11/30/2013

இந்திய மொழிகளிலேயே விக்கிபீடியாவில் (இணைய தகவல் களஞ்சியம்) அதிக கட்டுரைகள் தந்த இரண்டாவது மொழி என்ற பெருமையை தமிழ் மொழி பெற்றிருக்கிறது. உலக அளவில் 287 மொழிகளில் 60-வது இடத்தில் உள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பங்களிப்பாளர்கள் 57 ஆயிரத்துக்கும் மேலான கட்டுரைகளை இதில் எழுதியுள்ளனர்.
ஆசிரியர், மாணவர்...
தமிழ் விக்கிபீடியாவின் பத்தாம் ஆண்டு விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது. யார் வேண்டுமானாலும் பங்களிக்கக் கூடிய இந்த தளத்தில் அதிகம் பங்காற்றி வருவது ஆசிரியர்கள், மாணவர்கள், மென்பொருளாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள். இதில் முதல் இடத்தில் இருப்பது இந்தி.
உலகளவில் கட்டுரைகளின் எண்ணிக்கையில் 60-வது இடத்தில் இருந்தாலும் கட்டுரைகளின் தரத்தின் அடிப்படையில் தமிழ் 40-வது இடத்திற்குள் உள்ளது. கட்டுரைகளின் தரமானது அதன் நீளம், நம்பகத்தன்மை, கொடுக்கப்படும் சான்றுகளை பொறுத்தது. இந்தியில் ஒரு வரி கட்டுரைகளைக் கூட கணக்கில் கொள்கிறார்கள். ஆனால் தமிழில் குறைந்தபட்சம் மூன்று வரிகளாவது இருக்க வேண்டும் என்று நாங்கள் கட்டுப்பாடு விதித்துள்ளோம்’ என்று தமிழ் விக்கிபீடியாவின் ஏற்பாட்டாளர் ரவிசங்கர் கூறினார். மற்ற மொழிகளைப் போல் அல்லாமல் தமிழில் அறிவியல், சமயம், பண்பாடு என்று பல துறைகளைப் பற்றிய கலைகளஞ்சியம் தொகுக்கப்படுகிறது.
3 ஆண்டுகளாக தமிழ் விக்கிபீடியாவில் எழுதி வரும் அண்ணா பல்கலைக்கழக மாணவர், சூர்ய பிரகாஷ் கூறுகையில், தமிழ் மீதுள்ள ஆர்வத்தால் தமிழ் வழியில் பொறியியல் கற்று வருகிறேன். எனவே விக்கிபீடியாவில் தொழில்நுட்பம் சார்ந்த கட்டுரைகளை எழுதுவேன். அது என்னைப் போன்ற மாணவர்களுக்கும் உதவியாக இருக்கும். அது தவிர, விக்கிபீடியாவில் எழுதுவதை எளிமையாக்க பல மென்பொருட்கள் உதவிகளை செய்து வருகிறேன்’ என்றார்.
விக்கிபீடியாவில் பெண்கள்
தமிழில் தொடர்ந்து எழுதும் 285 பேரில் 15 பேர் மட்டுமே பெண்கள். இதில் சென்னையிலிருந்து எவரும் இல்லை. தமிழ்நாட்டில் பெண்களின் பங்கை ஊக்கவிப்பதற்காக பயிற்சி பட்டறைகளை நடத்தி வரும் தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையை (Free Software Foundation) சேர்ந்த நப்பின்னை கூறுகையில், விக்கிபீடியாவில் பெண் அறிவியலாளர்கள், அரசியல் தலைவர்கள், பெண்ணியவாதிகள் பற்றிய தகவல் மிக குறைவு. இதனை ஊக்குவிப்பதற்கு ’விக்கி ஃபொர் விமன்’ என்ற திட்டத்தின் கீழ் பெண்கள் கல்லூரிகளில் பயிற்சி பட்டறைகள் நடத்துகிறோம். குறிப்பாக அரசு கலைக் கல்லூரிகளான ராணி மேரி கல்லூரி, பாரதி மகளிர் கல்லூரிகளில் உள்ள ஆர்வமிக்க இளம் பெண் பங்களிப்பாளர்களை ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளோம்’ என்றார்.
தொடர் கட்டுரைப் போட்டி
தமிழ் விக்கிபீடியா தொடங்கி பத்தாண்டுகள் ஆன நிலையில் அதன் தரத்தை உயர்த்தவும் புதிய பங்களிப்பாளர்களை ஊக்குவிக்கவும் தொடர் கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 2013 முதல் மே 2014 வரை நடக்கும் இப்போட்டியில் ஒவ்வொரு மாதமும் அதிக கட்டுரைகள் பங்களிப்பவருக்கு பரிசு கொடுக்கப்படுகிறது.

பத்தே ஆண்டுகளில் இரண்டாமிடம் பிடித்த தமிழ் விக்கிபீடியா


                      

ஹவாய் நிறுவனம் Ascend W1 வெற்றியை தொடர்ந்து Ascend W2  ஸ்மார்ட்ஃபோனை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். மற்றும் இது விண்டோஸ்  ஃபோன் 8-ல் இயங்கக்கூடிய ஹவாய் நிறுவனத்தின் இரண்டாவது ஸ்மார்ட்ஃபோன்  ஆகும். சீன கைப்பேசிகளின் உற்பத்தியாளரான Ascend W2 நவம்பர் மாதத்தில்  இருந்து ரஷ்யா மற்றும் நெதர்லாந்தில் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது.

ஹவாய் Ascend W2 பற்றி செய்தி குறிப்புகள் 'இந்தியாவில் விரைவில்  தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது', ஆனால் கிடைக்கும் இடம் பற்றியும்  விலை விவரங்கள் பற்றியும் விவரங்களை நிறுவனம் வெளிப்படுத்தப்படவில்லை.  Ascend W2 ஸ்மார்ட்ஃபோன் டிஎஃப்டி மேஜிக் டச் தொழில்நுட்ப அம்சத்துடன் 4.3 -இன்ச் ஐபிஎஸ் WVGA (480x800) LCD டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

ஹவாய் Ascend W2 512MB ரேம் உடன் டூயல் கோர் 1.4GHz குவால்காம்  ஸ்னாப்ட்ராகன் ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இது விரிவாக்க கூடியது இல்லாத  8GB inbuilt சேமிப்பு உடன் வருகிறது. 5 மெகாபிக்சல் பின்புற கேமரா  கொண்டுள்ளது, இதில் முன் எதிர்கொள்ளும் கேமரா இல்லை. இது 1700mAh  பேட்டரி உள்ளது, மற்றும் பிளாக், நீலம், சிவப்பு மற்றும் மஞ்சள் ஆகிய நான்கு  நிறங்களில் கிடைக்கும். Ascend W2 ஸ்மார்ட்ஃபோனில் இலவசமாக 7GB  SkyDrive கிளவுட் சேமிப்பு வருகிறது.

ஹவாய் Ascend W2 முக்கிய குறிப்புகள்:

4.3-இன்ச் ஐபிஎஸ் WVGA (480x800) LCD டிஸ்ப்ளே,
1.4GHz குவால்காம் ஸ்னாப்ட்ராகன் ப்ராசசர்,
512MB ரேம்,
8GB inbuilt சேமிப்பு,
விண்டோஸ் ஃபோன் 8,
5 மெகாபிக்சல் பின்புற கேமரா,
1700mAh பேட்டரி.

விண்டோஸ் ஃபோன் 8-ல் இயங்கக்கூடிய ஹவாய் Ascend W2 ஸ்மார்ட்ஃபோன்...!


                      http://www.dinakaran.com/data1/DNewsimages/Tamil-Daily-News_44713556767.jpg
கனடியன் கைப்பேசிகளின் தயாரிப்பு நிறுவனமான பிளாக்பெர்ரி உடன் பார்ஸ்ச்  டிசைன் இணைந்து ஒரு புதிய அனைத்து டச் பார்ஸ்ச் டிசைன் P'9982 லக்சரி  ஸ்மார்ட்ஃபோனை அறிமுகப்படுத்தியுள்ளது. பிளாக்பெர்ரி பார்ஸ்ச் டிசைன் P'9982  ஸ்மார்ட்ஃபோனை நவம்பர் 21-ம் தேதியில் இருந்து பார்ஸ்ச் டிசைன் கடைகளில்  கிடைக்கும்.

வரம்பிடப்பட்ட 500 போர்ஸ் டிசைன் P'9982 ஸ்மார்ட்ஃபோன் சாதனங்கள் மட்டுமே  டிசம்பர் மாத தொடக்கத்தில் உலகளவில் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது.  பிளாக்பெர்ரி பார்ஸ்ச் டிசைன் P'9982 ஸ்மார்ட்ஃபோன் விலை விவரங்கள் இதுவரை  அறிவிக்கப்படவில்லை. P'9982 ஸ்மார்ட்ஃபோன் பிளாக்பெர்ரி 10.2 ஓஎஸ்  பதிப்புகளில் இயங்கும் என்று பிளாக்பெர்ரி குறிப்பிட்டுள்ளது.

P'9982, 1.5GHz டூயல் கோர் குவால்காம் MSM8960 சிப்செட் மூலம்  இயக்கப்படுகிறது. 2GB ரேம், 4.2-இன்ச் டிஸ்ப்ளே உடன் 768x1280 பிக்சல்கள்  தீர்மானம் கொண்டுள்ளது. பிரீமியம் பிளாக்பெர்ரி ஸ்மார்ட்ஃபோனில் 16GB  inbuilt சேமிப்பு வருகிறது மற்றும் 64GB வரை விரிவாக்க கூடிய மைக்ரோ  SD கார்டு உடன் கொண்டுள்ளது.

பிளாக்பெர்ரி பார்ஸ்ச் டிசைன் P'9982 முக்கிய குறிப்புகள்

1.5GHz டூயல் கோர் குவால்காம் MSM8960 சிப்செட்,
4.2-இன்ச் டிஸ்ப்ளே உடன் 768x1280 பிக்சல்கள் தீர்மானம்,
2GB ரேம்,
பிளாக்பெர்ரி 10.2 ஓஎஸ் பதிப்பு
64GB வரை விரிவாக்க கூடிய மைக்ரோ SD கார்டு

பிளாக்பெர்ரி பார்ஸ்ச் டிசைன் P'9982 ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம்...


            வை பை பிரச்சனைகளை சரிசெய்ய...!
இன்று வயர்லெஸ் இன்டர்நெட் நெட்வொர்க் என அழைக்கப்படும் வை-பை இன்டர்நெட் இணைப்பு நமக்கு, ஓரிடத்தில் அமர்ந்து மட்டுமே இன்டர்நெட் இயக்கும் சிக்கலைத் தவிர்க்கிறது.
ஜாலியாக, வீட்டில் அல்லது அலுவலகத்தில் எந்த இடத்திலும் அமர்ந்து இன்டர்நெட்டில் உலா வர உதவுகிறது. கேபிளை இணைக்காமல், எளிதாக இன்டர்நெட் உலகைக் காண, அனுபவிக்க முடிகிறது.
ADVERTISEMENT
இருப்பினும், இதிலும் பல தொல்லைகளை நாம் சந்திக்கிறோம். இன்டர்நெட் இணைப்பைத் தரும் ரேடியோ அலைகளுக்குப் பல தடைகள் உருவாகின்றன.
சிக்னல் வட்டம் சுருங்குதல், ஹார்ட்வேர் பிரச்னைகள், நமக்கு இணைப்பு சேவையினைத் தரும் நிறுவனம் தரும் பிரச்னைகள் எனப் பலவகைகளில் வை-பி இணைப்பிற்கு தடைகள் கிடைக்கின்றன. இவை கூடுமானவரை ஏற்படாமல் இருக்க சில குறிப்புகள் இங்கு தரப்படுகின்றன.

லேப்டாப்பில் உள்ள வை-பை பட்டன்:

காபிஷாப், வீடு அல்லது அலுவலகத்தில் வை-பை இணைப்பு பெறுவதில் பிரச்னை உள்ளதா? முதலில் உங்கள் கம்ப்யூட்டரில் பிரச்னை உள்ளதா எனப் பார்க்கவும்.
உங்கள் லேப்டாப் கம்ப்யூட்டரில் வை-பை பட்டன் அல்லது ஸ்விட்ச் உள்ளதா எனவும் அது எந்த நிலையில் உள்ளது எனவும் கண்டறியவும். இதனை நீங்கள் அறியாமலேயே அழுத்தி அதன் இயக்கத்தை நிறுத்தியிருப்பீர்கள். எனவே அதனை மீண்டும் அழுத்தி இயக்கவும்.

கம்ப்யூட்டர் மற்றும் ரௌட்டர் ரீ பூட்:

வை-பை பட்டனை அழுத்திய பின்னரும், இன்டர்நெட் இணைப்பு கிடைக்கவில்லை எனில், உங்கள் கம்ப்யூட்டர் அல்லது இன்டர்நெட் இணைப்பு கிடைக்கப் பயன்படுத்தும் சாதனத்தையும், ரௌட்டரையும் ரீ பூட் செய்திடவும்.
இதனால், இந்த சாதனங்களின் ஹார்ட்வேர் பாகங்கள் ஏதேனும் பிரச்னை தருவதாக இருந்தால் அல்லது சாப்ட்வேர் குறையுடன் இயக்கப்பட்டிருந்தால், அவை சரி செய்யப்படும்.
அப்படியும் கிடைக்கவில்லை எனில், ரௌட்டரை இணைக்கும் கேபிள்களை 5 முதல் 10 விநாடிகள் கழற்றி வைத்துவிட்டு, பின்னர் இணைக்கவும்.
இதனை "power cycling" வழி என்பார்கள். மின் சக்தி மற்றும் இணைப்பு அகற்றப்பட்டு, மீண்டும் தரப்படுகையில், இவை சரியாக இயங்கத் தொடங்கும்.

வை பை பிரச்சனைகளை சரிசெய்ய...!


              விண்டோஸ் 7 பைல் மேனேஜிங் டிப்ஸ்...!
தற்போது விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இயக்கப்படும் அனைத்து அப்ளிகேஷன் புரோகிராம்களிலும், விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் வசதியினைப் பயன்படுத்தலாம்.
பலரும் அறியாத ஒரு வசதியை, இங்கு நாம் பார்க்கலாம் நண்பரே இது பெரும்பாலும் பலர் அறிந்திருக்க வாய்பில்லை.
பைல் ஒன்றைத் திறக்கும் போதும், சேவ் செய்திடும்போதும், சிஸ்டமானது, சிறிய அளவில் விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் டூலைப் பயன்படுத்துகிறது.
இதனால் என்ன என்கிறீர்களா? இதனால் தான் நமக்குக் கூடுதல் வசதிகள் கிடைக்கின்றன. பைல் ஒன்றை ""சேவ்'' அல்லது save as கொடுக்கையில், கிடைக்கும் டயலாக் பாக்ஸில் உள்ள காலியான இடத்தில், ரைட் கிளிக் செய்திடவும்.
இங்கு அப்போது காட்டப்படும் போல்டரில் உள்ள பைல்களை எப்படிப் பார்க்க வேண்டும், எப்படி பிரிக்கப்பட வேண்டும், அல்லது குழுவாக அமைக்க வேண்டும் என்பதனைத் தீர்மானித்து மேற்கொள்ளலாம்.
இந்த டயலாக் பாக்ஸில் New என்பதனைக் கூடத் தேர்ந்தெடுத்து, புதிய பைல் ஒன்றைத் திறக்கலாம்.
அதே போல, பைல் ஒன்றை சேவ் செய்கையில், திருத்தங்களுக்கு முந்தைய பதிப்பினையும், திருத்தங்களுடன் கூடிய பதிப்பினையும் தனித்தனியே சேவ் செய்திட விரும்பலாம். இதனை ஒரே முயற்சியில் அமைக்கலாம்.

சேவ் டயலாக் பாக்ஸில் இருக்கையிலேயே, பார்க்க விரும்பும் பைலில் ரைட் கிளிக் செய்து, "Open" தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த பைல் புதிய விண்டோவில் திறக்கப்படும்.
இப்போது எந்த பைலையும் பிரிண்ட் செய்திடலாம், வேறு பெயர் கொடுத்து சேவ் செய்திடலாம், நீக்கலாம் மற்றும் வேறு போல்டர்களுக்கு எடுத்துச் செல்லலாம். இவை அனைத்தையும் அதே "Save" டயலாக் பாக்ஸில் இருந்தபடி மேற்கொள்ளலாம்.

விண்டோஸ் 7 பைல் மேனேஜிங் டிப்ஸ்...!

http://www.ritaxxii.org/wp-content/uploads/headphone-reviews.jpg
செல்பேசிகள் மற்றும் எம்பி3 பிளேயர்களில் கேட்பதற்குப் பயன்படும் ஹெட்போன் மூலம் சூரியசக்தி மின்சாரம் தயாரித்து, அவற்றின் மின் தேவையை நிறைவு செய்யலாம் என்று புதிய ஆராய்ச்சி சொல்கிறது. இந்த புதிய கண்டுபிடிப்பு 2014-ம் ஆண்டு விற்பனைக்கு வரலாம்.
ஹெட்போனின் இரண்டு பக்கங்களின் மேற்பரப்பில் சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றும் மின்கலங்கள் பொறுத்தப்பட்டிருக்கும். இந்த ஹெட்போன்களை மாட்டிக்கொண்டு நீங்கள் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தால், உங்களுக்கு எந்தத் தொந்தரவும் இல்லாமல் மின்சாரம் உற்பத்தி ஆகிக் கொண்டிருக்கும் என்கிறார் இதைக் கண்டுபிடித்த பிரிட்டனைச் சேர்ந்த ஆண்ட்ரூ ஆண்டர்சன்.
ஏற்கெனவே அமெரிக்காவில் மனிதர்கள் நடப்பதை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் கருவி விற்பனையில் உள்ளது. மனிதர்களின் காலணிக்குள் இருக்கும் இந்த சின்னஞ்சிறு கருவி, நடக்கும்போது ஏற்படும் அழுத்தத்தை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கிறது.
இந்தச் சிறப்புக் காலணிகளை அணிந்துகொண்டு ஒருவர் இரண்டரை கிலோமீட்டர் முதல் ஐந்து கிலோ மீட்டர் நடந்தால் ஐபோனை சார்ஜ் செய்யமுடியும்.
உலக அளவில் மாற்று மின்சாரத்தின் தேவை குறித்த விழிப்புணர்வு அதிகரித்துவரும் நிலையில், இது போன்ற வித்தியாசமான கண்டுபிடிப்புகளுக்கான மதிப்பும் கூடி வருகிறது.

ஹெட்போன் மூலம் இலவச மின்சாரம்!

உலகின் கடைசி டைப்ரைட்டர் தொழிற்சாலையும் மூடப்பட்டது - அண்மையில் இந்தச் செய்தியை நாளிதழ்களில் பார்த்தபோது நெஞ்சுக்குள் ஏதோ ஒரு வலி! பேப்பரை சுருட்டி கேன்ட் பாரில் செருகிக் கொண்டு, சைக்கிள் மிதித்து டைப் கிளாஸிற்கு சென்ற காலத்தை மறக்க முடியுமா? டைப் செட்டானதோ இல்லையோ தோழர்கள் பலபேருக்கு அந்தக் காலத்தில் லைஃப் செட்டானது இங்குதானே !
ஹென்றி மில் 1714-ல், முதல் டைப்ரைட்டரை உருவாக்கினார். அதன்படி பார்த்தால் அடுத்த வருடம் டைப்ரைட்டருக்கு மூன்றாவது செஞ்சுரி முடிகிறது. நொடிக்கு நொடி நவீனமயம் நம்மை விழுங்கிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் 300 ஆண்டுகள் ஒரு இயந்திரம் தாக்குப்பிடித்திருக்கிறது என்றால் அதற்காக ஒரு விழாவே கொண்டாடலாம். மனிதனுக்கு குரங்கு எப்படி முன்னோடியோ அதுபோன்று…இன்று நாம் மடிவரை வந்துவிட்ட கம்ப்யூட்டர்களுக்கு டைப்ரைட்டர்கள் தான் மூலாதாரம்.
ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட டைப்ரைட்டர்களில் சிலிண்டர்கள் நட்டுக்குத்தலாக இருந்தன. இதனால், மேட்டரை டைப் செய்து பேப்பரை வெளியில் எடுத்துத்தான் மேட்டரை படிக்கமுடியும். முப்பதாண்டுகள் பழக்கத்துக்கு பிறகுதான், இப்போதுள்ள டைப்ரைட்டரை வடிவமைத்தார் ஹென்றி மில்.
கீ- போர்டும் முதலில் அல்ஃபபெட்டிக்கல் ஆர்டரில் தான் இருந்தது. பின்னர், ஆங்கிலத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் எழுத்துக்களை 'ஹோம் கீஸ்' என்றழைக்கப்படும் நடுவரிசைக்கு கொண்டுவந்தனர். அப்புறம் தான், டைப்ரைட்டர்கள் சரளமாக தடதடக்க ஆரம்பித்தன. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, எஸ்.எஸ்.எல்.சி. பிளஸ் 2-வுக்கு மேல் கல்வியை தொடர முடியாத ஏழைகளுக்கு டைப்ரைட்டிங் கோர்ஸ் ஒரு வரப்பிரசாதம். ஆனால், இப்போது?
அன்று ஹவுஸ் ஃபுல்லாய் இருந்த டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்கள் இன்று பழைய படங்கள் ஓடும் சினிமா கொட்டகைகள் கணக்காய் காத்தாடுகின்றன. பல ஊர்களில் இன்ஸ்டிடியூட்டுகள் மூடப்பட்டு கம்ப்யூட்டர் சென்டர்களாக மறு அவதாரம் எடுத்துவிட்டன. தனியார் நிறுவனங்களில் டைப்ரைட்டர்களை கம்ப்யூட்டர்கள் கபளீகரம் செய்துவிட்டன. ஒருசில அரசு அலுவலகங்களில் மட்டும் இன்னமும் கஷ்டப்பட்டு எழுத்துக்களை கக்கிக் கொண்டிருக்கின்றன டைப்ரைட்டர்கள் .இப்படியே போனால், அடுத்த சில ஆண்டுகளில் டைப்ரைட்டர்களை தொல்லியல் துறை சொந்தம் கொண்டாடி விடும் போலிருக்கிறது.
டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் ஆசிரியர்களை கேட்டால், ‘’ஸ்ட்ரென்த் இல்லை, ஸ்பேர் பார்ட்ஸ் கிடைக்கவில்லை’’ என்று டைப்ரைட்டரைவிட வேகமாக தடக்கிறார்கள். விடுமுறையை வீணடிக்க இந்தக் காலத்து குழந்தைகளுக்கு எத்தனையோ வழிகள் இருக்கையில் அவர்கள் எப்படி டைப் இன்ஸ்டிடியூட்களை தேடி வருவார்கள்? முன்பெல்லாம் எஸ்.எஸ்.எல்.சி. பாஸாகி இருந்தால் தான் தமிழ்நாடு அரசின் தட்டச்சு தேர்வுகளை எழுத முடியும். அப்புறம் எஸ்.எஸ்.எல்.சி. பெயிலானவர்களும் என்றாகி… இப்போது, 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே தமிழ்நாடு அரசின் ஜூனியர், சீனியர் தட்டச்சு தேர்வுகளை எழுதலாம் என்றாகிவிட்டது. அதிலும் ஒரு அதிரடி சலுகையாக 6-ம் வகுப்பு பாஸானவர்கள் தமிழ்நாடு அரசின் ஸ்பீடு டெஸ்ட் மட்டும் எழுதலாம், இரண்டாம் தாள் கிடையாது என்கிற அளவுக்கு டைப்ரைட்டிங் கிளாஸ்களுக்கு அடிமாட்டு ரேஞ்சுக்கு ஆள்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இத்தனை சலுகைகளை வாரித் தெளித்தாலும் டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்களில் '’தட்தடா தட்தடா' என டைப் அடித்துக் கொண்டிருந்த தாவணி பெண்களைப் போல இப்போது டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்களும் அரிதாகி விட்டன. அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஓடிக் கொண்டிருக்கும் இன்ஸ்டிடியூட்களிலும் ஸ்ட்ரென்த் இல்லை. தமிழ்நாடு அரசின் தட்டச்சு தேர்வுகளால் மட்டுமே இன்ஸ்டிடியூட்டுகள் ஓரளவு தள்ளாட்டத்திலாவது ஓடிக் கொண்டிருக்கின்றன. கடந்த 2 ஆண்டுகளாக புதிய டைப்ரைட்டர்கள் விற்பனை இல்லை என்கிறார்கள்.
இன்ஸ்டிடியூட்டுகளில் இப்போது ஓடிக் கொண்டிருக்கும் டைப்ரைட்டர்கள் உள்ள வரை தான் தமிழ்நாடு அரசின் தட்டச்சு தேர்வுகளுக்கு செல்ல முடியும். பழுதாகும் டைப்ரைட்டர்களுக்கு இபோதே ஸ்பேர் பார்ட்ஸ்கள் கிடைக்கவில்லை. ஏற்கெனவே பழுதாகிக் கிடக்கும் டைப்ரைட்டர்களில் நல்ல நிலையில் உள்ள பாகங்களை எடுத்து, ஸ்பேராக பயன்படுத்தி வருகிறார்கள். இதுவும் இன்னும் எத்தனை நாளைக்கோ?
டைப்ரைட்டர்களைப் பற்றிய ஆறுதலான ஒரு செய்தி!
அரசாங்க ரகசியங்கள் வெளியில் கடத்தப்படுவதை தடுக்கும் பொருட்டு, ரஷ்ய அதிபரின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அலுவலகப் பணிகளில் கம்ப்யூட்டர்கள் ஒழிக்கப்பட்டு, மீண்டும் தட்டச்சு எந்திரங்களை பயன்படுத்தும் முடிவை எடுத்திருக்கிறது ரஷ்யா. இதற்காக புதிதாக தட்டச்சு எந்திரங்களை வாங்குவதற்கான அரசாணையில் கடந்த ஜூலையில் கையெழுத்திட்டார் அதிபர் புட்டின்!

லைஃப் கொடுத்த டைப்ரைட்டருக்கு வயது முந்நூறு!

வங்கி கணக்குத் தொடங்கி சமூக வலைதளம் வரை பெரும்பாலான இணையதளங்கள் இன்று பயனீட்டாளர் பெயரையும் பாஸ்வேர்டையும் கேட்டகாமல் உங்களை உள்ளே அனுமதிப்பதில்லை. அதனால், எளிதில் நினைவில் கொள்ளக்கூடிய எண்களையோ நபர்களின் பெயர்களையோ பாஸ்வேர்டாக உருவாக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு.
இப்படியிருக்கையில், உங்கள் பாஸ்வேர்டை தாக்காளர்கள் (ஹேக்கர்) அறிந்துகொள்வதும் மிகவும் எளிது. உங்களுடைய தனிப்பட்ட விவரங்களைத் தெரிந்துக்கொண்டாலே போதும், அவற்றைக்கொண்டு சாஃப்ட்வேர் மூலம் யூகித்தறியும் படலத்தை அரங்கேற்றினால் உங்கள் பாஸ்வேர்டு தாக்காளர் கையில்.
நம்முடைய பாஸ்வேர்டும் எளிதில் நினைவில் கொள்ளக்கூடியதாகவும் இருக்கவேண்டும். அதேசமயம், அது திருட்டும்போகக் கூடாது. என்னதான் செய்வது? இலக்கணப் பிழை செய்யுங்கள் என்கின்றனர், ஆய்வாளர்கள்.
ஆம்! நீங்கள் இலக்கண பிழையோடு உங்கள் பாஸ்வேர்ட் உருவாக்கினால் அவ்வளவு எளிதில் அதனை ஹேக் செய்ய முடியாது என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இதை அமெரிக்காவில் உள்ள கார்னிகி மெல்லன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் அஸ்வினி ராவ் தலைமையிலான ஆய்வுக்குழு நிரூபித்துள்ளது.
இந்தக் குழு நடத்திய ஆய்வில், பாஸ்வேர்டை யூகிக்க பயன்படுத்தப்படும் கிராகிங் என்ற முறையில் இலக்கண சுத்தமாக உருவாக்கப்பட்டுள்ள பாஸ்வேர்டுகள் எளிதாக கண்டுபிடிக்கப்படக்கூடியவை என தெரியவந்துள்ளது. இடையே எண்கள், பெரிய எழுத்து போன்றவற்றை கொண்டு பாஸ்வேர்டை கடினமாகியிருந்தாலும்கூட, அவற்றில் உள்ள இலக்கண தன்மையைக் கொண்டு கிராகிங் சாப்ட்வேர்கள் வெற்றி பெற்று விடுகின்றன. ஆனால், அதே பாஸ்வேர்டு இலக்கண‌ப் பிழை கொண்டதாக இருந்தால் தாக்காளர்களின் சாப்ட்வேரால், அதிலுள்ள எந்த பொதுத்தன்மையையும் கண்டுபிடிக்க முடியாமல் போகிறது. எனவே, உங்கள் பாஸ்வேர்டு பாதுகாப்பாக இருக்கும்.
நீங்கள் உருவாக்கும் இலக்கண பிழையைப்போன்று மற்றொருவரால் உருவாக்க முடியாது என்பதுதான் இந்த உத்தியின் தனிச்சிறப்பு. எனவே, இலக்கணப் பிழை செய்யுங்கள் பாஸ்வேர்டில் மட்டும்.

பாஸ்வேர்டை பாதுகாக்க ஒர் எளிய வழி

கைப்பேசியை வீட்டில் மறந்து வைத்துவிட்டாலோ, அல்லது அது இயங்காமல் போய்விட்டாலோ அடுத்த கணமே நமது வேலைகளில் பாதி முடங்கிவிடுகின்றன. கைப்பேசி தொலைந்துவிட்டாலோ அவ்வளவுதான், கை ஒடிந்தது போலாகி விடுகிறது. இதற்குக் காரணம் கைப்பேசியை தகவல்தொடர்புக்காக மட்டும் நாம் பயன்படுத்துவதில்லை, கைப்பேசி என்பது அலாவூதீன் அற்புத விளக்கு போல இன்றைக்கு மாறிவிட்டது.
ஏனென்றால், பாடலை ரசிக்க மியூசிக் பிளேயர், படம் எடுக்க கேமரா, மின்னஞ்சல் பார்க்க இணையம் என பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களுடன் கைப்பேசிகள் வருகின்றன. அது மட்டுமல்ல பேஜரில் அனுப்பக்கூடிய குறுந்தகவல்கள், கடிகார அலாரம், கால்குலேட்டர் போன்ற எளிய செயல்பாடுகளுக்கும் கைப்பேசிகளையே நாம் நம்பி இருக்கிறோம். கைப்பேசிகளுக்கு என லட்சக்கணக்கான அப்ளிகேஷன்கள் உருவாக்கப்பட்டு வரும் இந்த நேரத்தில், கைப்பேசிகள் குட்டி கணினியாகவே மாறி வருகின்றன.
குறிப்பிட்ட ஒரு செயல்பாட்டுக்காக உருவாக்கப்படும் ஒரு கருவி, இப்படி வேறு பல மின்னணு கருவிகளின் வசதிகளுடன் இணைந்து வருவதுதான் ஒருங்கிணைந்த கருவி (converged device). தொழில்நுட்ப உலகில் இதுதான் அடுத்த பெரிய விஷயமாக இருக்கப் போகிறது. நாம் அனைவரும் நீண்டகாலமாகப் பயன்படுத்தி வரும் ஒருங்கிணைந்த கருவி கைப்பேசி.
இவ்வளவு காலம் கைப்பேசிகளில் செய்து வந்த வேலைகளை இனிமேல் டிவியிலும் செய்ய முடியும். டிவியில் ஆன்லைன் கேம் விளையாடலாம், உங்கள் டிராப்பாக்ஸில் உள்ள கோப்புகளை எடுத்துப் பார்க்கலாம், மாற்றம் செய்யலாம், மின்னஞ்சல்களைப் பார்க்கலாம்... அது மட்டுமில்லாமல் அதன் அடிப்படை அம்சங்களும்கூட ஹெச்.டி. தரம், 3 டி வீடியோக்களை பார்க்கக்கூடிய அளவுக்கு மேம்படப் போகின்றன. இவற்றுக்கு ஸ்மார்ட் டிவி என்ற பெயரும் வைக்கப்படலாம்.
இது எப்படி சாத்தியம்? ஆண்ட்ராய்டு என்ற ஆபரேட்டிங் சிஸ்டம்தான் இதற்கு காரணகர்த்தா. தொழில்நுட்ப உலகில் இந்த ஆண்ட்ராய்டு புதிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. இன்றைக்கு பலரது கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்களுக்கு அடிப்படை இந்த ஆண்ட்ராய்டுதான். இன்றைக்கு ஒவ்வொரு மின்னணு கருவியும், ஸ்மார்ட்போன்களைப் போலவே மாறும் கனவில் மிதந்து வருகின்றன.
இனிமேல் கேமராவில் இணையத்தைப் பார்க்கலாம், போட்டோக்களை ஷேர் பண்ணலாம், ஏன் விளையாடுவதற்கான வசதிகள்கூட இந்த ஆண்டு வந்துள்ளன. ஒரு கணினியில் செய்யும் எல்லா வேலைகளையும் இனிமேல் டிவியில் செய்ய முடியும். டேப்ளட் கணினிகளை கைப்பேசியாகவும் பயன்படுத்த முடியும்.
புதிய வகை ஆண்ட்ராய்ட் கேமராக்கள், ஒரு ஸ்மார்ட்போனில் இருக்கும் செயல்பாடுகள் அனைத்தையும் உள்ளடக்க முயற்சித்து வருகின்றன. நிகான் எஸ் 800 சி, சாம்சங் கேலக்ஸி கேமராக்களைக்கொண்டு படத்தை எடுப்பது மட்டுமில்லாமல் படங்களை எடிட் பண்ணலாம், ஷேர் பண்ணலாம். இதில் சாம்சங் சிம் கார்டுடன் வருவதால், வைஃபை இணையத் தொடர்பும் தேவையில்லை.
ஆண்ட்ராய்டு ஆபரேட்டிங் சிஸ்டம்தான் ஒருங்கிணைந்த கருவிகளின் புதிய படைக்கு மிகப் பெரிய பலமாகவும் பாலமாகவும் செயல்பட்டு வருகிறது. எந்த ஒரு கருவி திரையுடன் இருக்கிறதோ, அதில் எல்லாம் ஆண்ட்ராய்டை சேர்த்துவிட முடியும்.
விண்டோஸ் 8இன் வருகையும் இது போன்ற புதிய கலப்புச் சேவைகளின் பயன்பாட்டை அதிகரிக்க உள்ளது. இனிமேல் லாப்டாப்பில் இருந்து தொலைபேச முடியும். ஏன் உங்கள் லாப்டாப்பே, ஒரு ஸ்மார்ட்போனாகவும் செயல்படும். விண்டோஸில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளதால், ஒருங்கிணைந்த கருவிகளை மக்கள் ஏற்றுக்கொள்ளும் தன்மையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் புதிதுபுதிதாக சந்தையில் வந்து விழும் மின்னணு கருவிகளை இயக்குவது எப்படி என்பதைத் தெரிந்துகொள்வதே நுகர்வோருக்கு பெரும்பாடாக இருப்பதால், ஒருங்கிணைந்த கருவிகள் வேகமாகப் பிரபலமாகி வருகின்றன. மின்னணு கருவிகளின் மீது தீவிர காலத் கொண்ட ஒரு பயனர் ஸ்மார்ட்போன், டேப்ளட் கணினி, லேப்டாப் அல்லது அல்ட்ரா புக் ஆகியவற்றை வைத்துக்கொள்ள ஆசைப்படுகிறார். எனவே, இதற்கான தேவை அதிகரித்து வருவதால், கருவிகளை சங்மிக்கச் செய்யும் இந்தப் போக்குக்கு நிறுவனங்கள் வேகமாக மாறி வருகின்றன.
ஒருங்கிணைந்த கருவிகள் குரல்வழி தகவல்தொடர்பு வசதிகளையும், தகவல் சார்ந்த செயல்பாடுகளையும் ஒன்றிணைக்கும் புள்ளியாக உள்ளன. இதன் மூலம் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் அனைத்து வகைகளிலும் தகவல்தொடர்பை பெற முடிகிறது. எதிர்காலத்தில் கையில் வைத்திருக்கும் ஒரேயொரு கருவி மூலம் எல்லா நேரமும், எல்லா தகவல்தொழில்நுட்ப அம்சங்களையும் பயன்படுத்தக்கூடிய வசதிகளை பயனர்கள் எதிர்பார்ப்பார்கள். அதனால் டேப்ளட் கணினி, நோட்புக் கணினி, ஸ்மார்ட்போன் போன்றவற்றின் நிபுணத்துவத்தை அதிகரிக்க நிறுவனங்கள் தீவிரமாக முயற்சித்து வருகின்றன.
ஆனால், ஒருங்கிணைந்த கருவிகளின் முதல் அலையில் வந்துள்ள தயாரிப்புகள், தொழில் உற்பத்தி நிறுவனங்களுக்கு கடுமையான நெருக்கடிகள் இருப்பதை வெளிச்சமிட்டு காட்டியுள்ளன. ஒருங்கிணைந்த கருவிகளில் அனைத்து வசதிகளையும் சிறப்பாக ஏற்படுத்துவதற்கு நிறுவனங்கள் திணறி வருகின்றன. எடுத்துக்காட்டாக, ஆண்ட்ராய்டு கேமராக்களில் நிறைய ஒருங்கிணைந்த வசதிகள் இருக்கின்றன என்றாலும்கூட, அவை தேர்ந்த கேமராக்களாக இல்லை.
ஒருங்கிணைந்த கருவிகளின் மற்றொரு பின்னடைவு, பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாததுதான். சில கருவிகளில் ஆண்ட்ராய்டு ஆபரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்துவதற்கு பயனர்கள் தங்கள் சொந்த விவரங்களை அளித்தாக வேண்டும். சைபர் குற்றவாளிகள் இந்த கருவிகளை குறி வைத்துத் திருடி, தனிப்பட்ட தகவல்களை கைப்பற்ற வாய்ப்பு உள்ளது.
அதேபோல இணையத் தொடர்பு இருக்கும் என்பதால் கேமரா, டிவி போன்றவை வைரஸ் தொல்லையால் பாதிக்கப்படவும் வாய்ப்பு அண்டு. எனவே, ஒருங்கிணைந்த கருவிகளுக்கு ஆண்டி வைரஸ் பாதுகாப்பும் அவசியம்.
ஒருங்கிணைந்த கருவிகளில் இப்படி களையப்பட வேண்டிய, மேம்படுத்தப்பட வேண்டிய பிரச்சினைகள் நிறைய இருந்தாலும், மின்னணு கருவிகளின் எதிர்காலம் ஏதோ ஒரு வகையில் ஒருங்கிணைந்த அம்சத்தை சார்ந்தே இயங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. ஒரேயொரு செயல்பாட்டை மட்டும் செய்யும் கருவிகள், வேகமாக காலாவதி ஆகி வருகின்றன. எதிர்காலத்தில் ஹெட்போன், மவுஸ் போன்ற துணைக்கருவிகள் மட்டுமே தனிச் செயல்பாட்டுக்கு உரியவையாக இருக்கலாம். ஆனால், ஒருங்கிணைந்த கருவிகளின் தாக்கம் அவற்றையும் விட்டு வைக்குமா என்பது இப்போது தெரியவில்லை. காத்திருப்போம்.

கேட்ஜெட் உலகில் புதிய புரட்சி

கூகுள் நிறுவனத்தின் வீதிகளைப் படம் பிடிக்கும் கார் (Google Street View Car) விபத்துக்குள்ளான சம்பவம் இந்தோனேசியாவின் போகொர் நகரத்தில் இடம்பெற்றுள்ளது.
கூகுளின் ஸ்ட்ரீட் வியூ (Google Street View) எனப்படும் வீதிகளைப் பார்வையிடும் வரைபட தளத்துக்கான வீடியோ படங்களைப் பிடிக்கும் காரே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இரண்டு பஸ்கள் மற்றும் ஒரு ட்ரக் என்பன சேதமடைந்திருப்பதாகவும் உயிர் சேதங்கள் பற்றி இன்னும் தெரியவரவில்லை என்றும் இந்த விபத்தை தாம் பெரும் கவனத்துடன் கையாள்வதாகவும் இந்தோனேசியாவின் கூகுள் தொடர்பாளர் விஷ்ணு மஹ்மூட் தெரிவித்துள்ளார்.

கூகுள் வீதி கமெரா கார் (Google Street View Car) விபத்து

புது தில்லியில் செவ்வாய்க்கிழமை நிறுவனத்தின் புதிய நோட்-3 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் சாம்சங் நிறுவனத்தின் மொபைல் மற்றும் ஐடி பிரிவுத் தலைவர் விநீத் தனேஜா (இடது), இயக்கநர் மனு சர்மா.செல்போன் தயாரிப்பில் முன்னணியில் உள்ள கொரியாவின் சாம்சங் நிறுவனம் அதிக செயல்பாடுகளைக் கொண்டுள்ள நோட் 3 எனும் உயர்ரக ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.  வெறுமனே போனாக மட்டுமின்றி பல்வேறு பயன்பாடுகளுக்கு இதைப் பயன்படுத்தும் வகையில் பல சிறப்பம்சங்களை உள்ளடக்கியதாக இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆண்ட்ராய்ட் இயங்கு தளத்தில்செயல்படும் இந்த ஸ்மார்ட்போனின் எடை வெறும் 168 கிராம்தான். 5.7 அங்குல திரை, 13 மெகாபிக்சல் கேமரா ஆகியன இதன் சிறப்பம்சம், கருப்பு, வெள்ளை, இளம் சிவப்பு ஆகிய கண்கவர் நிறங்களில் இது வெளிவந்துள்ளது. 3200 எம்ஏஹெச் பேட்டரி 24 மணி நேரம் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்கிறது.
இந்நிறுவனம் முதல் முறையாக கையில் அணியக்கூடிய தண்ணீர் புகாத கேலக்ஸி கியரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ. 22,900 ஆகும். இந்த இரு தயாரிப்புகளும் செப்டம்பர் 25 ம் தேதி முதல் சந்தையில் இந்தியச் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும்.
விற்பனையை அதிகரிக்க நோட் 3 ஸ்மார்ட் போனுக்கு எளிய தவணை முறைத் திட்டத்தையும் இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 3ஜியில் செயல்படும் வகையிலானது நோட் 3 ஸ்மார்ட்போன். இந்த செல்போனில் திருடுபோனால் கண்டறியும் வசதியும் உள்ளது.

சாம்சங் நோட் 3 ஸ்மார்ட் போன் அறிமுகம்

(கோப்புப் படம்)சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தை சிங்கப்பூர் அரசு தொடங்கியுள்ளது.
சிங்கப்பூரின் 50 ஆவது சுதந்திர தினம் வரும் 2015 ஆம் ஆண்டு கொண்டாடப்படவுள்ளது. அதற்குள், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை டிஜிட்டல் மயமாக்கி ஆவணப்படுத்தும் முயற்சியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளது.
இது தொடர்பாக ‘தி ஸ்ட்ரெய்ட் டைம்ஸ்’ இதழில் செய்தி வெளியாகி யுள்ளது. கடந்த 1970 மற்றும் 1980ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்ட மற்றும் சிங்கப்பூர் தமிழ் வானொலியில் ஒலிபரப்பான பாடல்கள், கவிதை களும் டிஜிட்டல் மயமாக்கப்படு கின்றன.
இது தொடர்பாக திட்டத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அருண் மகிழ்நன் கூறுகையில், “தமிழ் டிஜிட்டல் புராதனக் குழு, தேசிய நூலக வாரியத்துடன் இணைந்து இத்திட்டத்தை மேற்கொள்கிறது. சிங்கப்பூர் மற்றும் வெளிநாடுகளில் இருப்பவர்கள் இந்தப் படைப்புகளை எளிதில் கையாள முடியும். 1800 ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் தமிழப் புத்தகங்கள் பதிப்பித்து வெளியிடப்படுகின்றன” என்றார்.

தமிழ் இலக்கியங்களை டிஜிட்டல் மயமாக்கும் சிங்கப்பூர்

தனி மரம் தோப்பாகாது என்பது பழமொழி. தனி ட்வீட் அதிக தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதை ட்விட்டர் மொழியாக வைத்து கொள்ளலாம். அதே போல கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதையும் கூடி ட்வீட் செய்தால் உண்டு நன்மை என புது மொழியாக்கி கொள்ளலாம். இப்படி கூடி ட்வீட் செய்து பல அற்புதங்கள் நிகழ்ந்திருக்கின்றன. குறும்பதிவு சேவையான ட்விட்டரை தீவிரமாக பயன்படுத்தும் எவரும் இந்த கருத்துக்களை ஏற்றுக்கொள்வார்கள். அந்த அளவுக்கு ட்விட்டர் உலகில் 'ஹாஷ்டேக்' குறியீடு பயனுள்ளதாக விளங்குகின்றன.
குறிப்பிட்ட தலைப்பிலான குறும்பதிவுகளை அதாவது ட்வீட்களை ஒன்றாக பார்க்க உதவும் அடையாளமாக ஹாஷ்டேக் அமைந்துள்ளன. ட்விட்டரில் ஹாஷ்டேகுகளை எளிதாக கண்டு கொள்ளலாம். எண்களை குறிக்க பயன்படுத்தப்படும் # எனும் குறியீட்டுடன் இவை கண்சிமிட்டும். உதாரணம் # ஹாஷ்டேக்!
ஷாஷ்டேகுகள் பொதுவாக ஒரு சொல்லாகவோ அல்லது இரண்டு, மூன்று சொற்களைக் கொண்டதாகவோ இருக்கும். இதற்கு உதாரணம் #prayforpeace சொல்லோ சொற்றொடரோ அவை ஒரு மைய கருத்தை சுட்டிக்காட்டுவதாக அமைந்திருக்கும்.
ஒரு விதத்தில் ட்விட்டர் சேவையை பயனுள்ளதாக ஆக்குவதே ஹாஷ்டேக் தான்.
காலையில் சாப்பிட்ட சிற்றுண்டி போன்ற ஒன்றுக்கும் உதவாத தகவல்களை பகிர்ந்து கொள்வதற்காக அறிமுகம் செய்யப்பட்ட ட்விட்டர் , அதன் பிறகு இணைய உலகின் இன்றியமையா சேவையாக உருவெடுத்து வியக்க வைத்து வருகிறது. செய்தி வெளியீட்டு சாதன‌மாக, உரையாடலுக்கான வழியாக, உடனடித் தகவல் பரிமாற்ற வாகனமாக என பலவிதங்களில் ட்விட்டர் அவதாரம் எடுத்திருக்கிறது.
தினுமும் 50 கோடி குறும்பதிவுகள் ட்விட்டரில் வெளியாகின்றன. இது கடந்த ஆண்டு அக்டோபர் மாத புள்ளிவிவரம். இப்போது இன்னும் அதிகரித்திருக்கும். 2012 ஜூன் மாதம் வெளியிடப்பட்ட புள்ளி விவரத்தின் படி தினமும் 40 கோடிகள் குறும்பதிவுகள் வெளியாகி கொண்டிருந்தன என்றால் தற்போது எந்த அளவுக்கு வளர்ந்திருக்கக்கூடும் என்று யூகித்துக்கொள்ளலாம். ட்விட்டரில் 50 கோடி பயனாளிகள் இருக்கின்றனர். இவர்களில் 20 கோடி பேர் அடிக்கடி குறும்பதிவிடும் தீவிர பயனாளிகள்.
இது போன்ற எண்ணிக்கைகள் ட்விட்டரின் செல்வாக்கை மட்டும் உணர்த்தவில்லை; ட்விட்டர் எத்தனை குழப்பமானதாக இருக்கும் என்பதையும் தான் உணர்த்துகின்றன. ஆம், தினமும் கோடிக்கணக்கில் குறும்பதிவுகள் வெளியாகி ட்விட்டர் கடலில் கலந்து கொண்டிருக்கும் நிலையில் நமக்கு தேவையான குறும்பதிவை அடையாளம் காண்பது எப்படி? ஒவ்வொருவரும் தங்களுக்கு ஆர்வம் உள்ள நபர்களின் ட்விட்டர் கணக்குகளை பின் தொடரலாம் தான். ஆனால் இது சின்ன வட்டம். ட்விட்டர் பெருவெளியில் வெளியாகிக் கொண்டிருக்கும் எண்ணற்ற குறும்பதிவுகளில் முக்கிய குறும்பதிவுகளை அடையாளம் காண்பது எப்படி?
இந்த குழப்பத்தை தான் ஹாஷ்டேக் தீர்த்து வைக்கின்றது. குறும்பதிவுகளை வெளியிடும்போது அவற்றின் நோக்கம் அல்லது மையக்கருத்தை குறிக்கும் பதத்தை ஹாஷ்டேகாக அதற்கு முன்னர் சேர்த்து குறிப்பிடும் போது, மற்றவர்களும் அந்த பதத்தை தங்கள் குறும்பதிவுகளில் சேர்த்துக் கொண்டால், அந்தக் குறும்பதிவுகள் அனைத்தும் அவற்றுக்காக உருவாக்கப்பட்ட ஹாஷ்டேகால் ஒன்றிணைக்கப்பட்டு விடும். அதன் பிறகு அந்த தலைப்பிலான குறும்பதிவுகள் அனைத்தையும் ஒரே இடத்தில் பார்க்கலாம். அது மட்டும் அல்ல, இவை மேலெழும் தலைப்புகளாக (டிரெண்டிங் டாபிக்ஸ்) ட்விட்டரின் அதிகாரபூர்வ தளத்திலும் அடையாளம் காட்டப்படும். இந்த தலைப்புகளின் பட்டியலை பார்த்தாலே குறிப்பிட்ட நேரத்தில் ட்விட்டர் வெளியில் எந்த தலைப்பு அதிக விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிந்து கொள்ளலாம்.
ஆக, ட்விட்டர் வெளியில் சிதறிப்போகும் குறும்பதிவுகளில் பொதுத்தன்மை கொண்டவற்றை ஒன்றாக சேர்த்து, கொத்தாக முன்வைக்கின்றன ஹாஷ்டேகுகள். ட்விட்டர் இறைச்சலுக்கு மத்தியில் தனித்து எழும் குரலைப் புரிந்து கொள்ள உதவும் ஹாஷ்டேக் பயன்படும் விதம் ட்விட்டருக்கே புதிய அர்த்தத்தை கொடுத்துள்ளது.
ஹாஷ்டேகை பலவிதங்களில் பயன்படுத்தலாம். ஆன்லைனில் பேசப்படும் தலைப்புகளை அடையாளம் காண உதவும் ஹாஷ்டேகுகள் ஆன்லைனில் உரையாடலை உருவாக்கவும் கைகொடுக்கின்றன.அதாவது ஹாஷ்டேக் மூலமே குறிப்பிட்ட தலைப்பில் விவாதத்தை உருவாக்கலாம். இந்த பண்பே ஹாஷ்டேகை ஆன்லைன் ஆயுதமாக்கியிருக்கிறது.எந்த ஒரு நிகழ்வு குறித்து ஆதரவு தேவை என்று ட்விட்டர் பயனாளிகள் கருதுகின்றனரோ, அதற்கான ஹாஷ்டேகை உருவாக்கி ஒரு குறும்பதிவு மூலம் ஆரம்பித்து வைத்தால் போதும். மற்ற ட்விட்டர் பயனாளிகளும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து குறும்பதிவிட்டு அதற்கான ஹாஷ்டேகையும் குறிப்பிடத் துவங்கினால் ட்விட்டர் வெளியில் அந்த தலைப்பு பற்றிக்கொள்ளும். அதன் பிறகு அந்த விவாதத்தை யாராலும் அலட்சியப்படுத்த முடியாது.
எகிப்து நாட்டில் சமூக ஊடகம் மூலமான புரட்சி வெடித்த போது அதன் மையமாக இருந்தவை ஹாஷ்டேகுகள் தான். எகிப்தில் மாற்றம் வேண்டி தாஹீர் சதுக்கத்தில் 2011 ஜனவரி 25 ம் தேதி மக்கள் திரண்டதை அடுத்து, இந்த எழுச்சி குறித்து அறிவிக்கும் குறும்பதிவுகள் #ஜன்25 எனும் பதத்தோடு வெளியாகி ட்விட்டரில் முன்னிலை பெற்றன. #எகிப்து போன்ற ஹாஷ்டேகுகளும் அந்நாட்டின் கொந்தளிப்பை உலகிற்கு உணர்த்தின.
இதே போலவே தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படைத் தாக்குதல் அதிகரித்த போதும் ட்விட்டரில் #TNfishermen மற்றும் #SaveTnFishermen எனும் ஹாஷ்டேகுகளுடன் குறும்பதிவுகள் பகிரப்பட்டு மக்கள் மன‌நிலை ட்விட்டரில் எதிரொலித்தது. இந்த குறும்பதிவுகள் ஒரு இயக்கமாகவே உருவாகி மீனவர்கள் பிரச்சினையை மையப்படுத்தின.
தில்லியில் மருத்துவக்கல்லூரி மாணவி கொடுர வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட போது தேசத்தின் கொந்தளிப்பு ட்விட்டரில் #தில்லிகேங்ரேப் எனும் தலைப்பில் வெளிப்பட்டது.
போராட்ட களத்தில் மட்டும் அல்லாமல் அரசியல் களத்திலும் ஹாஷ்டேக் ஒரு பிரச்சார கருவியாக பயன்படுத்தப்படுகிறது. பா.ஜ.க சார்பில் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி முன்னிலை பெற்றதில் ட்விட்டருக்கு முக்கிய பங்குண்டு. மோடியின் ஆதரவாளர்கள் ட்விட்டரில் அவர் சார்பாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.அவர்கள் அப்போது கையில் எடுத்துக்கொண்டதும் பொருத்தமான ஹாஷ்டேகுகள் தான். 2013 ஏப்ரல் மாதம் மோடி தில்லியில் ஃபிக்கி பெண்கள் மாநாட்டில் உரையாடிய போது அவர் ஏற்படுத்திய தாக்கத்தை குறிக்கும் முயற்சியாக #மோடிஸ்டிராம்ஸ்ஃபிக்கி எனும் ஹாஷ்டேகுடன் குறும்பதிவுகள் வெளியாயின.
ஆனால் காங்கிரஸ் தரப்பில் மோடியை விமர்சிக்கும் வகையில் #ஃபெகு எனும் ஹாஷ்டேக் உருவாக்கப்பட்டு பா.ஜ.க முயற்சிக்கு பதிலடியாக அமைந்தது. இதே மருந்தை பா.ஜ.க காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி சி.ஐ.ஐ மாநாட்டில் உரையாற்றிய போது அவரை விமர்சிக்கும் வகையில் #பப்பு எனும் ஹாஷ்டேகுடன் குறும்பதிவுகளை வெளியிட்டன.
திரைப்படங்கள் வெளியாகும் போதும் ஹாஷ்டேக் வாயிலாக ரசிகர்கள் வரிந்து கட்டிக்கொண்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்வதுண்டு. ஆகஸ்டு மாதம் ஷாருக்கானின் 'சென்னை எக்ஸ்பிரஸ்' படம் வெளியானது. ட்விட்டரில் இந்த படம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அதே நாளில் வெளியாக இருந்த நடிகர் விஜயின் 'தலைவா' படம் வெளியாகாமல் தாமதமானது. விஜய் ரசிகர்கள் இது பற்றி #Thalaivaa எனும் ஹாஷ்டேக் கீழ் ஒன்று சேர்ந்து கருத்துக்களை வெளியிடத் துவங்க ஷாருக்கின் 'சென்னை எக்ஸ்பிரஸ்' ட்விட்டரில் பின்தங்கிப்போனது.
சமீபத்தில் ரஜினிகாந்தின் 'கோச்சடையான்' முன்னோட்டம் வெளியான போது #Makewayforrajinisir எனும் ஹாஷ்டேக் முன்னிலை பெற்று அவரது செல்வாக்கை பறைசாற்றியது.
இணையத்தில் துடிப்புடன் இயங்கும் அஜித் ரசிகர்கள் யாருமே எதிர்பாராத நேரத்தில் #Arrambam, #Ajith என 'தல' தொடர்புடைய ஹேஷ்டேக்குகளை தேச அளவில் டிரெண்டில் கொண்டுவந்துவிடுவதும் சமீபகாலமாக நடக்கிறது.
சச்சினின் நூறாவது சதம், ஓய்வு அறிவிப்பு, ஒலிம்பிக்ஸில் உசேன் போல்ட்டின் சாதனை போன்ற சர்வதேச நிகழ்வுகளின் போதும் இவற்றைக் கொண்டாடும் ஹாஷ்டேகுகள் உருவாக்கப்பட்டுள்ளன. வர்த்தக பிராண்டுகளும் விளம்பர நோக்கில் ஹாஷ்டேகுகளை உருவாக்குகின்றன. நுகர்வோர் நினைத்தாலும் அவற்றை ஹாஷ்டேக் வாயிலாக தட்டிக்கேட்கலாம்.
ஆக, ஹாஷ்டேக் என்பது இணையத்தின் புதிய குறியீடாக உருவெடுத்துள்ளது.

ஹாஷ்டேக் எனும் ஆன்லைன் ஆயுதம்!

கண்காணிக்கப்படுவதும், கவனிக்கப்படுவதும்தான் இப்போதைய இணைய யதார்த்தம். தேடியந்திரங்களில் துவங்கி மின்வணிக தளங்கள் வரை எல்லா விதமான தளங்களும் இணையவாசிகளின் ஒவ்வொரு அடியையும் கவனித்து குறிப்பெடுக்கின்றன. அதாவது டிராக் செய்கின்றன. பொருத்தமான விளம்பரத்தை அளிக்கவும், பயனாளியின் எதிர்பார்ப்பை புரிந்துகொண்டு செயல்படவும் இவ்வாறு செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் அரசுகள் இமெயில் வாசகங்களையும் தேடல் பதங்களையும் கண்காணித்து வருவதாக சொல்லப்படுகிறது.
இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டுமா? அதற்கான எளிய வழியை மொசில்லா (Mozilla) முன் வைத்துள்ளது. பிரபலமான இணைய உலாவியான பயர்பாக்ஸ் பின்னே இருக்கும் மொசில்லா அமைப்பு இதற்காக 'லைட்பீம்' (Light Beam) எனும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
பயர்பாக்ஸ் உலாவிக்கான சேர்க்கையாக (add on) அறிமுகமாகியுள்ள இந்த சேவையை பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் இணையத்தில் உலாவும்போது எப்படி எல்லாம் உங்களைப்பற்றிய விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த கண்காணிப்பின் விவரங்களை இந்த சேவை காட்சிரீதியாக தோன்றச் செய்கிறது.
லைட்பீம் சேவையை உலாவியில் இயக்கியதும், இணையதளத்திற்கு செல்லும் போதெல்லாம் அந்த தளத்தில் இருந்து உங்களைப் பற்றிய விவரங்கள் எப்படி சேகரிக்கப்படுகின்றன என்பது வரைபட சித்திரமாக காட்டப்படுகிறது. எந்த தளங்கள் எல்லாம் தகவல்களை சேகரிக்கின்றன என்பதை இந்த வரைபடம் உணர்த்தும். முதல் தளத்தில் இருந்து அடுத்த தளத்திற்கு செல்லும் போது அந்த தளத்தில் எப்படி விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன என்பதும், இந்த தளங்களிடையே உள்ள பரஸ்பர தொடர்பையும் தெரிந்து கொள்ளலாம்.
குறிப்பிட்ட பகுதியில் கிளிக் செய்தால் கண்காணிப்பின் இயல்பு பற்றிய மேலதிக விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இந்த வரைபடத் தோற்றம் தவிர, கடந்த 24 மணி நேரத்தில் எந்த தளங்கள் விவரங்களை சேகரித்தன என்பதையும் தெரிந்து கொள்ளும் வசதி இருக்கிறது.
இணையத்தில் கண்காணிப்பு எப்படி செயல்படுகிறது, நீங்கள் உலாவும் தளங்கள் எப்படி மற்ற தளங்களுடன் உங்கள் இணைய நடவடிக்கை விவரங்களை பகிர்ந்து கொள்கின்றன போன்ற விஷயங்களை இதன் மூலம் நீங்கள் புரிந்து கொள்ளலாம். கண்காணிப்பை அடையாளம் காட்டும் இந்த சேவை மூலமான தகவல்கள் எதுவுமே சேகரிக்கப்படுவதில்லை என்கிறது மொசில்லா. ஆனால் நீங்கள் விரும்பினால் இந்த விவரங்களை பகிர்ந்து கொள்ள முன் வரலாம். கண்காணிப்பு விவரங்களை புரிந்து கொள்வதற்கான பொது கையேட்டிற்கு இதன் மூலம் பங்களிக்கலாம் என்கிறது மொசில்லா.
கடந்த 2011-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கொல்யூஷன் எனும் வசதியின் நீட்சியாக இந்த லைட்பீம் உருவாகி இருக்கிறது.

இணையத்தில் கண்காணிப்பது யார்?- அடையாளம் காட்டும் லைட்பீம்!

வருவாய் மற்றும் லாபத்தில் எப்படியோ தெரியாது. ஆனால், ஊழியர்களின் எண்ணிக்கையை பொருத்தவரை மைக்ரோசாஃபட் நிறுவனத்தை அமேசான் நிறுவனம் முந்தியிருக்கிறது.
முன்னோடி இ-காமரஸ் நிறுவனமான அமேசான் தனது மூன்றாவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து இரண்டாவது காலாண்டாக நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கும் இந்த நிதி நிலை முடிவுகளில் ஒளிந்திருக்கும் முக்கிய மைல் கல்லை, தி நெக்ஸ்ட்வெப் தொழில்நுட்ப செய்திதளம் கண்டுபிடித்து சுட்டிக்காட்டியுள்ளது.
அமெரிக்காவின் சியாட்டிலை தலைமயிடமாக கொண்ட அமேசான் நிறுவனத்தில் சர்வதேச அளவில் பணியாற்றும் ஊழியர்கள் எண்ணிக்கை 1,09,800 ஆக உயர்ந்திருப்பதே அந்த மைல்கல். இதில் கவனிக்க வேண்டியது என்ன என்றால் அமேசான் ஊழியர் படை எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்திருப்பது மட்டும் அல்ல, கடந்த மூன்று மாதங்களில் 12,800 பேரை வேலைக்கு சேர்த்திருப்பதுதான்.
இதன் மூலம் மைக்ரோசாப்டின் ஊழியர்கள் எண்ணிக்கையை அமேசான் முந்தியிருக்கிறது. மைக்ரோசாப்டில் 1,00,518 பேர் பணியாற்றுவதாக அதன் இணையதளம் தெரிவிக்கிறது.
மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் ஆகிய இரண்டு நிறுவனங்களின் செயல்பாடு மற்றும் ஊழியர் தேவை மாறுபட்டவை என்றாலும் எண்ணிக்கை அளவில் அமேசான் முந்தியிருப்பது குறிப்பிடத்தக்கது, கவனிக்கத்தக்கது. அது மட்டும் அல்ல, அந்நிறுவனம் சமீப காலங்களில் புதிதாக ஊழியர்களை நியமிப்பதில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதாக புரிந்து கொள்ளலாம்.
அமேசன்.காம் இணையதளத்தில் 270 பக்கத்துக்கும் மேல் வேலை வாய்ப்பு பட்டியல் நீண்டிருக்கிறது.அதற்காக அமேசானில் எளிதாக வேலை கிடைத்துவிடும் என்று நினைத்து விடுவதற்கில்லை. அமேசானில் ஒரு பிரிவில் வேலைக்கு சேர 8 மணி நேரம் நேர்காணலை எதிர் கொண்ட ஊழியர்கள் எல்லாம் இருக்கின்றனர் என்று சொல்லப்படுகிறது.
இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் அமேசான் தனது வர்த்தகம் மற்றும் கவனத்தை தீவிரமாக்கி இருக்கிறது.

மனித வளம்: மைக்ரோசாஃப்டை முந்தியது அமேசான்!

விஞ்ஞான வளர்ச்சி எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பது அடிப்படை அறிவியல் உண்மை. காகிதத் தயாரிப்புக்காக மரங்கள் வெட்டப்படுவதை, இதற்கு நல்ல உதாரணமாகக் கூறலாம். காகிதத்துக்காக காடுகளில் ஏராளமான மரங்கள் வெட்டப்படுகின்றன. இதைத் தடுப்பதற்காக உருவான தொழில்நுட்பமான "மறுசுழற்சி காகிதத் தாயாரிப்பு" தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே, பயன்படுத்திய காகிதத்தையே, மீண்டும் காகிதமாக மாற்றுவதுதான் இதன் சிறப்பு!
பெரும்பாலும் எல்லா நாடுகளிலும் மரம், கரும்புச்சக்கை, மூங்கில், வைக்கோல் ஆகியவற்றை மூலப்பொருளாகக் கொண்டே காகிதம் தயாரிக்கப்படுகிறது. மரத்தை வெட்டி, அதை கூழாக்கி காகிதம் தயாரிக்கும் முறையே அதிகம் பின்பற்றப்படுகிறது. காகிதத் தயாரிப்புக்காக மரங்கள் வெட்டப்படுவதற்கு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுவதை குறைக்கும் வகையில் காகிதம் தயாரிக்கும் ஆராய்ச்சிகள் உலக அளவில் நடந்தன. இதன் விளைவாக உருவான மறுசுழற்சி காகிதத் தயாரிப்பு தொழில்நுட்பம் பிரபலமானது.
பயன்படுத்திய பின் தூக்கியெறியப்படும் காகிதத்தில் இருந்தே, மீண்டும் காகிதத்தைத் தயாரிக்கும் தொழில்நுட்பம்தான் மறுசுழற்சித் தொழில்நுட்பம். இது அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. சாலையோரம், தெருக்களில் தூக்கி எறியப்படும் காகிதக் குப்பைகளும், கல்வி நிலையங்கள், அலுவலகங்கள், வணிக நிறுவனங்களில் கழிக்கப்படும் காகிதங்களுமே இதற்கு மூலப்பொருள்.
மறுசுழற்சி முறையில் காகிதம் தயாரிக்க, ஏற்கெனவே உள்ள உற்பத்தி இயந்திரங்களுடன் டீ-இன்கிங் (காகிதத்தில் அச்சேறிய மையை அழிக்கும் தொழில்நுட்பம்) என்ற நவீன உள்கட்டமைப்பு வசதியை நிறுவினாலே, புதிய தொழில்நுட்பத்துக்கு மாறிவிட முடியும்.
இன்றைக்கும் உலகில் 90 சதவீத காகிதத் தொழிற்சாலைகள் மரங்களை நம்பியே உள்ளன. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பரவலானதன் காரணமாக அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, டென்மார்க், ஜெர்மனி, பிரான்ஸ், அரபு நாடுகள், பின்லாந்து, ஜப்பான், கொரியா என பல நாடுகளில் மரக்கூழ் காகிதத் தொழிற்சாலைகள், மறுசுழற்சி காகிதத் தொழிற்சாலைகளாக மாறி வருகின்றன. ஐரோப்பிய நாடுகளில் மறுசுழற்சி காகிதத் தயாரிப்பு 66 சதவீதம் அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
காகித மறுசுழற்சிக்கு மாறுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். இந்த முறையில் 1 டன் காகிதம் தயாரிக்கப்பட்டால், 4 ஆயிரத்து 100 கிலோவாட் மின்சாரத்தைச் சேமிக்கலாம். காற்று மாசுபாடு 74 சதவீதம் குறைகிறது. நீர் மாசுபாடு 34 சதவீதம் குறைகிறது. இப்படி சுற்றுச்சூழலைக் காக்கும் பல்வேறு அம்சங்கள் மறுசுழற்சி முறையில் நிறைய உள்ளன. ஆனால், அதுவே மரங்களில் இருந்து ஒரு டன் காகிதம் தயாரிக்க வேண்டுமென்றால் 17 வளர்ந்த மரங்களை வெட்ட வேண்டும்.
இந்தியாவில் 1996ஆம் ஆண்டில் இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில் முதல் தொழிற்சாலை குஜராத்தில் அமைக்கப்பட்டது. இந்தியாவில் தற்போது பல காகித தொழிற்சாலைகள் மறுசுழற்சிக்கு தேவையான உள் கட்டமைப்பு வசதிகளை நிறுவ ஆர்வம் காட்டி வந்தாலும், அதை அமைப்பதில் பின்னடைவு இருக்கவும் செய்கிறது. மறுசுழற்சி முறையில் காகிதம் தயாரிக்கத் தேவையான மூலப்பொருளான பயன்படுத்தப்பட்ட காகிதம், நாட்டில் வெறும் 20 சதவீதமே கிடைப்பதாக இந்திய காகித உற்பத்தி சங்கம் கூறுகிறது. எனவே, இந்த மூலப்பொருளுக்காக இந்திய காகிதத் தொழிற்சாலைகள் வெளிநாடுகளைச் சார்ந்து இருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்தியாவில் தினமும் ஏராளமான குப்பை உருவானாலும், அதிலிருந்து காகிதம் தரம் பிரிக்கப்படாமல் போவதே இப்பிரச்சினைக்குக் காரணம்.
புவி வெப்பமடைதலைத் தடுக்க மரம் வளர்க்க வேண்டும் என்ற கோஷம் அதிகரித்துள்ள நிலையில், காகிதத்துக்காக மரங்களை இழக்க வேண்டுமா? அதுவும் மறுசுழற்சி காகிதத் தயாரிப்புத் தொழில்நுட்பம் இருக்கும்போது?

மரம் காக்கும் தொழில்நுட்பம்


                                
இந்த உலகத்துல பணம் சம்பாரிக்க ஆயிரம் வழி இருக்குங்க. அந்த ஆயிரத்துல ஒன்னு தான் இன்டெர்நெட்ல பணம் சம்பாரிக்கும் முறை.

பொதுவாவே, இப்போ இன்டெர்நெட் பயன்பாடு மக்கள் கிட்ட ரொம்ப அதிகமா ஆகிடிச்சு. இன்டெர்நெட் பற்றிய விழிப்புணர்வு எல்லோர்கிட்டையும் இருக்கு.

நம்ம பொதுவா இன்டெர்நெட்ட எதாவது ஒரு விஷியத்தை பற்றி தெரிஞ்சிக்க, நண்பர்கள் கிட்ட பேச இல்லனா டைம் பாஸ் பண்ண பயன்படுத்துவோம். இதே மாதிரி இன்டெர்நெட்ல பணமும் சம்பாதிக்கலாம். அதற்கான சில வழிகள் தான் நம்ம பாக்க போறோம்.

நீங்க உங்களோட ஓய்வு நேரத்துல கூட இத செய்யலாம். அது என்ன வழிகள் என்று கிழே இருக்கும் வழிகளை பாருங்க.



1. புத்தகம் 
உங்களுக்கு புத்தகம் எழுதி வெளியிடனும்னு ஆசை இருக்கா. அமேசான் நிறுவனம் இதற்க்கு ஒரு வழி சொல்றாங்க. அமேசான் நிறுவனத்தின் இலவச சேவையான கிண்டில் டைரக்ட் பப்ளிஸிங் ல நீங்க உங்களோட புத்தகத்த வெளியிடலாம். அவங்க உங்களுக்கு புத்தக விற்பனைல இருந்து ராயல்ட்டி பணம் கொடுப்பாங்க.


                                 

2. மொபைல் அப்ளிகேசன் 
ஸ்மார்ட்போன், டேப்லெட் போன்ற சாதனங்களுக்கு புது அப்ளிகேசன்கல உருவாக்கி நீங்க ஆன்லைன்ல விற்பனை செய்யலாம்.



3. போட்டோ சேல்ஸ் 
www.shutterstock.com, www.shutterpoint.com, www.istockphoto.com இந்த இணையதளங்களுக்கு நீங்க எடுத்த போட்டோவஅனுப்புங்க, உங்களோட போட்டோ சேல்ஸ்ல இருந்து உங்களுக்கு 15% -85% வரைக்கும் ராயல்ட்டி பணம் கொடுப்பாங்க.
                              


4. பழைய பொருள் விற்பனை
www.olx.in, www.quickr.com and http://craigslist.co.in இந்த இணையதளங்களில் வீட்ல இருக்க பழைய பொருள்கள விற்பனை செய்யலாம்.


5. ஆன்லைன் ஷாப் 
www.ebay.in, www.indiebazaar.com இது போன்ற ஆன்லைன் ஷாப்களை உருவாக்கி பொருட்களை விற்பனை செய்யலாம்.
                          

6. ஆன்லைன் ஒர்க் 
www.odesk.com, www.elance.com and www.mturk.com/mturk இந்த இணையதளங்களில் பதிவு செய்து ஆன்லைனில் வேலை செய்து பணம் பெறலாம். இதில் நீங்கள் உங்கள் திறமையை நிரூபிப்பதின் மூலம் நிறைய பணம் மற்றும் வாடிக்கையாளர்களை பெறலாம்.


7. கற்பித்தல் 
நீங்கள் எதாவது ஒரு பாடத்தில் திறமையானவர்களாக இருந்தால் உங்களுக்கு கற்பிக்கும் அனுபவம் இருந்தால், www.2tion.net , www.tutorvista.com இந்த இணையதளங்களில் பதிவு செய்து ஆன்லைனில் பாடம் நடத்தலாம்.
                           


8. ஆன்லைன் விளம்பரம் 
www.google.com/adsense , www.adbrite.com, இந்த இணையதளத்தில் பதிவு செய்து நீங்கள் ஆன்லைனில் விளம்பரம் செய்யலாம். உங்கள் விளம்பரத்தை எத்தனை பேர் பார்கின்றனர், விரும்புகின்றனர் என்பதை வைத்து பணம் வரும்.                           

இன்டர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி???

http://lovewebbers.com/wp-content/uploads/2013/08/videos.jpg
காணொளி ஆலோசனை, காணொளி உரையாடல் வசதி, நிபுணருடன் நேரடி உதவி, எப்படி வழிகாட்டி, நேருக்கு நேர் நிபுணர் ஆலோசனை...
தேடியந்திர நிறுவனமான கூகுள் அறிமுகம் செய்துள்ள கூகுள் ஹெல்ப் அவுட்ஸ் வசதி இப்படி எல்லாம் வர்ணிக்கப்படுகிறது. கூகுளின் இந்தப் புதிய அறிமுகம் இணைய உலகில் உண்டாக்கியிருக்கும் பரபரப்பையும் இந்த வர்ணனைகள் உணர்த்துகின்றன.
பலவிதங்களில் வர்ணிக்கப்பட்டாலும், அடிப்படையில் இந்த வசதி, காணொளி மூலம் அதாவது வீடியோ வழியே துறை சார்ந்த நிபுணர்களுடன் நேரடியாக ஆலோசனை பெறுவதற்கான வழி. இதன் மூலம் சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம். புதிய விஷயங்களில் பயிற்சி பெறலாம். வழிகாட்டி குறிப்புகளோடு உடனடி ஆலோசனைகள் சாத்தியமாகும்.
கூகுளிடம் ஏற்கனவே உள்ள காணொளி உரையாடல் சேவையான கூகுள் ஹாங்க் அவுட் நீட்சியாக இந்த கூகுள் ஹெல்ப் அவுட்ஸ் சேவை அறிமுகம் ஆகியுள்ளது. அமெரிக்காவுன் சான்பிரான்சிஸ்கோ நிகழ்ச்சியில் கூகுள் இதை அறிமுகம் செய்துள்ளது.
நிஜமான மனிதர்களிடம் இருந்து, நிஜமான உதவி, உடனடியாக! என்று கூகுள் ஹெல்ப் அவுட் இந்த சேவையை வர்ணித்து கொள்கிறது. (மேலும் ஒரு வர்ணனை). இந்த சேவை மூலமாக குறிப்பிட்ட துறையை சேர்ந்த நிபுணர்களிடம் காணொளி மூலம் நேரடியாக ஆலோசனை பெறலாம். மேக்-அப் செய்வதில் துவங்கி, சமையல் கலை, கம்ப்யூட்டரில் ஏற்பட்ட பழுது போன்ற விஷயங்கள் தொடர்பாக நிபுணர்களிடம் நேரடியாக சந்தேகங்களை கேட்டு காணொளி வழியே விளக்கம் பெறலாம். இப்போதைக்கு கலை மற்றும் இசை, சமையல் கலை, அழகு கலை உள்ளிட்ட ஏழு துறைகளில் இந்த ஆலோசனை சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். முதல் கட்டமாக ஆயிரம் நிபுணர்கள் வரை கூகுள் தேர்வு செய்துள்ளது. நிபுணர்கள் மட்டும் அல்லாமல் நிறுவங்களும்கூட இடம்பெற்றுள்ளன.
காணொளி ஆலோசனை பெற விரும்புகிறவர்கள் அதற்கான கட்டணம் செலுத்த வேண்டும். கட்டண விகிதங்கள் மாறுபடலாம். கூகுள் குறிப்பிட்ட சதவீதத்தை தனது கமிஷனாக எடுத்து கொள்கிறது. இந்த சேவை மேலும் பல துறைகளில் மேலும் எண்ணற்ற நிபுணர்களுடன் விரிவுபடுத்தப்பட உள்ளது. மருத்துவ துறைக்கான சேவையை பொறுத்த வரை கூகுள் மிகவும் கவனமாக அணுக உள்ளது.
இந்த சேவையை பயன்படுத்த விரும்பும் இணையவாசிகள் ஹெல்ப் அவுட் இணையதளத்தில் நுழைந்து தாங்கள் தெளிவு பெற விரும்பும் துறையை சேர்ந்த நிபுணர்களை தேர்வு செய்து தொடர்பு கொள்ளலாம்.
இதை முற்றிலும் புதிய சேவை என்று சொல்வதற்கில்லை. இணையம் மூலம் அலோசனை வழங்கும் மற்றும் பாடம் நடத்தக்கூடிய இணையதளங்கள் அநேகம் இருக்கின்றன. ஆலோசனை சேவைகளை பொறுத்தவரை ஆர்வம் உள்ள இணையவாசிகள் யார் வேண்டுமானாலும் தங்களுக்கு தெரிந்த விஷயத்தை கற்றுத்தர முன்வரலாம். இந்தியாவிலே கூட இது போன்ற இணைய சேவைகள் இருக்கின்றன. காணொளி கல்வி வழங்கும் இணைய தளங்களும் பிரபலமாக இருக்கின்றன. இந்த வகையான பயிற்றுவித்தல் முறையே எதிர்கால கல்வியின் திசை என்கின்றனர். அதே போல எப்படி எனும் கலையில் வழிகாட்டும் இணையதளங்களும் நிறையவே இருக்கின்றன.
இந்தப் பிரிவில் தான் கூகுள் அடியெடுத்து வைத்துள்ளது. நிபுணர்களுடன் நேரடியாக உரையாடி ஆலோசனை பெறுவதை சாத்தியமாக்கும் இந்த சேவை எந்த அளவுக்கு பிரபலமாகிறது என்று பார்க்கலாம்.
போட்டி மிகுந்த பிரிவில் கூகுள் அறிமுகம் செய்துள்ள இந்த சேவையின் நோக்கம் பற்றியும் இணையவெளியில் பல்வேறு விதமான கருத்துக்கள் வெளியாகி உள்ளன. இந்த சேவை தனிப்பட்ட வகையில் விஷேசமானதல்ல. ஆனால் கூகுள் கண்ணாடி அணிந்து கொண்டு பயன்படுத்தும் போது இதன் பலன் பலமடங்கு பெருகும் என்று சொல்லப்படுகிறது. உண்மையில் கூகுள் கண்ணாடியின் சிறப்பம்சங்களை பயன்படுத்தி கொள்ளும் திட்டத்துடனே கூகுள் ஹெல்ப் அவுட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சேவை எப்படி எனும் கேள்விக்கு பதில் அளிக்கும் வழிகாட்டி தளங்களை பாதிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இணையம் சாமானியர்களையும் நிபுணர்களாக்கி ஆலோசனை வழங்க வழி செய்திருக்கும் நிலையில் இந்த சேவை தொழில் சார்ந்த நிபுணர்களின் செல்வாக்கை அதிகரிக்க செய்து சாமான்ய நிபுணர்களை பாதிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

கூகுளின் காணொளி ஆலோசனை சேவை, ஹெல்ப் அவுட்ஸ் அறிமுகம்

முன்னணி சமூக வலைப்பின்னல் சேவையான ஃபேஸ்புக் முதல் முறையாக தனது லைக் வசதி சின்னத்தில் கை வைத்துள்ளது. புதிய வடிவமைப்புடன் இந்தச் சின்னம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இணைய உலகில் ஃபேஸ்புக்கின் லைக் (Like) மற்றும் ஷேர் (Share) வசதி மிகவும் பிரபலமானது. 2010-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த வசதி, இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் வசதியாக இருக்கிறது. ஃபேஸ்புக் தெரிவித்துள்ள தகவலின்படி லைக் சின்னம் தினமும் 75 லட்சம் இணையதளங்கள் மூலம் 2,200 கோடி முறை பார்க்கப்படுகிறது.
ஃபேஸ்புக்கிலும் சரி, இணையத்தில் சரி, நம்மைக் கவரும் தகவல்களை 'பிடிச்சிருக்கு' என்று மற்றவர்களுக்கு தெரிவிக்க இந்த வசதி பயன்படுகிறது. லைக் வசதி மூலம் விரும்பும் தகவலை பொதுவாக ஃபேஸ்புக் நண்பர்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்ளலாம்.
பகிர்தலுக்கான ஷேர் வசதியால், நாம் பகிர விரும்பும் கருத்து / புகைப்படத்துடன், (குறிப்பிட்ட இடத்தில்) நம் தகவலையும் பகிர்ந்து கொள்ளலாம்.
அறிமுகமான நாள் முதல் இந்த சின்னங்களின் மீது கை வைத்திராத ஃபேஸ்புக், தற்போது இவற்றை முதல் முறையாக மறுவடிவமைப்பு செய்துள்ளது.
புதிய வடிவமைப்பில் லைக் சின்னத்தில் ஏற்கெனவே இடம்பெற்றிருந்த கட்டை விரல் காணாமல் போய் அதற்கு பதிலாக ஃபேஸ்புக்கின் அடையாளமான எஃப் (f) ஆங்கில எழுத்து இடம்பெற்றுள்ளது. ஷேர் சின்னமும் இவ்வாறே எஃப் எழுத்துடன் அமைந்துள்ளது. துடிப்பான நீல நிற பின்னணியில் இந்தச் சின்னங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இரண்டு வசதிகளையுமே அருகருகே பகிர்ந்து கொள்ளவும் செய்யலாம்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே இந்த மாற்றத்தை ஃபேஸ்புக் பரிசோதித்து வந்த நிலையில் இப்போது அதிகாரபூர்வமாக இந்த மாற்றத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த மாற்றத்திற்கு ஏற்ப பயனாளிகள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் சின்னம் தானாக புதுப்பிக்கப்பட்டு விடும் என்கிறது ஃபேஸ்புக்.
சின்ன மாற்றம்தான், ஆனால் மிகவும் முக்கியமானது. காரணம் இரண்டு சின்னங்களுமே இணையவாசிகளின் மனதில் விருப்பத்திற்கான அடையாளமாக பதிந்துவிட்டது. புதிய வடிவமைப்பு சுலபமானதாக இருக்கவில்லை. பல்வேறு உலாவிகள் மற்றும் எண்ணற்ற இணைய வடிவங்களில் எந்த வித பாதிப்பும் இல்லாமல் தெளிவாக, பளிச்சென தோன்றும் வகையில் மிக கவனமாக இவை உருவாக்கப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
இணையத்தில் தகவல்களை பகிர்ந்துகொள்தலை மேம்படுத்த புதிய வடிவமைப்பு உதவும் என்று ஃபேஸ்புக் எதிர்பார்க்கிறது. ஆனால், லைக் சின்னத்தில் கட்டைவிரல் இல்லாமல் இருப்பது ஃபேஸ்புக் அபிமானிகள் பலரை வருத்தத்தில் ஆழ்த்தலாம்.

பேஸ்புக் லைக், ஷேர் சின்னம் மாற்றியமைப்பு

அணிந்துகொண்டால் உடம்பையே குளிர்ச்சியாக வைத்திருக்கும் வெப்ப மின்னோட்ட பிரேஸ்லெட்டை அமெரிக்காவின் எம்.ஐ.டி. மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.
அமெரிக்காவின் மசாசூசட்ஸ் மாநிலம் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ளது மசாசூசட்ஸ் தொழில்நுட்பக் கழகம். இங்கு படிக்கும் 4 மாணவர்கள் சேர்ந்து ரிஸ்ட்டிஃபை என்ற கருவியை உருவாக்கியிருக்கின்றனர். இதுபற்றி ஆய்வு மாணவரில் ஒருவரான சாம் ஷேம்ஸ் கூறியதாவது:
நாங்கள் உருவாக்கியுள்ள ரிஸ்ட்டிஃபை கருவி, வெப்ப மின்னோட்ட தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. இயற்பியலில் பெல்டியர் விளைவு என்று ஒன்று உண்டு. வெவ்வேறு உலோகங்கள் கொண்ட ஒரு சுற்றில் மின்னோட்டம் பாயும்போது உலோகங்களின் ஒரு இணைப்புப் பகுதி வெப்பத்தை வெளியேற்றும், இன்னொரு பகுதி வெப்பத்தை உள்ளிழுக்கும் என்பதை பிரான்ஸ் விஞ்ஞானி பெல்டியர் கண்டறிந்தார். அந்த தத்துவம்தான் எங்கள் கண்டுபிடிப்புக்கு அடிப்படை. ரிஸ்ட்டிஃபை கருவி சற்று பெரிய வாட்ச் அளவில் இருக்கும். வாட்ச் போலவே மணிக்கட்டில் இதை அணிந்துகொள்ள வேண்டும். பெல்டியர் கூலர் எனப்படும் இரண்டு வெவ்வேறான வெப்பக் கடத்திகள் இதில் இருக்கின்றன. தோல் வெப்பநிலை வழக்கமான அளவில் இருக்கும்போது பெல்டியர் கூலருக்கு வேலை இல்லை. தோல் வெப்பநிலை அதிகரித்தால், பெல்டியர் கூலர் வேலை செய்யத் தொடங்கும். தோலில் இருக்கும் வெப்பத்தை உறிஞ்சி, தோலுக்குக் குளிர்ச்சியை வழங்கும்.
உடம்பின் ஏதாவது ஒரு பகுதியைக் குளிரச் செய்தாலே, மற்ற அனைத்து பகுதிகளுக்கும் ஒருசில வினாடிகளில் அந்த குளிர்ச்சி பரவிவிடும்.
பனிப் பிரதேசங்களில் அதிக குளிரில் இருப்பவரின் உடல் வெப்பநிலையை அதிகரித்து, உடலுக்கு சூட்டைக் கொடுக்கவும் ரிஸ்டிஃபை கருவியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். சிறிய அளவு லித்தியம் பாலிமர் பேட்டரி உதவியுடன் இது செயல்படுகிறது என்றார் அந்த மாணவர்.
எம்.ஐ.டி. பல்கலைக்கழகம் சார்பில் மெட்டீரியல் சயின்ஸ் டிசைன் போட்டி கடந்த மாதம் நடத்தப்பட்டது. இதில் முதல் பரிசை தட்டிச் சென்றிருக்கிறது ரிஸ்டிஃபை. போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், ரிஸ்டிஃபை பற்றிய அடுத்தகட்ட ஆய்வுக்கான நிதியுதவியும் அந்த மாணவர்களுக்குக் கிடைத்திருக்கிறது.
வீடு, கார், அலுவலகம், தியேட்டர் என நாம் போகிற இடங்கள் எல்லாவற்றிலும் ஏ.சி., ஏர்கூலர் வைக்க வேண்டிய அவசியம் இனி இருக்காது. மின் கட்டணம் பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஊட்டி, கொடைக்கானல் குளிரிலும் நடுங்கத் தேவையிருக்காது. ரிஸ்டிஃபை கருவியை அணிந்துகொண்டால், தேவைப்படும் நேரத்தில் உடம்பு தானாக சூடாகும் அல்லது குளிர்ச்சியாக மாறும்.
ரிஸ்டிஃபை கருவிக்கு முறைப்படி காப்புரிமை பெற்று வணிக ரீதியாக அதை தயாரிக்கும் முயற்சியிலும் மாணவர்கள் இறங்கியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உடம்பை குளிர்ச்சியாக்கும் ஜில்ஜில் பிரேஸ்லெட் - அமெரிக்க மாணவர்கள் சாதனை

விக்கிபீடியாவை மேம்படுத்தும் வகையில் புதிய வசதிகள் படிப்படியாக அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய வசதிகளை விக்கிபீடியா ஆர்வலர்கள் முன்கூட்டியே பரிசோதித்து பார்க்கும் முனோட்ட வசதியும் அறிமுகமாகியுள்ளது.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவை நிர்வகித்து வரும் விக்கிமீடியா அமைப்பு இதை அறிவித்துள்ளது.
இணைய பயனாளிகளின் பங்களிப்போடு உலகின் மாபெரும் கலைக்களஞ்சியமாக உருவாகி இருக்கும் விக்கிபீடியாவை மேலும் பரவலாக அனைவரிடமும் கொண்டு செல்லும் முயற்சியில் விக்கிமீடியா அமைப்பு ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதிய வசதிகளும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
இந்தப் புதிய வசதிகளை அறிமுகம் நிலையிலேயே பயனாளிகள் அறிந்துகொண்டு அவற்றை பயன்படுத்திப் பார்க்கும் முன்னோட்ட வசதியை விக்கிமீடியா அமைப்பு அறிமுகம் செய்துள்ளது. அதாவது அனைவருக்கும் முன்பாகவே புதிய வசதிககளை ஆர்வம் உள்ளவர்கள் பரிசோதித்து பார்க்கும் விஷேச வசதி.
இந்த வகையான முன்னோட்ட வசதி மென்பொருள் உலகில் மிகவும் பிரபலமாக இருக்கிறது. இந்த முறை பீட்டா என்று அழைக்கப்படுகிறது. முழுவீச்சில் அறிமுகம் ஆகும் முன் மென்பொருளை குறிப்பிட்ட சிலருக்கு வழங்கி அவர்கள் பயன்பாட்டில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு ஏற்ப குறைகள் நீக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட நிலையில் புதிய மென்பொருள் அறிமுகமாக இந்த வசதி உதவுகிறது.
இப்போது விக்கிபீடியாவில் அறிமுகமாகும் புதிய வசதிகளையும் பயனாளிகள் இப்படி முன்கூட்டியே பயன்படுத்தி பார்த்து அதன் குறை நிறைகளை தெரிவிக்கலாம் என விக்கிமீடியா அமைப்பு அறிவித்துள்ளது.
விக்கிபீடியா மட்டும் அல்லாமல் அதன் மற்ற துனண சேவைகளுக்கும் இது பொருந்தும். விக்கி சமூகத்தினர் பங்கேற்கும் டிஜிட்டல் சோதனை கூடமாக இதை கருதலாம் என்றும் விக்கிமீடியா அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
பீட்டா ஃபீச்சரஸ் எனும் பெயரில் இந்த முன்னோட்ட வசதி அறிமுகமாகியுள்ளது. விக்கி தளத்தில் உள்ள முன்னுரிமை பகுதிக்கு சென்று இந்த திட்டத்தில் பங்கேற்கலாம்.
மேலும் விவரங்களுக்கு: https://www.mediawiki.org/wiki/About_Beta_Features

விக்கிபீடியா வழங்கும் முன்னோட்ட வசதி!

சமூகவலைத்தளங்களில் டுவிட்டர் மிகவும் பிரபலமானது. அதனை அதிகம் பயன்படுத்தாதவர்களும்கூட அதைப்பற்றி தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் டுவிட்டர் இணையதளத்துக்கு இப்பெயர் வரும் முன்பு மேலும் பல பெயர்கள் சூட்டப்பட்டிருந்தன என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது. அதன்படி டுவிட்ச், எஸ்எம்எஸ்ஸி, பிரெண்ட்ஸ்டால்கர் உள்ளிட்ட பெயர்கள் முன்பு டுவிட்டருக்கு சூட்டப்பட்டுள்ளது.
எழுத்தாளர் நைக் பில்டன் தனது ஹேட்சிங் டுவிட்டர் என்ற புத்தகத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் இணையதளம் உருவாக்கப்பட்ட காலத்தில் அதன் நிறுவனர்களுடன் பில்டன் நெருங்கிய தொடர்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல டுவிட்டரின் லோகோ (சின்னம்) பல்வேறு முறை மாற்றியமைக்கப்பட்டு இப்போதைய வடிவை எட்டியுள்ளது என்ற தகவலையும் அவர் தெரிவித்துள்ளார்.

டுவிட்டருக்கு பல பெயர்கள்

கம்ப்யூட்டரில் பிரச்னைகள் ஏற்பட்டு, இயங்காமல் போவதும், இயக்கம் எதிர்பார்த்தபடி இல்லாமையும், அடிக்கடி நடக்கும் சம்பவங்களாகும். 

ஆனால், எதனால் இந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று அறிந்து கொள்வதும் ஒரு பிரச்னையாக நமக்குத் தோன்றும். பிரச்னைக்குரிய காரணம் ஹார்ட்வேர் சாதனங்களினாலா அல்லது சாப்ட்வேர் தொகுப்பினாலா என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடிவதில்லை. 

ஏனென்றால், இந்த இரண்டு வகை காரணங்களினால் ஏற்படும் பிரச்னைகள் ஒரே மாதிரியாகத் தோற்றமளிக்கும். எடுத்துக் காட்டாக, புளு ஸ்கிரீன் ஆப் டெத் எனப்படும் இயக்க முடக்கம், ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் ஆகிய இரண்டாலும் ஏற்படலாம். இவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.



1. மெதுவாக இயங்கும் கம்ப்யூட்டர்: 

இந்த பிரச்னை எல்லாருக்கும் ஏற்படுவது. அதிக எண்ணிக்கையில், கம்ப்யூட்டர் தொடங்கும்போதே இயங்கத் தொடங்கும் சாப்ட்வேர் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்த பின்னர், கம்ப்யூட்டர் அவற்றின் சுமை தாங்காமல், இயக்க வேகத்தினைக் குறைவாக்கும். 
அல்லது ஏதேனும் மால்வேர் தாக்கினால், அப்போதும் வேகம் குறையத் தொடங்கும். ஆனால், நாம் என்ன எண்ணுகிறோம். கம்ப்யூட்டர் வாங்கி பல ஆண்டுகள் அல்லது மாதங்கள் ஆகிவிட்டன. 
அதனால், இயக்க வேகம் குறைந்துவிட்டது என்று முடிவு கட்டுகிறோம். இந்த சிந்தனை தொடர்ந்து இருப்பதனால், கம்ப்யூட்டரை மூட்டை கட்டி வைத்துவிட்டு, புதிய கம்ப்யூட்டரை வாங்கிப் பயன்படுத்துகிறோம். இது தவறான கணிப்பாகும். 
கம்ப்யூட்டரின் செயல்வேகம் குறைகிறது என்றால், அதற்குக் காரணம் சாப்ட்வேர் பிரச்னையாகும். ஹார்ட்வேர் சாதனங்களில் பிரச்னை ஏற்பட்டால், இயக்கம் முடங்கிப் போகுமே ஒழிய, வேகம் குறையாது. சில நேரங்களில், சி.பி.யு. அதிக சூடாகிப் போனால், வேகம் குறையலாம். ஆனால், இது எப்போதாவது ஏற்படுவதுதான்.




2. புளூ ஸ்கிரீன் ஆட் டெத்: 

விண்டோஸ் இயக்கத்தில், அது முடங்கிச் செயலற்றுப் போகும் நிலை ஏற்பட்டால், புளு ஸ்கிரீன் ஆப் டெத் என்னும் நிலை காட்டப்படும். ஆனால், புதிய விண்டோஸ் இயக்கத் தொகுப்புகள் பழைய தொகுப்புகளைப் போலின்றி, நிலையாக இயங்குகின்றன. 
நல்ல ஹார்ட்வேர் சாதனங்களுடன், சிறப்பான ட்ரைவர் புரோகிராம்களுடன் இயங்கும் ஒரு சிஸ்டம், என்றைக்கும் புளு ஸ்கிரீன் ஆப் டெத் என்ற நிலைக்குச் செல்லாது. 
ஆனால், அடிக்கடி இந்த ஸ்கிரீன் தோன்றினால், உங்கள் ஹார்ட்வேர் சாதனங்களில் ஒன்றில் பிரச்னை இருக்கலாம். அல்லது, தவறான ட்ரைவர் புரோகிராம்களால் ஏற்படலாம். 
நீங்கள் சாப்ட்வேர் புரோகிராம் ஒன்றினை அண்மையில் கம்ப்யூட்டரில் பதிந்திருந்தாலோ, அல்லது ஹார்ட்வேருக்கான ட்ரைவர் புரோகிராம்களை மாற்றியிருந்தாலோ, அந்த நேரத்தினை அடுத்து, புளு ஸ்கிரீன் ஏற்பட்டால், புரோகிராமினை அன் இன்ஸ்டால் செய்திடுங்கள். 
அல்லது ட்ரைவர் புரோகிராமினை மாற்றுங்கள். ட்ரைவர் புரோகிராம் எதனையும் மாற்றாத நேரத்தில், கம்ப்யூட்டரில் புளு ஸ்கிரீன் தோன்றுகிறது என்றால், நிச்சயமாக உங்கள் சிஸ்டத்தின் ஹார்ட்வேர் சாதனம் ஒன்றில்தான் பிரச்னை என்று உறுதியாகச் சொல்லலாம்.




3. கம்ப்யூட்டர் தொடங்க மறுக்கிறது: 

உங்கள் கம்ப்யூட்டர் பூட் ஆகவில்லை என்றால், இது ஹார்ட்வேர் அல்லது சாப்ட்வேர் பிரச்னையாக இருக்கலாம். விண்டோஸ் இயங்கத் தொடங்கி, பாதியிலேயே தன்னை முடக்கிக் கொள்கிறதா? 
அல்லது கம்ப்யூட்டர் தன் ஹார்ட் ட்ரைவினை உணர்ந்து கொள்ளாமல் இருக்கிறதா? அல்லது உள்ளிருக்கும் சாதனங்களுக்கு மின் சக்தி செல்லாமல் இருக்கிறதா? இதற்கெல்லாம் காரணம் நிச்சயம் ஹார்ட்வேர் பிரச்னைகளாகத்தான் இருக்கும். 
பல்வேறு பிரிவுகளை இணைக்கும் கேபிள்களில் பிரச்னை இருக்கலாம். அல்லது அவை சரியான முறையில் இணைக்கப்படாமல் இருக்கலாம். கீழே, சில ஹார்ட்வேர் பிரிவுகள் தரக்கூடிய பிரச்னைகள் தரப்பட்டுள்ளன.
1. ஹார்ட் ட்ரைவ்: உங்களுடைய ஹார்ட் ட்ரைவ் செயல்படத் தவறினால், அதில் உள்ள பைல்கள் கெட்டுப் போயிருக்கலாம். பைல் ஒன்றைப் பெற முயற்சிக்கையில் அல்லது ஹார்ட் ட்ரைவில் எழுத முயற்சிக்கையில், ஹார்ட் ட்ரைவ் அதிக நேரம் எடுக்கலாம். இதனால், விண்டோஸ் பூட் ஆகாமல் நின்றுவிடலாம். 
2. சி.பி.யு..: சி.பி.யு. என அழைக்கப்படும் சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட் இயங்காமல் போனாலும், கம்ப்யூட்டர் இயக்கம் பூட் ஆகாது. சி.பி.யு. அளவிற்கு மேலாக வெப்பமாக ஆனாலும், புளு ஸ்கிரீன் கிடைக்கும். எடுத்துக்காட்டாக, கேம் ஒன்றை இயக்கிக் கொண்டிருந்தால், அல்லது வீடியோ ஒன்றை இயக்கிக் கொண்டிருந்தால், அதற்கு சி.பி.யு.வின் திறன் அதிகத் தேவை ஏற்பட்டு, சி.பி.யு. சூடாகி, தொடர்ந்து இயங்க முடியாமல், புளு ஸ்கிரீன் காட்டப்படும். 

3. ராம் நினைவகம்: சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம்கள், தங்களுக்கான டேட்டாவினை ராம் நினைவகத்தில் தற்காலிகப் பயன்பாட்டிற்கு எழுதி வைக்கின்றன. ராம் நினைவகத்தில் பிரச்னை ஏற்பட்டால், இந்த டேட்டாவில் சிறிதளவு மட்டுமே நினைவகத்தில் எழுதப்பட்டு, நமக்கு தவறான முடிவுகள் காட்டப்படும். இது இறுதியில், அப்ளிகேஷன் புரோகிராம் இயக்க முடக்கம், புளு ஸ்கிரீன் மற்றும் பைல் கெட்டுப்போதல் ஆகியவற்றில் முடியும்.
4. கிராபிக்ஸ் கார்ட்: கிராபிக்ஸ் கார்டில் பிரச்னைகள் ஏற்பட்டால், அது டிஸ்பிளேயைத் தவறாகக் காட்டும். அல்லது குழப்பமான இமேஜ்களை உருவாக்கும். குறிப்பாக முப்பரிமாண கேம்ஸ் விளையாடுகையில் இது நடைபெறலாம்.
5. சிறிய மின்விசிறிகள்: கம்ப்யூட்டரில் சி.பி.யு. மற்றும் பொதுவான விசிறி என இரண்டு வகை விசிறிகள் இயங்கிக் கொண்டிருக்கும். கம்ப்யூட்டர் இயங்கும்போது ஏற்படும் வெப்பத்தினை வெளியேற்றவும், சி.பி.யு. வெப்பத்தினால் தாக்கப்படமால், பாதுகாப்பாக இயங்கவும் இந்த விசிற்கள் செயல்படுகின்றன. இந்த விசிறிகள் செயல்பாட்டில் தொய்வு அல்லது முடக்கம் ஏற்பட்டால், மேலே சொல்லப்பட்ட சி.பி.யு. மற்றும் கிராபிக்ஸ் கார்ட் பிரச்னைகள் ஏற்படலாம்.இதனால், கூடுதல் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க, கம்ப்யூட்டர் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போதே, தன் இயக்கத்தை நிறுத்தலாம். 
6. மதர்போர்ட்: மதர்போர்டில் ஏற்படும் பிரச்னைகளின் தன்மையினை அறிவது மிகவும் கடினமான செயலாகும். எப்போதாவதுதான் மதர் போர்டு மூலம் பிரச்னை ஏற்படும். ஏற்படுகையில், வேறு அறிகுறிகள் காட்டப்படாமல், புளு ஸ்கிரீன் காட்டப்படும்.

7. மின்சக்தி புழக்கம்: மின் சக்தி பெறுவதிலும், அதனைப் பல்வேறு சாதனப் பிரிவுகளிடையே பங்கிட்டுக் கொள்வதிலும் பிரச்னை ஏற்பட்டால், இதனை அறிதலும் எளிதான செயல் அல்ல. சில வேளைகளில், குறிப்பிட்ட பகுதிக்குத் தேவைக்கு மேல், மின் சக்தி வழங்கப்படலாம். இதனால், அந்தச் சாதனப் பகுதி பழுதடையலாம். செயல்பாட்டில் தவறுகள் ஏற்படலாம். மின் சக்தி முழுமையாக ச் சென்றடையாவிட்டால், கம்ப்யூட்டர் இயங்காது. அதன் பவர் பட்டனை அழுத்தினால் ஒரு மாற்றமும் ஏற்படாது.
கம்ப்யூட்டர் மெதுவாக இயங்குவதற்கான பிற காரணங்கள் சாப்ட்வேர் புரோகிராம்களால் ஏற்படுபவையாக இருக்கலாம். மேலே சொன்ன அனைத்து வகை அறிகுறிகளும், சாப்ட்வேர் பிரச்னைகளாலும் ஏற்படலாம். 
மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் எழுதப்பட்டு, உங்கள் கம்ப்யூட்டரை வந்தடைந்த மால்வேர் புரோகிராம்கள், விண்டோஸ் இயக்கத்தின் அடிப்படைக் கட்டமைப்பில் நுழைந்து, மொத்த இயக்கத்தினையும் நிறுத்தலாம்.

கம்ப்யூட்டர் பிரச்னைகள் - காரணம் என்ன?

ஸ்டார்ட் ஸ்கிரீன் இல்லாமல் நேராக டெஸ்க்டாப்:விண்டோஸ் 8 சிஸ்டத்தில், பலருக்கும் பிடிக்காத விஷயமாகப் பேசப்படுவது, சிஸ்டம் ஸ்டார்ட் ஸ்கிரீனில் தொடங்கும் செயல்பாடாகும். 

அனைவரும் ஏன் டெஸ்க்டாப்புடன் சிஸ்டம் தொடங்கினால் என்ன? என்று கேட்டனர். இப்படித்தானே, இதுவரை விண்டோஸ் இயங்கியது எனவும் கேள்வி தொடுத்தனர். 

பெரும்பாலான வாடிக்கையாளர்களிடம் இருந்து இந்த பின்னூட்டு வந்ததனால், மைக்ரோசாப்ட் நிறுவனம், இதனை, விண்டோஸ் 8.1 சிஸ்டத்தில் மாற்றியுள்ளது. நேராக சிஸ்டம், முன்பு போல, டெஸ்க்டாப் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனைப் பெற, ஒரு சின்ன செட்டிங் அமைக்க வேண்டும்.

டாஸ்க்பாரில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில், Properties என்பதனைத் தேர்ந்தெடுகக்வும். இங்கு தரப்படும் பல டேப்களில், "When I sign in or close all apps on a screen, go to the desktop instead of Start' என்பதனைத் தேடிக் காணவும். 
இந்த செட்டிங் மீது ஒரு டிக் அடையாளம் அமைக்கவும். இனி, உங்கள் விண்டோஸ் 8.1 கம்ப்யூட்டர், ஸ்டார்ட் ஸ்கிரீனில் தொடங்காது. இந்த வசதி, ஸ்டார்ட் ஸ்கிரீன் தொடக்கத்தினைப் பார்த்து தயங்குவோருக்கு அருமருந்தாக அமையும். 
விண்டோஸ் 8.1 வரும் அக்டோபர் 17 முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளது. அப்போது புதிய சிஸ்டத்திற்கு மாறிய பின்னர், இந்த செட்டிங் அமைத்துக் கொள்ள
லாம். 

புரோகிராம்களை மாறா நிலையில் அமைக்க: 
நம் கம்ப்யூட்டர்களில், இணையம் தேட பல பிரவுசர்களை அமைக்கிறோம். ஆனால், நாம் ஏதேனும் ஓர் இணைய லிங்க்கில் கிளிக் செய்திடும்போது, மாறா நிலையில் (default) அமைத்திட்ட பிரவுசரில் தான் அது திறக்கப்படும். 
எடுத்துக் காட்டாக, நீங்கள் குரோம் பிரவுசரைத் திறந்து இணையத் தேடலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில், கிடைக்கும் லிங்க்கில் கிளிக் செய்தால், உங்கள் கம்ப்யூட்டரில், இண்டர்நெட் எக்ஸ்புளோரர் மாறா நிலை பிரவுசராக செட் செய்யப்பட்டிருந்தால், அதில் தான் அந்த குறிப்பிட்ட இணைய தளம் திறக்கப்படும்.
இதே போல் தான், நாம் பல மீடியா பிளேயர்கள், இமெயில் கிளையண்ட் புரோகிராம்கள் ஆகியவற்றையும் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் பதிந்து வைத்து இயக்குகிறோம்.
இவற்றில், நமக்குப் பிடித்த புரோகிராமினை எப்படி மாறா நிலைக்குக் கொண்டு வந்து, அதில் திறக்கக் கூடிய புரோகிராம்களை, குறிப்பிட்ட புரோகிராமில் மட்டுமே திறக்கும்படி அமைப்பது. இதனை விண்டோஸ் 8.1ல் எப்படி அமைப்பது எனப் பார்க்கலாம். 
முதலில் சார்ம்ஸ் பாரினைத் (Charms bar) திறக்கவும். இதற்கு Win key + C ஆகிய கீகளை அழுத்தலாம். இங்கு Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Change PC Settings என்பதில் தட்டவும். 
Search and Apps என்பதில் கிளிக் செய்திடவும். Defaults என்ற வகையின் கீழ், நீங்கள் எந்த புரோகிராமினை மாறா நிலையில் அமைக்க விரும்புகிறீர்களோ, அதனை செட் செய்திடலாம். 
எடுத்துக்காட்டாக, மீடியா பிளேயராக, Windows Media Player என்பதற்குப் பதிலாக, Media Player Classic என்பதனை மாறா நிலையில் அமைக்கலாம். இதே போல குறிப்பிட்ட பைல் வகைகளை எந்த புரோகிராமில் திறக்கலாம் என்பதனையும் அமைக்கலாம். 
விண்டோஸ் 8.1ல் இதனை புதிய PC Settings அப்ளிகேஷனிலேயே அமைக்கலாம். முன்பு போல, கண்ட்ரோல் பேனல் திறந்து இவற்றை அமைக்க வேண்டியதில்லை.

விண்டோஸ் 8.1 சிஸ்டம் டிப்ஸ்

                         

சீனாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் Gionee நிறுவனாமானது மிகவும் வினைத்திறன் வாய்ந்த அதி நவீன ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்து வைத்துள்ளது.
Elife E7 எனும் பெயரில் வெளியிடப்பட்ட இக்கைப்பேசியில் 16 மெகாபிக்சல்கள் உடைய பிரதான கமெராவும், 8 மொகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெராவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இவை தவிர 2.5GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Qualcomm Snapdragon 800 Processor, 2,500mAh மின்கலம் ஆகியவற்றினையும் கொண்டுள்ளது.

வினைத்திறன் வாய்ந்த அதிநவீன ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்

                  

கூகுள் நிறுவனத்தின் புரட்சிகளுள் குரல்வழி மூலமான இணையத்தேடலும் ஒன்றாகும்.
இவ்வசதியினை தனது பிந்திய இயங்குதள பதிப்பான Kitkat இயங்குளத்தில் இலவசமாக வழங்கியுள்ளது.
கூகுள் குரோமில் மட்டுமே செயற்படும் இவ்வசதியினை தற்போது டெக்ஸ்டாப் கணினிகளுக்கும் தந்துள்ளது.
இதற்காக Google Voice Search Hotword எனும் நீட்சியை குரோம் உலாவியில் நிறுவிக்கொண்டு மைக்ரோபோனினை பயன்படுத்துவதற்குரிய அனுமதியை வழங்க வேண்டும்.

                                                         DOWNLOAD THIS FILE

டெக்ஸ்டாப் கணனிகளில் இப்போது Voice Search...

விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் ஆர்.டி. சிஸ்டங்களில் பயன்படுத்த, விண்டோஸ் ஸ்டோரில், அப்ளிகேஷன் புரோகிராம்கள் குவிந்துள்ளன. 

சென்ற அக்டோபர் 13ல், இவற்றின் எண்ணிக்கை 1,21,183 ஆக இருந்தது. ஒரே வாரத்தில், இதில் 1,491 அப்ளிகேஷன் புரோகிராம்கள் இணைக்கப்பட்டன. 

இலவசமாகக் கிடைக்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களில், அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்டவையாக நெட்ப்ளிக்ஸ் மற்றும் கூகுள் சர்ச் புரோகிராம்கள் உள்ளன. 

கட்டணம் செலுத்திப் பெறும் அப்ளிகேஷன்களில், Angry Birds Star Wars, Rayman Jungle Run, மற்றும் Fruit Ninja ஆகியவை இருந்தன.

மைக்ரோசாப்ட் தந்துள்ள மேப் அப்ளிகேஷன் புரோகிராமில், முக்கியமான அப்டேட் மேற்கொள்ளப்பட்டது. 
இதில் தற்போது Bing Smart Search செயல்படுத்தப்பட்டுள்ளது. புதிய அம்சங்களாக, Bing Travel and Bing Weather ஆகியவை தரப்பட்டுள்ளன.
யாஹூ நிறுவனம், விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கான யாஹூ மெயில் அப்ளிகேஷனை அப்டேட் செய்து நவீன வசதிகளைத் தந்துள்ளது. 
புதிய விண்டோஸ் 8.1 சிஸ்டத்துடன், முற்றிலும் புதிய பெயிண்ட் (Paint) அப்ளிகேஷன் புரோகிராமினை, மைக்ரோசாப்ட் தந்துள்ளது. 
இலவசமாக அதிக எண்ணிக்கையில் தரவிறக்கம் செய்யப்பட்ட முதல் ஐந்து அப்ளிகேஷன் புரோகிராம்களாகக் கீழ்க்கண்டவை இடம் பிடித்துள்ளன - Netflix, Reaper, Microsoft Solitaire Collection, Google Search மற்றும் Where's My Water 2.

விண்டோஸ் ஸ்டோரில் குவிந்த அப்ளிகேஷன்கள்

                            

கணனிகள் புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட சில காலத்திற்கு எந்தவித பிரச்சினைகளும் இல்லாமல் இயங்கும்.
ஆனால் சிறிது காலத்திற்கு பின்னர் அவற்றின் வேகத்தில் மந்த நிலை காணப்படும். இதற்கு கணனி வன்றட்டுக்களில் தேவையற்ற கோப்புக்கள் தேங்குவதும் காரணமாகும்.
இக்கோப்புக்களை அகற்றுவதன் மூலம் மீண்டும் கணினிகளை பழைய நிலையில் இயங்கச் செய்ய முடியும்.
இவ்வாறு Mac OS இயங்குதளங்களைக் கொண்ட கணனிகளின் வேகத்தினை அதிகரிப்பதற்கு Disk Diag எனும் மென்பொருள் உதவுகின்றது.



                                       DOWNLOAD THIS FILE

Mac OS கணனியின் செயற்பாட்டு வேகத்தினை அதிகரிப்பதற்கான மென்பொருள்...

சூரியனுக்கு வெகு அருகே வந்துகொண்டிருக்கும் ஒரு எரி நட்சத்திரம் தப்பிப் பிழைக்குமா என்பதைப் பார்க்க விண்ணியலாளர்கள் உலகெங்கும் ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஐசோன் என்ற இந்த எரிநட்சத்திரம், சூரியனுக்கு மிக அருகில் வியாழனன்று வரும்.
சூரியக் குடும்பத்தின் வெளி எல்லையிலிருந்து சுமார் 55 லட்சம் ஆண்டுகள் பயணித்து இந்த எரிநட்சத்திரம் சூரியனை நெருங்கியிருக்கிறது.
சூரியனை நெருங்கும் இந்த எரிநட்சத்திரம் , சூரியனின் ஈர்ப்பு சக்தி மற்றும் வெப்பத்தால் அழிக்கப்படாவிட்டால், அடுத்த ஓரிரு வாரங்களில் இரவு வானில் கண்ணுக்கு தெரியலாம்.

இது மட்டும் தப்பிப்பிழைத்தால், இதுதான் "இந்த நூற்றாண்டின் எரிநட்சத்திரமாக" விளங்கும் என்று விண்ணியலாளர்கள் கூறுகிறார்கள்

சூரியனை நெருங்கும் எரிநட்சத்திரம் --தப்புமா?

andriod-004
ஆண்ட்ராய்ட் மொபைல்களை தாக்கும் புதிய வைரஸ் கிளம்பியுள்ளது. இந்த வைரஸ் மிகவும் செயல் துடிப்போடு காணப்படுகிறது. இது ஆண்ட்ராய்ட் பதிப்பு 4.2.2 (ஜெல்லிபீன்) முந்தையை ஆண்ட்ராய்ட் சிஸ்டம் பயன்படுத்தும் சாதனங்களைப் பாதிக்கிறது. இந்த வைரஸ், தான் புகுந்த சாதனங்களில் உள்ள எஸ்.எம்.எஸ். மற்றும் தனி நபர் தகவல்களைத் திருடி அனுப்புகிறது. இதற்குக் காரணம் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் காணப்படும் சரியற்ற குறியீட்டு வழுவே ஆகும்.
இதனைப் பயன்படுத்தியே இந்த வைரஸ் பரவுகிறது. இவை இந்த சாதனங்களில் பல அப்ளிகேஷன்களில் கெடுதல் விளைவிக்கும் குறியீடுகளைப் புகுத்துகின்றன. இதனால் அந்த அப்ளிகேஷன்களின் ஒரிஜினல் குறியீடுகள் பாதிக்கப்படுவதில்லை.
பயனாளர், தான் பயன்படுத்துவது ஒரிஜினல் அப்ளிகேஷன் என்ற எண்ணத்திலேயே தொடர்ந்து பயன்படுத்துகையில் கெடுதல் ஏற்படுத்தும் குறியீடுகளின் அடிப்படையில் தகவல்கள் திருடப்படுகின்றன. இமெயில் முகவரிகள், மொபைல் போனின் தனி அடையாள எண்கள், அனுப்பப்பட்ட மற்றும் பெறப்பட்ட செய்திகள் ஆகியன திருடப்பட்டு அனுப்பப்படுகின்றன.
இந்த வைரஸ் மூலம், அப்ளிகேஷன் ஒன்றில் உள்ள பைல்களின் அதே பெயரில், புதிய பைல்களைப் பதிக்கிறது. இதனால் எந்த சோதனைக்கும் முதலில் உள்ள ஒரிஜினல் பைல் உள்ளாகிறது. ஆனால் பின்னர் செயல்பாட்டில் திருட்டு பைல் இயங்கி சேதத்தினை விளைவிக்கிறது. அது மட்டுமின்றி, போனைப் பயன்படுத்துபவருக்குத் தெரியாமலேயே அந்த போனிலிருந்து இந்த வைரஸ் அழைப்புகளையும், தனிச் செய்திகளையும் அனுப்புகிறது. இதற்கு எதிராக என்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அப்ளிகேஷன் ஒன்றை இன்ஸ்டால் செய்வதற்கு முன்னால் அதற்குத் தேவையான அனுமதியைச் சோதனை செய்திடவும். நம்பிக்கை யற்ற இணைய தளங்களுக்கான லிங்க்கினை கிளிக் செய்திட வேண்டாம். மொபைல் ஆண்ட்டி வைரஸ் ஒன்றின் மூலம் போன் முழுவதனையும் சோதனை செய்திடவும்.
நம்பிக்கையற்ற தளங்களிலிருந்து எதனையும் டவுண்லோட் செய்திட வேண்டாம். முழுமையாக நம்பிக்கையான தளங்கள் என்று தெரிந்த பின்னரே, எந்த புரோகிராமினையும் டவுண்ட்லோட் செய்து பயன்படுத்துங்கள். கூகுள் பிளே ஸ்டோர் போன்ற தளங்கள் தரும் அப்ளிகேஷன்களையே பயன்படுத்தவும்.

எச்சரிக்கை! அண்ட்ராய்ட் போன்களை தாக்கும் புதிய வைரஸ்!

news_22-11-2013_92samsung_vs_apple_v3
அப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபேட் ஆகியவற்றின் வசதிகளை பிரதி பண்ணிய குற்றச்சாட்டுக்காக 290 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்துமாறு சம்சுங் நிறுவனத்துக்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செம்சுங் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட 26 உற்பத்திகளில் அப்பிள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்து அப்பிள் நிறுவனம் சம்சுங் நிறுவனத்தின் மீது வழக்குத் தாக்கல் செய்தது.வழக்கினை விசாரணை செய்த மாவட்ட நீதிபதி லுசி கோஹ் தலைமையிலான குழுவினர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
எனினும் தமது உற்பத்திகள் தனித்தன்மை வாய்ந்தவை என்று உறுதிபடத் தெரிவிக்கும் சம்சுங், இது தொடர்பில் மேன்முறையீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
அப்பிள், சம்சுங் நிறுவனங்களுக்கிடையிலான முறுகல் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றமையால் போட்டித் தன்மை மிக்க மொபைல் சந்தையில் பாரியதொரு மாற்றம் ஏற்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அப்பிள் vs சம்சுங் முறுகல் நிலை தீவிரம்

http://www.andrewspenceonline.com/wp-content/uploads/2013/06/where-do-google-doodles-come-from-ff2932470c.jpg
தன் ஜிமெயில் தளத்தில், அதுவரை யாரும் தராத வகையில், அதிகக் கொள்ளளவில், இலவசமாக ஹார்ட் டிஸ்க் இடம் தந்து கூகுள் பிரபலமானது.
தற்போது கூகுள் இலவசமாக இதுவரை தந்து வந்த டிஸ்க் இடத்தின் அளவை 15 ஜிபியாக உயர்த்தியுள்ளது.
கூகுள் சந்தாதாரர்கள் அனைவரும், இனி ஜிமெயில் அக்கவுண்ட்டில் 10 ஜிபி இடமும், கூகுள் ட்ரைவ், கூகுள் ப்ளஸ் மற்றும் போட்டோக்கள் பதிந்து வைக்க, மேலும் 5 ஜிபி இடமும் பெறலாம்.
இந்த மூன்று சேவைக்குமாக மொத்தமாக 15 ஜிபி இடம் வழங்கப்படுகிறது. ஒரு பிரிவில் கூடுதலாகப் பயன்பாடு இருந்து, மற்றதில் குறைவாக இருந்தால், குறைவாக உள்ள பிரிவின் இடம், அதிகமாகப் பயன்படுத்தப்படும் பிரிவிற்குப் பயன்படுத்தப் படலாம். எடுத்துக் காட்டாக, கூகுள் ட்ரைவில் அதிகமான பைல்களை வைத்து, அதில் உள்ள 5 ஜிபி இடம் அதற்குப் போதுமானதாக இல்லை எனில், ஜிமெயில் பிரிவில் இடம் இருந்தால், அதனை எடுத்துக் கொண்டு, அதில் பைல்கள் சேவ் செய்யப்படும்.
இவ்வாறே, கூகுள் ப்ளஸ் போட்டோ சேவையில் இடம் தேவை என்றாலும், மற்ற இரு பிரிவுகளில் இடம் இருப்பின் இடம் எடுத்துக் கொள்ளலாம்.
15 ஜிபிக்கும் மேலாக இடம் தேவைப்படுபவர்கள் என்ன செய்திட வேண்டும்? 5 டாலர் வாங்கிக் கொண்டு, 100 ஜிபி இடம் ஒரு மாதம் பயன்படுத்த கூகுள் அனுமதிக்கிறது. அப்படியானால், கட்டணம் செலுத்தினால், அதிக பட்ச இடமாகக் கூகுள் எவ்வளவு தருகிறது என்று அறிய ஆவலா? மாதத்திற்கு 800 டாலர் செலுத்தி, 16 டெரா பைட் இடத்தினை கூகுளிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
சென்ற ஆண்டில், கூகுள் அதன் கூகுள் ட்ரைவ் சேவையினைத் தொடங்கிய காலம் முதல், க்ளவுட் சேவைப் பிரிவில் இயங்கும் மற்ற பிரிவினருக்குப் போட்டியாக, இடம் வழங்குவதில் முதல் இடத்தைக் கொண்டிருந்தது.
இதனால், மற்ற சேவை நிறுவனங்களும், அதே போல் தர வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானார்கள். மைக்ரோசாப்ட் ஸ்கை ட்ரைவ் மற்றும் ஆப்பிள் ஐ-க்ளவ்ட் இந்த வகையில் போட்டியைச் சந்தித்தன. ஆனால், சிறிய நிறுவனங்களான ட்ராப் பாக்ஸ், பாக்ஸ், சுகர்சிங்க் மற்றும் யு சென்ட் இட் (DropBox, Box, SugarSync and YouSendIt) ஆகியவை போட்டியைச் சமாளிக்க முடியாமல் திணறுகின்றன.
ட்ராப் பாக்ஸ் 2ஜிபி இடம் இலவசமாகத் தருகிறது. ஏறத்தாழ 10 டாலருக்கு, ஒரு மாதம் பயன்படுத்த 50 ஜிபி இடம் தருகிறது. மைக்ரோசாப்ட் ட்ரைவ் 7 ஜிபி இடம் இலவசமாகத் தருகிறது. இவை அடுத்து என்ன செய்யப் போகின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

கூகுள் தரும் இலவச 15 ஜிபி இடம்!

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com