்டிருக்கிறார். விளையாட்டின் முடிவில், என்னை மணந்து கொள்ள சம்மதமா? என்று கேட்கும் வகையில் அமைய வேண்டும் என்று இமெயில் வாயிலாக கோரியிருந்தார். டாட்ஸ் குழுவும் இதற்கு ஒப்புக்கொண்டு சிறப்பு டாட்ஸ் விளையாட்டை உருவாக்கி கொடுத்தது.

ஷானும் காதலியை இரட்டை ஆச்சர்யத்தில் ஆழ்த்தப் போகும் உற்சாகத்தோடு அந்த விளையாட்டை கேசியிடம் ஆட கொடுத்திருக்கிறார். கேசி காத்திருக்கும் ஆச்சர்யம் பற்றி தெரியாமல் டாட்ஸ் கேம் ஆடும் ஆர்வத்தோடு அதை விளையாடத் துவங்கினார். ஆட்டத்தின் இறுதி கட்டத்துக்கு வந்ததும் காதல் வாசகம் வர அவருக்கே ஆனந்த அதிர்ச்சி. அந்த நிமிடம் பார்த்து ஷான் அவர் முன் மண்டியிட்டு காதலை சொல்ல இன்னும் அசந்து போயிருக்கிறார்.ஹும். இது இன்டெர்நெட் கால காதல் கதை.

ஷான் காதலைச் சொன்ன அந்த காட்சியை கான விருப்பமா?
 | |


காதலை சொல்லும் கம்பயூட்டர் கேம்!

goprobo
செல்போன்கள் மற்றும் டாப்லெட்டுகளின் விலைகளை ஒரே இடத்தில் ஒப்பிட்டுப் பார்த்து உங்களுக்கு பிடித்த ஒன்றை தேர்வு செய்து ஆன்லைனில் வாங்க உதவுகிறது கோபுரோபோ. வாடிக்கையாளர் தான் ராஜா.
சந்தையில் உள்ள பொருளை அவர் விலையைப் பற்றிய பயமில்லாமல் தேர்வு செய்யும்போது தான் அவருக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது. அவ்வாறு விலையைப் பற்றிய கவலையில்லாமல் ராஜா போன்று வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்க உதவுகிறது கோபுரோபோ.
இங்கு நீங்கள் செல்போன் மற்றும் டாப்லெட்டுகளின் விலைகளை எளிதில் ஒப்பிட்டுப் பார்க்கலாம். கோபுரோபோ என்பது ஆன்லைனில் பொருட்களின் விலையை ஒப்பிட்டுப் பார்த்து வாங்க உதவும் சர்ச் என்ஜின். நீங்கள் கடை கடையாக ஏறி இறங்கி விலையைக் கேட்டு அதன் பிறகு உங்களுக்கு பிடித்த செல்போனையோ, டாப்லெட்டையோ வாங்கத் தேவையில்லை.
இருந்த இடத்தில் இருந்து கொண்டே கோபுரோபோ மூலம் சாம்சங், ஆப்பிள், நோக்கியா, பிளாக்பெர்ரி, மோட்டோரோலா, மைக்ரோமேக்ஸ் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்களின் செல்போன்கள் மற்றும் டாப்லெட்டுகளின் விலையை ஒப்பிட்டுப் பார்த்து ஆன்லைனிலேயே வாங்கலாம். சிம்பயான், ஆன்ட்ராய்ட், படா ஓஎஸ், 3ஜி மற்றும் ஐஓஎஸ் ஆபரேட்டிங் சிஸ்டமுள்ள செல்போன்களை தேர்வு செய்யலாம்.
செல்போன்கள், டாப்லெட்டுகள், டச் போன்கள், ஆன்ட்ராய்ட் போன்கள், வின்டோஸ் போன்கள் உள்ளிட்டவற்றின் விலையுடன் வாடிக்கையாளரின் விமர்சனம், வீடியோ விமர்சனம், ரேட்டிங் ஆகியவையும் வெளியிடப்பட்டிருக்கும். இது சிறந்த தயாரிப்பை நீங்கள் தேர்வு செய்து வாங்க பெரிதும் உதவும்.
 சுட்டி:-    Goprobo

லேட்டஸ்டா என்ன செல்போன் வந்திருக்கு?: கோபுரோபோ போங்க தெரியும்

சேட்டை செய்த பூனையை பிளாஸ்டிக் ஜாரில் போட்டு அடைத்து தண்டனை கொடுத்த தைவான் பெண் மீது விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பாய்ந்துள்ளது.குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான அபராதமும் ஓராண்டு வரை சிறைத்தண்டனையும் கிடைக்கும்.
                   facebok cat 39
தைவானை சேர்ந்தவர் கிக்கி லின். பீஜிங்கின் டாய்சங் பல்கலைக் கழக மாணவி. சமீபத்தில் இவர் தனது பேஸ்புக்கில் ஒரு படத்தை வெளியிட்டிருந்தார். பூனை ஒன்று பிளாஸ்டிக் ஜாரில் அடைக்கப்பட்டிருந்த படம் அது. சேட்டை செய்ததால் இந்த தண்டனை என விளக்கமும் கொடுத்திருந்தார். இதைப் பார்த்த பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். பலத்த எதிர்ப்பு கிளம்பியதும், Ôஎனக்கு என் செல்ல பூனை மீது கொள்ளை பாசம். அதனால்தான் அதை போகும் இடத்துக்கு எல்லாம் எடுத்துச் செல்வேன்.
4 கிலோ பூனையை பையில் போட்டு எடுத்துச் செல்வது கஷ்டமாக இருந்ததால் ஜாரில் போட்டு வெளியே எடுத்துச் சென்றேன். அது தப்பா…Õ என விளக்கம் கொடுத்தார் லின். பின்னர், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்த லின், மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். போலீசார் லின் வீட்டுக்கு சென்று சோதனை செய்தனர். லின் காட்டிய ஜாரில் காற்று போவதற்காக துளைகள் போடப்பட்டிருந்தது. ஆனால் பேஸ்புக்கில் இருந்த படத்தில் துளைகள் இல்லை.இதையடுத்து அவர் மீது விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பேஸ்புக்கில் பிளாஸ்டிக் ஜாரில் பூனை படம் போட்ட பெண் மீது வழக்கு!

12/30/2013

முன்னணி கணனி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான HP ஆனது கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
6 அங்குலம் அல்லது 7 அங்குல அளவுடைய இக்கைப்பேசியினை சீனா மற்றும் இந்திய போன்ற சில நாடுகளில் மட்டும் விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவற்றின் குறைந்தபட்ட பெறுமதியானது 250 டொலர்கள் வரையில் காணப்படலாம் என ஊகம் வெளியிடப்பட்டுள்ளது.

அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசியை அறிமுகப்படுத்தும் HP

          மைக்ரோசாப்ட்டின் எச்சரிக்கை...!

வர இருக்கும் 2014 ஏப்ரல் மாதத்தில், வர்த்தக ரீதியாக, விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குத் தரப்படும் ஆதரவினை விலக்கிக் கொள்ளப் போவதற்கான இறுதி எச்சரிக்கையினை, மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டில், மைக்ரோசாப்ட் விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வெளியிட்டது. அனைத்து மக்களாலும் பயன்படுத்தப்பட்ட வெற்றிகரமான சிஸ்டமாக எக்ஸ்பி உயர்ந்தது.
விண்டோஸ் 98ல் மக்கள் ரசித்த இண்டர்பேஸ் மற்றும் விண்டோஸ் என்.டி. சிஸ்டம் தந்த நிலைத்த இயக்க நிலை ஆகிய இரண்டும், எக்ஸ்பி சிஸ்டத்தின் முதன்மை சிறப்புகளாக இருந்தன. அத்துடன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் என்னும் அருமையான, இணைய பிரவுசரையும் இணைத்தே, மைக்ரோசாப்ட் தந்தது.
ADVERTISEMENT
ஆனால், ஹேக்கர்கள், எக்ஸ்பி சிஸ்டத்தின் மீது எளிதாகத் தாக்குதல்களை நடத்தத் தொடங்கினார்கள். இவர்களுக்கு எதிராக, 2004ல், மைக்ரோசாப்ட் தன் புகழ் பெற்ற செக்யூரிட்டி பேட்ச் பைல் எஸ்.பி.2னை வெளியிட்டது.
இதன் மூலம், எக்ஸ்பி சிஸ்டம் எப்போதும் பயர்வால் பாதுகாப்புடன் இயங்கியது. மிகப் பெரிய அளவில், தொல்லைகளைத் தந்த ப்ளாஸ்டர், சாசர் மற்றும் ஸ்லாம்மர் (Blaster, Sasser, மற்றும் Slammer) போன்றவை இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளிந்தன.
இதனால், உலகெங்கும், ஏறத்தாழ 60 கோடி கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் எக்ஸ்பி, அதிகார பூர்வமாக இயங்கியது. (காப்பி செய்து, பயன்படுத்தப்பட்ட எக்ஸ்பி சிஸ்டம் இதில் சேர்க்கப்படவில்லை).
ஆனால், வரும் ஏப்ரல், 2014 முதல் மைக்ரோசாப்ட், இனி எக்ஸ்பி சிஸ்டத்தினைத் தன்னால் பராமரிக்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. தொடர்ந்து இதனைப் பயன்படுத்துவது, பல இடர்ப்பாடுகளைத் தரும் எனவும் எச்சரித்துள்ளது.
ஒரு வாரத்திற்கு முன், ஸீரோ டே தாக்கதின் பாதிப்பு (பாதுகாப்பு பைல் வரும் முன் ஏற்படும் வைரஸ் தாக்கம்) விண்டோஸ் 7 மட்டுமின்றி, விண்டோஸ் எக்ஸ்பியிலும் காணப்பட்டது.
ஆனால், மைக்ரோசாப்ட் அதற்கான பேட்ச் பைலை சென்ற வாரம் வெளியிட்டு, இவற்றைக் காப்பாற்றியது. 2014 ல் நிச்சயம், எக்ஸ்பியைத் தாக்கும் வைரஸ்கள் மிக அதிகமாகவும், பாதிப்பு மோசமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த 2013 ஆம் ஆண்டில் மட்டும், எக்ஸ்பி சிஸ்டத்தின் மீது, ஹேக்கர்கள் தாக்குதல் நடத்திய 75 பழுதான குறியீடுகள் கண்டறியப்பட்டு, பேட்ச் பைல்கள் தரப்பட்டன. இவற்றில், 68 குறியீடுகள் மிக மோசமானவை என்றும் கண்டறியப்பட்டன. இந்த ஆண்டில், மொத்தம்
கண்டறியப்பட்டுள்ளவற்றில், எக்ஸ்பி சிஸ்டத்திற் கானது மட்டும் 90 சதவீதமாகும். நிச்சயமாய், இவை, 2014ல் நின்றுவிடாது. இது 100 சதவீதமாக உயரும் வாய்ப்புகளே அதிகம்.
அலுவலகத்தில் வழக்கமான பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் நெட்வொர்க் கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் இயங்கினால், நிச்சயம் அவை சிறிது கூட பாதுகாப்பு இல்லாதவையாகத்தான் இருக்கும்.
பாதுகாப்பான பிரவுசர், இமெயில் கிளையண்ட், ஆபீஸ் புரோகிராம் எனத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவதன் மூலம், நாம் தொடர்ந்து எக்ஸ்பியைப் பயன்படுத்தலாம் எனப் பல நிறுவனங்கள் எண்ணி வருகின்றன.
ஆனால், இவை எல்லாம், வெட்டுக் காயத்திற்குப் போடப்படும் சாதாரண பேண்ட் எய்ட் சுற்றுக்கள் @பான்றவை@ய. சரியான சிஸ்டத்திற்கு மாறினால்தான், முழுமையான பாதுகாப்புடன், நம் பணியை மேற்கொள்ளலாம்.
எனவே, தொடர்ந்து பாதுகாப்பு பெறக் கூடிய ஆப்பரேடிங் சிஸ்டத்திற்கு மாறுவதே, நம் கம்ப்யூட்டிங் பணிகளை முழுமையாக்கும். இல்லை எனில், நிச்சயம் ஆபத்துதான் என மைக்ரோசாப்ட் எச்சரித்துள்ளது.
நம் முன் இருப்பது, தற்போது 10 சதவீதப் பங்கினைத்தாண்டிப் பயன்படுத்தப்படும் விண்டோஸ் 8/8.1 மற்றும் 50 சதவீதக் கம்ப்யூட்டர் களுக்கு மேலாகப் பயன்படுத்தும் விண்டோஸ் 7 ஆகும்.
பிரான்ஸ் நாட்டில், சில நிறுவனங்கள், மொத்தமாக ஓப்பன் சோர்ஸ் சிஸ்டத்தில் இயங்கும் பயர்பாக்ஸ் பிரவுசர், தண்டர்பேர்ட் இமெயில், ஓப்பன் ஆபீஸ் வேர்ட் ப்ராசசர் மற்றும் ஸ்ப்ரெட் ஷீட் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. இவை அனைத்தும், லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின், உபுண்டு சிஸ்டத்தில் இயங்குபவையாய் உள்ளன.
விலாவாரியாக அறிவிப்பு கொடுத்தும், பன்னாட்டளவில், இன்னும் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துவோர் பங்கு 45 சதவீதத்திற்கும் மேலாகவே உள்ளதாகத் தெரிகிறது. இதில் நிறுவனங்கள் 20 சதவீதம் என்பது வியப்பிற்குரியதாக உள்ளது.
ஆனல், ஒன்று மட்டும் உறுதி. ஆபத்து நிச்சயமாய் வாசலில் காத்திருக்கிறது. நம்மைக் காத்துக் கொள்ள கொஞ்சம் நேரம் தான் உள்ளது. எனவே, விரைவாகச் செயல்பட்டு, பல்லாண்டு காலம் நமக்குத் துணையாய் இருந்த விண்டோஸ் எக்ஸ்பிக்கு விடை கொடுப்போம்.

மைக்ரோசாப்ட்டின் எச்சரிக்கை...!

மொபைல் சாதன உற்பத்தியில் முன்னணியில் திகழும் நிறுவனங்களுள் ஒன்றான Lenovo உயர் துல்லயம் உடைய தொடுதிரை தொழில்நுட்பத்தினை உள்ளடக்கிய டேப்லட்களை வடிவமைத்து வருகின்றது.
Yoga எனும் வியாபாரக் குறியீட்டுடன் வெளியாகவுள்ள இவை 249 டொலர்களிலிருந்து காணப்படுகின்றது.
இச்சாதனத்தில் 1.5GHz வேகம் கொண்ட Qualcomm Snapdragon 400 Processor உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் கூகுளின் Android 4.3 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
இவை அடுத்த வரும் ஜனவரி மாதமளவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

HD திரையுடன் கூடிய டேப்லட்களை வடிவமைக்கும் முயற்சியில் Lenovo

              

சூரியனை நோக்கி மிக வேகமாக பாய்ந்துச் சென்ற ஐசான் வால் நட்சத்திரம், சூரியனை சுற்றிச் சென்ற பின்னர் மாயமாகியுள்ளது.உலகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், விறுவிறுப்பான எதிர்பார்ப்பையம் ஏற்படுத்திய ஐசான் வால் நட்சத்திரம், சூரியனை நெருங்கிய அடுத்த சில நிமிடங்களில் தென்படாமல் போய்விட்டதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
ஐசானை மீண்டும் பார்க்கவில்லை என்று நாசா விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். எனவே ஐசான் சிதறுண்டு சூரியனின் வெப்ப அலையில் சிக்கி பொசுங்கி ஆவியாகிப் போயிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
அதேசமயம், சூரியனை நெருங்கி மாயமான பின்னர் ஐசானின் சிதறல் தப்பிப் பிழைத்துள்ளதாக புதிய செய்தியொன்றும் வெளியாகியுள்ளது. இதனால் ஐசான் முழுமையாக பொசுங்கிப் போய் விட்டதா அல்லது அதன் சிதறலில் சில தப்பிப் பிழைத்ததா என்ற விவாதம் எழுந்துள்ளது.
நாசா விஞ்ஞானிகள் இதுகுறித்துக் கூறுகையில், 'ஐசான் வால் நட்சத்திரம் சூரியனைக் கடந்த பின்னர் மீண்டும் காணப்படவில்லை' என்று தெரிவித்துள்ளனர். அனேகமாக அது சிதறுண்டு ஆவியாகியிருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனால் ஐசான் வால் நட்சத்திரம் முழுமையாக அழிந்து போகவில்லை. அதன் சிதறலின் ஒரு பகுதி தப்பிப் பிழைத்துள்ளதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளதால், ஐசான் முழுமையாக அழியவில்லையோ என்ற விவாதம் எழுந்துள்ளது.

மாயமான ஜசான் தப்பியதாக தகவல்(வீடியோ இணைப்பு)...

பல தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக உருவாக்கப்படும் ஸ்மார்ட் கைப்பேசிகள் தற்போது மருத்துவ துறையிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் மற்றுமொரு பயன்பாடாக எதிர்காலத்தில் உடலிலுள்ள கொலஸ்ரோலின் அளவை கண்டறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான விசேட அப்பிளிக்கேஷன் ஆனது கோர்ணல் (Cornell) பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பயனர்களே தமது கொலஸ்ரோல் அளவினை இலகுவான முறையிலும் விரைவாகவும் கண்டறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலஸ்ரோல் அளவை கண்டறிய அப்பிளிக்கேஷன் தயார்

ஸ்மார்ட் கைப்பேசிகளின் உதவியுடன் உடல் ஆரோக்கியத்தை பேணுதல் போன்ற பல்வேறு செயற்பாடுகளுக்கு இலத்திரனியல் கைப்பட்டிகள்(Wristband) அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
இவற்றின் தொடர்ச்சியாக சம்சுங் நிறுவனமும் Galaxy Band எனும் கைப்பட்டி உற்பத்தியில் மும்முரமாக இறங்கியுள்ளது.
இக்கைப்பட்டியும் உடற்பயிற்சியின்போது பயன்படுத்தக்கூடியதாகவே வடிவமைக்கப்படுகின்றது.
2014ம் ஆண்டு வெளிவரவுள்ள இச்சாதனமானது புளூடூத் தொழில்நுட்பத்தினையும், குரல் வழி மூலமான கட்டுப்பாட்டினைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது.

Galaxy Band தயாரிப்பில் சம்சுங்

கணனிகள் தொடர்ச்சியாக பாவனை செய்யப்படும்போது அவற்றில் கோளாறுகள் ஏற்படுவதுடன் அவற்றின் வேகம் மந்த நிலையை அடைதல் வழமையான ஒன்றாகும்.
இப்பிரச்சினையிலிருந்து விடுபட பல மென்பொருட்கள் காணப்படுகின்றன. அவற்றினைப் போன்றே PC Shower 2014 எனும் மென்பொருளும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இம் மென்பொருளினைப் பயன்படுத்தி அநாவசியமானதும் தற்காலிகமானதுமான கோப்புக்களை நீக்க முடிவதுடன், கணனியில் ஏற்படக்கூடிய கோளாறுகளையும் இலகுவாக சரிசெய்யக்கூடியவாறு காணப்படுகின்றது.
மேலும் விண்டோஸ் இயங்குதளத்தில் செயற்படக்கூடிய கணனிகள், டேப்லட்கள், மடிக்கணினிகள் போன்றவற்றிலும் இந்த மென்பொருளினைப் பயன்படுத்த முடியும்.

கணனிகளை சிறந்த நிலையில் பராமரிக்க உதவும் மென்பொருள்



              
கிறிஸ்துமஸ் காலப் பகுதியில் தமது நிறுவனத்திலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு தாமதம் அடைந்தவர்களுக்கு அமேசான் நிறுவனம் சலுகை ஒன்றினை வழங்குகின்றது.
இதன்படி 20 டொலர்கள் பெறுமதியான அவர்களுக்கு பரிசுத்தொகையாக வழங்கவுள்ளது.
இந்த நத்தார் விடுமுறை தினங்களில் செக்கன் ஒன்றுக்கு 426 பொருட்கள் என்ற வீதம் அமேசான் தளத்தில் வியாபாரம் இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக சில பயனர்களுக்கான பொருட்களை அனுப்பி வைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அவர்களை மகிழ்வூட்டும் பொருட்டு இந்த அதிரடி சலுகையினை வழங்கியுள்ளது.

பாதிக்கப்பட்ட பயனர்களுக்காக அமேசான் வழங்கும் சலுகை...

சீனாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் Meizu நிறுவனமானது MX4 எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகப்படுத்துகின்றது.
முதன் முறையாக அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள இக்கைப்பேசி இரு வகைகளைக் கொண்டுள்ளது.
அவற்றில் ஒன்று 5.5 அங்குல அளவு மற்றும் 2560 x 1440 Pixel Resolution உடைய தொடுதிரையினையும் மற்றையது 5 அங்குல அளவு மற்றும் 1920 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினையும் கொண்டதாக காணப்படுகின்றது.
இவை எதிர்வரும் ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Meizu அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசிகள்



                 
நோக்கியா உருவாக்கிய மேப் அப்பிளிக்கேஷனான HERE Maps ஆனது iOS உட்பட அநேகமான இயங்குதளங்களில் செயற்படக்கூடியது.
இந்த அப்பிளிக்கேஷனை நோக்கிய நிறுவனம் அப்பிளின் அப்பிளிக்கேஷன் ஸ்டோரிலிருந்து நீக்குவதற்கு முடிவு செய்துள்ளது.

                              
அப்பிள் நிறுவனம் தனது இயங்குதளத்தின் பிந்திய பதிப்பான iOS 7 இனை வெளியிட்டதன் காரணமாக அதற்கு ஏற்ற வகையில் தனது அப்பிளிக்கேஷன்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காகவே இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

                          

அப்பிளிக்கேஷன் ஸ்டோரிலிருந்து HERE Maps அப்பிளிக்கேஷனை நீக்கும் Nokia...

விண்வெளியில் இருந்து 2013ம் ஆண்டு எடுக்கப்பட்ட பூமியின் எழில் நயம் பொங்கும் படங்களை நாசா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பூமியின் எழில் மிகு படங்களை வெளியிட்டது நாசா



       
Huawei நிறுவனமானது Ascend Mate 2 எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை வடிவமைத்து வருகின்றது.
இந்நிலையில் தற்போது அக்கைப்பேசியின் புகைப்படம் ஒன்றும் சில தகவல்களும் வெளியாகியுள்ளன.
அதன்படி 6.1 அங்குல அளவுடைய பெரிய தொடுதிரையுடன் வடிவமைக்கப்படுவதுடன், Quad-Core Huawei Kirin 910 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியவற்றினையும் கொண்டுள்ளது.
மேலும் கூகுளின் Android 4.4 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டுள்ளதுடன், 13 மெகாபிக்சல்களை உடைய கமெராவினையும் உள்ளடக்கியுள்ளது.
இக்கைப்பேசி அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

  

Huawei அறிமுகப்படுத்தவுள்ள Ascend Mate 2 தொடர்பான தகவல்கள் வெளியாகின...

GSLV
ஜி.எல்.எல்.வி.- டி5 என்ற ராக்கெட்டை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ உருவாக்கியுள்ளது. இந்த ராக்கெட்டை இயக்கும் கிரயோஜெனிக் என்ஜின் இந்திய விஞ்ஞானிகள்உருவாக்கியுள்ளனர்.
மூன்று நிலைகள் கொண்டது:
இந்த ராக்கெட் 3 நிலைகளை கொண்டது. 414 டன் எடையும், 49 மீட்டர் உயரம் உடையது. ஜிசாட்-14 என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோளுடன் கடந்த ஆகஸ்டு 19-ந்தேதி விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் ஏவப்படுவதற்கு 75 நிமிடங்களுக்கு முன்பு ராக்கெட்டின் 2-வது தளத்தில் உள்ள உந்துவிசை டேங்கில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டது. அதை தொடர்ந்து ராக்கெட் செலுத்துவது தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது.அதில் ஏற்பட்ட பிரச்சினை தற்போது சரி செய்யப்பட்டுவிட்டது. அதையடுத்து இந்த ராக்கெட் வருகிற ஜனவரி 5-ந்தேதி மாலை 4.18 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவானின் 2 தளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது.இத்துடன் ஜிசாட்-14 தகவல் தொடர்பு செயற்கைக்கோளும் அனுப்பப்படுகிறது. இந்த தகவலை இஸ்ரோ தலைவர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
டிசம்பர்-27ல் அதிகாரபூர்வ வெளியீடு:
ராதாகிருஷ்ணன் மேலும் அவர் கூறுகையில், இந்த ராககெட் அனுப்பும் குழு வருகிற 27-ந்தேதி சந்தித்து ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான அறிவிப்பை அதிகாரமாக வெளியிடுவார்கள் என்றும்,ஜி.எஸ்.எல்.வி.- 5டி ராக்கெட் பரிசோதனை முழுமையாக முடிந்து விண்ணில் செலுத்த தயார் நிலையில் உள்ளது என ராதாகிருஷ்ணன் தெரிவித்தார் அவ்வாறு தெரிவித்தபோது அவருடன் இஸ்ரோ செய்தி தொடர்பாளர் தேவிபிரசாத் கார்னிக் உடன் இருந்தார்.

ஜிஎஸ்எல்வி-டி5 ராக்கெட் ஜனவரி 5ம் தேதி விண்ணில் ஏவப்படும்


       
சில சமயங்களில் நாம் பிறரது கணினியிலோ அல்லது பொதுக் கணினிகளிலோ பணிபுரிய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அது போன்ற சமயங்களில், அந்த குறிப்பிட்ட கணினிகளில் இணையத்தில் மெயில் அனுப்புவது, அல்லது முக்கியமான ஆன்லைன் பண வரிவர்த்தனை செய்து முடித்தப் பின்னர், நமக்கு பின்னர் அந்த கணினியை பயன்படுத்துபவர்கள், நமது இரகசியங்களை அல்லது நமது தனிப்பட்ட விபரங்களை அறியாமல் தடுக்க இந்த தடயங்களை அழிப்பது எப்படி?



வழக்கமாக நாம் ஹிஸ்டரி க்ளின் செய்வது போன்றவற்றை செய்தாலும் கிளிப் போர்டு க்ளின் செய்வது போன்ற பல வகைகளில் நமது தடயங்களை அழிக்க CleanAfterMe என்ற இலவச மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.


இது ஒரு போர்ட்டபிள் மென்பொருள் என்பதால், கணினியில் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை. இதனை நமது பென் ட்ரைவில் எடுத்துச் செல்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


இதனை தரவிறக்கி CleanAfterMe.exe என்ற கோப்பை ரன் செய்தால் போதுமானது, நீக்க வேண்டிய விபரங்களை திரையில் தேர்வு செய்து Clean Selected Items பட்டனை க்ளிக் செய்து உங்கள் தடயங்களை அந்த கணினியிலிருந்து நீக்கி விடலாம். இந்த மென்பொருள் கோப்புகளை அழிப்பதற்கு முன்பாக அவற்றில் Zero க்களை நிரப்பி விடுவதால் வேறு எந்த Undelete மென்பொருள் கருவியைக் கொண்டும் மறுபடி மீட்டெடுக்க இயலாது என்பது இதனுடைய சிறப்பம்சம்.

                                                       DOWNLOAD

பிறரது கணினிகளில் நாம் உபயோகித்த தடயங்களை அழிக்க என்ன செய்வது???

12/29/2013

     

வணக்கம் நண்பர்களே இன்றைய நவீன உலகில் மொபைல் போன் பயன்படுத்தாதவர் யாருமே இருக்க மாட்டார்கள்.ஆனால் மொபைல் போன் பயன்படுத்தும் அனைவருமே அதற்குள்ள ANTIVIRUS போன்ற மென்பொருள்களை எங்கிருந்து டவுன்லோட் செய்வது என்று அறிந்திருக்க வாய்ப்பில்லை அதற்காகவே கைபேசிகளுக்கான மென்பொருட்களை இலவசமாக தரும் சில முன்னணி இணையதளங்களை இங்கே கொடுத்துள்ளேன் . சிலவற்றில் உறுப்பினராக வேண்டி இருக்கலாம் .                                          






உங்கள் மொபைலுக்கான SOFTWARE மற்றும் GAMES DOWNLOAD செய்ய சிறந்த தளங்கள் ...

சமூக சேவை செய்பவர்களுக்காகசமூக வலைத்தளங்களின் வரிசையில் முன்னணியில் திகழும் பேஸ்புக் தளமானது பல்வேறு புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றது.
இதன் அடிப்படையில் தற்போது “Share” மற்றும் “Like” பொத்தான்களைப் போன்று “Donate Now” எனும் பொத்தானை தற்போது அறிமுகப்படுத்துகின்றது.
எதிர்காலத்தில் நண்பர்களுக்கோ அல்லது நிறுவனங்களுக்கோ நன்கொடைகள் வழங்க விரும்புபவர்கள் இவ்வசதியினை பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக சேவை செய்பவர்களுக்காக பேஸ்புக் வழங்கும் புதிய வசதி

                                     

கணிணி பயன்படுத்தும் பலருக்கும் பொதுவான பிரச்சினையாக இருப்பது கணிணி மெதுவாக இயங்குவது தான்.இதனால் நமது வேலை செய்யும் ஆர்வம் குறைந்து விடலாம். கம்ப்யூட்டர் பாவிக்கும் போது நிறைய பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்.கம்ப்யூட்டர் பூட்(BOOT) ஆகுவதற்கு அப்பிளிகேஷன்ஸ் ஓபன்(APPLICATION OPEN) பண்ணுவதற்கு நீண்ட நேரம் எடுக்கும். ஆகவே கீழ்வரும் சில வழிமுறைகளை செய்து பாருங்கள் கணனியின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.



 உங்கள் கணனி பூட் ( Boot) ஆகி முடியும் வரை எந்த அப்பிளிகேஷனையும் (Application) ஓப்பன் ( Open) பண்ணாதிருங்கள்.


ரிப்பிரஷ் ( Refresh) f5 பண்ணுங்கள் ஏதாவது ஒரு அப்பிளிக்கேஷனை குளோஸ் பண்ணும் போதும்.அவ்வாறு பண்ணும் போது தேவையல்லாத பைல்கள் ரம்மில் ( RAM ) இருந்து நீக்கப்படும்.


டெக்ஸ்டோப்பில்(desktop) பெரிய அளவிலான படங்களை ( Large file size images) வோல்பேப்பராக ( Wallpaper ) போடுவதை தவிர்த்து கொள்ளுங்கள்.அதன் மூலமாக ரம்முக்கு ( RAM ) செல்லும் 64 (MB) மீதப்படுத்த முடியும்.


டெக்ஸ்டோப்பை ( Desktop ) ஷாட்கட்களால் ( Shortcuts) நிரப்பி வைக்க வேண்டாம்.தேவையான ஷாட்கட்டை மட்டும் வைத்திருங்கள்.ஒவ்வொரு ஷாட்கட்டுக்கும் 500 பைட்ஸ் ( Bytes) ரம்முக்கு ( RAM ) செல்லும்…

எப்போழுதும் ரிஸக்கல்பீன்குள் ( Recyclebin) இருக்கும் அழித்த பைல்களை அதற்குள்ளும் இருந்து நீக்கி விடுங்கள்.


 தினமும் இன்டநெட் டெம்பரி பைல்களை அழித்துவிடுங்கள்.( Temporary Internet Files)


 இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை டீபோறோமன்ட் ( Defragment) பண்ணுங்கள் அதன் மூலமாக உங்கள் ஹாட்டிஸ்கில் இருக்கும் இடைவெளிகள் சரி செய்யப்படும்.

உங்கள் ஹாட்டிஸ்கை இரு பார்டிஸ்சனாக ( Partitions) பிரித்து வையுங்கள்.ஒன்றில் சிஸ்டம் பைல்களும் மற்றையதில் அப்பிளிகேஷன் பைல்களையும் இன்ஸ்ரோல் பண்ண முடியும்.



இவ்வாறான வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் உங்கள் கணனியை எப்போழுதும் வேகமாக வைத்திருக்க முடியும்

கணினியின் வேகத்தை அதிகரிக்க புதிய வழிகள் ...

கூகுளின் வடிவமைப்பான அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட சாதனங்களுக்கு நாள்தோறும் பல்வேறு மென்பொருட்கள் அறிமுகப்படுத்தப்படகின்றன.
இவற்றின் தொடர்ச்சியாக SyncDroid எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இம்மென்பொருள் மூலம் குறித்த கைப்பேசியிலுள்ள Photos, Videos, Audio, Contacts, SMS, Ringtones, Bookmarks போன்ற தரவுகளை பேக்கப் செய்துகொள்ள முடிவதுடன், அவற்றினை Restore செய்துகொள்ளவும் முடியும்.
மேலும் Samsung, Sony, HTC, Asus, Motorola போன்ற அனைத்து நிறுவனங்களினதும் அன்ரோய்ட் கைப்பேசிகளில் செயற்படவல்லது.

அன்ரோயிட் கைப்பேசிகளை முகாமை செய்வதற்கான மென்பொருள்

நாம் அனைவரும் இணையத்தில் வேகமாக உலாவுவதை தான் மிகவும் விரும்புகிறோம் . அனைவரும் அவரது சமூக வாழ்கையிலும் மற்றும் நடைமுறை வாழ்கையிலும் இணைவதற்கு இணையம் இன்றியமையாததாக மாறிவிட்டது.அதனால் அனைவருக்கும் வேகமான இணைப்பு வேண்டும் என்று தான் ஆசை படுகின்றனர்.இப்போது பல தொலைபேசி நிறுவனங்களும் பல வகையான இணைய இணைப்பை தருகின்றனர்.இப்பொழுது பல நிறுவனங்களும் இணைய இணைப்பை வேகமாக்குவதர்க்கு பணியாற்றிக் கொண்டு இருக்கின்றனர். எனவே இன்று நாம் நீங்கள் ஒரு மெதுவான இணைப்பில் இணையத்தை வேகமாக அணுகுவது எப்படி என்பதை பற்றி பேசுவோம்.




இணையத்தை வேகமாக அணுக இரண்டு வழிகள்

1.கூகிள் ஸ்லைசர் : 

இந்த கூகிள் ஸ்லைசர் என்ன செய்கிறது என்றால் உங்கள் வலைப்பக்கத்தில் உள்ள படங்களை தவிர்க்கிறது ( நீங்கள் விருப்ப பட்டால் )அதனால்உங்கள் வலைப்பக்கம் இலகுவாக மாறுகிறது இதனால் நீங்கள் விரைவாக அந்த பக்கத்தை பார்வையிடலாம். CLICK HERE TO GO.




2.TCP Optimizer :

TCP Optimizer ஒரு இலவச மென்பொருள் இது விண்டோஸ் இயங்குதளத்திற்காக உருவாக்கப்பட்டது இது உங்கள் கணினியின் இணைய இனைப்பை வேகமாக்கும்.இதை பதிவிறக்கி அதை ரன் செய்யவும்.அதற்க்கு முன்னர் உங்கள் இணைய உலாவிகளை மூடிக் கொள்ளவும்.
 CLICK HERE TO DOWNLOAD.

இதை பதிவிறக்கிக் கொள்ளுங்கள் பின்னர் நீங்கள் விண்டோஸ் 7 அல்லது விஸ்டா பயன்படுத்துபவராக இருந்தால் அதை வலது கிளிக் செய்து "RUN AS ADMINISTRATOR" என்பதை தேர்வு செய்யுங்கள் மற்ற இயங்குதளத்தில் நீங்கள் டபுள் கிளிக் செய்யுங்கள் பின்னர் கீழே உள்ளதை போல தோன்றும்.

அதில் உங்கள் பரோட் பேண்ட் கணக்கின் வேகத்தை(512KBPS,1MBPS,ETC) குறிப்பிடுங்கள் பின்னர் அதில் MODIFY ALL NETWORK ADAPTERS என்பதை தேர்வு செய்யுங்கள் பின்னர் கீழே OPTIMAL என்பதையும் கிளிக் செய்து விட்டு APPLY CHANGES என்ற பொத்தானை அழுத்தவும்.பின்னர் வரும் விண்டோவில் OK வை அழுத்தவும்.

உங்கள் கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ளுங்கள் . பின்னர் WWW.SPEEDTEST.NET   என்ற வலைப்பக்கத்திற்கு சென்று உங்கள் இணையத்தின் வேகத்தை சோதித்து பாருங்கள் . TCP OPTIMIZER-ரை பயன்படுத்தும் முன்னும் உங்கள் இணைய வேகத்தை சோதித்து பார்த்துக் கொள்ளுங்கள்.

இணையத்தில் வேகமாக உலாவ [ in slow connections ] ...

டேப்லட், ஸ்மார்ட் கைப்பேசிகள் போன்ற ஒன்றிற்கு மேற்பட்ட சாதனங்களை ஒரே நேரத்தில் சார்ஜ் செய்யக்கூடிய சாதனம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Octafire எனப்படும் இச்சாதனம் 100-240V, 47-63Hz மின்சாரத்தில் செயற்படக்கூடியதாகவும், 2.1A / 5V வெளியிடக்கூடியதாகவும் காணப்படுகின்றது.
இதன் மூலம் அதிகபட்சமாக 8 வெவ்வேறு வகையான மொபைல்களை சார்ஜ் செய்ய முடியும்.

ஒரே நேரத்தில் பல மொபைல்களை சார்ஜ் செய்யும் சாதனம்

நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் கணினிகளில் அடிக்கடி சில  error செய்திகளை காட்டும்.அந்த error களை எப்படி சரிசெய்வது? என்ன பிரச்சனை? உங்கள் கணினியை கடைக்கு எடுத்து போகாமல் நீங்களே முயற்சி செய்து பாருங்கள்.



1.No Fixed Disk present:
காரணம்:ஹார்ட்ரைவ் சரியாக இணைக்கவில்லை என்றால் இவ்வாறு பிழைச்செய்தி வரும்.ஹார்ட்ரைவின் மின் இணைப்பானை சரிபார்க்கவும்.அனைத்து கேபிளிலும் சரியான மின்னழுத்தம் உள்ளதா என்று சரிபார்க்கவும்.பிறகு இணைப்பு கேபிளை சரியாக இணைக்கவும்.

2.Error Reading Drive C"
ஹார்ட்ரைவின் இணைப்புகள் சரியாகவுள்ளதா என்று சரிபார்க்கவும்.இணைப்புக் கேபிளில் பழுதிருந்தால் அதை மாற்றிடவும்.மீண்டும் பிழை செய்திவந்தால் ஆண்டிவைரஸ் நிரலை பயன்படுத்தி வைரஸ் இருந்தால் அதை நீக்கிவிடவும்.பிறகும் பிழை செய்தி வந்தால் "Scan disk" -ஐ இயக்கி செக்டார்கள் ஏதும் பழுதாகியுள்ளதா என்று பார்க்கவும்.செக்டார்கள் பழுதாகி இருந்தால் ஹார்ட்ரைவை மாற்றவும்.

3.Track 0 not Found
டிரைவின் ட்ராக் "0" கெட்டிருந்தால் இவ்வாறு பிழைச்செய்தி வரும். டிரைவின் கோப்பு விவர அட்டவணை(FAT) இங்கு தான் பதிந்திருக்கும்.இந்த அட்டவணையைக் கொண்டுதான் டிரைவில் பதிந்திருக்கும் அனைத்துத் தகவலையும் எழுத/படிக்க முடியும்.பூட் பிளாப்பியை பயன்படுத்தி
ஹார்ட்டிரைவை பார்ட்டீசியன் பன்னவும்.மீண்டும் இதே பிழை செய்தி வந்தால் ஹார்ட்டிரைவை மாற்றவும்.

4.கணினியை "ஆன்" செய்தும் திரையில் டிஸ்பிளே வரவில்லை.

  • .மானிட்டரின் மின் கேபிள் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்று சரிபார்க்கவும்.
  • .மானிட்டரின் பொத்தான் "ஆன்" ஆகியுள்ளதா என்று பார்க்கவும்.
  • .மானிட்டரின் இணைப்பு கேபிளை(interface cable) சரிபார்க்கவும்.
  • .மானிட்டரின் Brightness control-ஐச் சரிபார்க்கவும்.
  • .வி.ஜி.ஏ கார்டைச் சரிபார்க்கவும்.
  • .நினைவகத்தை சரிபார்க்கவும்.

5.கணினியை "ஆன்" செய்தவுடன் ஒரு பெரிய பீப் ஒலி மற்றும் இரண்டு சிறிய பீப் ஒலி வந்து டிஸ்பிளே வரவில்லை என்றால்:

  • .வி.ஜி.ஏ(VGA) கார்டைச் சரிபார்க்கவும்.
  • .வேறு வி.ஜி.ஏ கார்டை மாற்றவும்.


6.கணினியை "ஆன்" செய்தவுடன் "No keyboard is connected " அல்லது "Keyboard not present" என்ற பிழைச் செய்தி வருகிறது.
  • .விசைப்பலகை சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்று சரிபார்க்கவும்.
  • .விசைப்பலகையின் கேபிளை சரிபார்க்கவும்.எங்கேனும் துண்டிக்கப்பட்டுள்ளதா என்று பார்க்கவும்.
  • .நன்றாக இயங்கும் வேறு ஒரு விசைப்பலகையை இணைக்கவும்.அதன்பிறகும் பிழை செய்தி வந்தால் மதர்போர்டின் விசைப்பலகை இணைப்பானில் பிரச்சனை இருக்கலாம்.


7.DVD -ல் உள்ள தட்டை(tray) பகுதி வெளிவரவில்லை 

  • .DVD மூலம் ஏதேனும் படங்களை இயக்கி கொண்டிருக்கும் போது வெளிவராது.எனவே DVD மூலம் திறந்திருக்கும் மென்பொருள்களை மூடி விட்டு முயற்சிக்கவும்.இல்லையென்றால் கனினியை ரீஸ்டார்ட் செய்தபின் முயற்சிக்கவும்.
  • .DVD டிரைவின் மின் இணைப்பியை சரிபார்க்கவும்.அப்படியும் திறக்கவில்லையா டிவிடி தட்டை இயக்கும் மோட்டார் பழுந்தடைந்திருக்கலாம்.
  • .டிவிடி டிரைவின் முன் புறம் உள்ள சிறுதுளையில் நீண்ட மெல்லிய கம்பியை நுழைத்தால் டிவிடி தட்டைப் பகுதி வெளியே வரும்.


8.கணினியை "ஆன்" செய்தவுடன் தொடர்ச்சியாக பீப் ஒலி வந்து டிஸ்பிளே வரவில்லை என்றால்..

  • .நினைவகத்தை (RAM) சரியாக இணைக்கவும்
  • .நினைவகத்தை மாற்றவும்.

9.Bad command are file name..

நீங்கள் கொடுத்த டாஸ்(DOS) கட்டளை சரியான கட்டளைதானா என்று சரிபார்க்கவும்.கட்டளையில் ஏதேனும் சிறு தவறு நேர்ந்திருந்தாலும் இவ்வாறு பிழை செய்தி வரும்.

10.Insufficient Disk Space

டிஸ்க்-ல் தகவலை பதிக்க போதிய இடம் இல்லையெனில் இவ்வாறு பிழைச்செய்தி வரும்.தேவையில்லாத கோப்புகளை அழித்துவிட்டால் இடம் கிடைக்கும்.

கணினியில் ஏற்படும் பிரச்சனைகளும் , தீர்வுகளும் ...

gmail yahoo
அரசு அலுவலகங்களில் பாதுகாக்கப்படும் தரவு சேவைகள் சைபர் கிரைம் குற்றங்களில் சிக்குவதை முற்றிலும் தடை செய்யவேண்டி வர்த்தக ரீதியில் பயன்படுத்தப்படும் யாகூ, ஜிமெயில் வலைத்தளங்களின் உபயோகத்தை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அரசாங்கம் இனி தனது உத்தியோகபூர்வ தகவல்களுக்கு கொள்கை தேசிய தகவல் மையத்தின்(நிக்) இணையதளத் தொடர்புகளையே பயன்படுத்த முடிவு செய்துள்ளது. அரசாங்க அலுவலகங்கள் இந்த இணையதளத் தொடர்பை உபயோகப்படுத்துவதை அரசு கட்டாயமாக்க எண்ணியுள்ளது. இதன்மூலம் 5 முதல் 6 லட்சம் அரசு ஊழியர்கள் நிக் தகவல் தொடர்பை பயன்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறு செய்வதன்மூலம், உத்தியோகபூர்வ ஆதாரங்களின்படி அரசாங்கத்தின் தகவல் பதிவுகள் பெருமளவில் பாதுகாக்கப்பட முடியும் என்று அரசு கருதுகின்றது.
இந்திய அரசாங்கத்தின் கொள்கை என அழைக்கப்படும் இந்தத் திட்டம் கிட்டத்தட்ட தயார் நிலையில் உள்ளது. மற்ற அமைச்சரவைகளின் கருத்துகளும் இதுகுறித்து சேகரிக்கப்பட்டு வருகின்றன. வரும் டிசம்பர் மாத மத்தியிலிருந்து இறுதிக்குள் இந்த செயல்பாடுகள் தொடங்கக்கூடும் என்று மத்திய அரசின் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தொழில்நுட்பத் தகவல்துறையின் செயலாளரான சத்யநாராயணா சிஐஐ உச்சி மாநாட்டின்போது நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்த உட்கட்டமைப்பு வசதிகளுக்காக உடனடியாக 4 முதல் 5 கோடி ரூபாய் வரை தேவைப்படுவதாகவும் அவர் கூறினார். ஆயினும், இத்திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்தும்போது இதன் முதலீடு 50 முதல் 100 கோடி ரூபாய் வரை இருக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதுமட்டுமின்றி இத்தகைய தரவுத் தகவல்கள் கிளவுட் பிளாட்பாரம் எனப்படும் தொகுப்பில் சேமித்து வைக்கப்படும். அதனால், சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் தங்களுடைய துறை குறித்த தகவல் தொகுப்புகளை எளிதில் கையாள முடியும் என்றும் சத்யநாராயணா விளக்கினார்.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஏஜன்சி மற்றும் மத்திய புலனாய்வுத்துறை ஏஜென்சியின் முன்னாள் தொழில்நுட்ப ஒப்பந்ததாரரான எட்வர்ட் ஸ்னோடென் அமெரிக்கா மற்ற நாடுகளைக் கண்காணிப்பதை ஆதாரங்களுடன் விளக்கியது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி, உலக நாடுகள் தங்களின் தகவல் தொடர்புகள் குறித்த பாதுகாப்பில் வெளிநாட்டுத் தொடர்பு மையங்களான யாகூ, ஜிமெயில் போன்றவற்றை உபயோகப்படுத்துவதை கட்டுப்படுத்தவும் வழி வகுத்துள்ளது.

அரசு அலுவலகங்களில் யாகூ-ஜிமெயில் பயன்படுத்த முடியாது

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com