1/31/2014


 

முற்கொடுப்பனவு மொபைல் வலையமைப்பு சேவையை வழங்கிவரும் Boost நிறுவனம் Boost Max 5.7 எனும் Android Phablet இனை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
5.6 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய திரையினைக் கொண்ட இச்சாதனமானது 1.2GHz வேகத்தில் செயற்படக்கூடிய Processor மற்றும் பிரதான நினைவகமாக 1GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளதுடன் சேமிப்பு நினைவகமாக 8GB கொள்ளளவினையும் உள்ளடக்கியுள்ளது.
மேலும் 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 1 மெகாபிக்சலை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா ஆகியவற்றினையும் கொண்டுள்ள இச்சாதனத்தின் பெறுமதி 299.99 டொலர்கள் ஆகும்.

விரைவில் அறிமுகமாகும் Boost Max 5.7

 

அமெரிக்காவின் நியூயோர்க்கை சேர்ந்த 14 வயது மாணவி ஒருவர் சூரிய சக்தியில் இயங்கக்கூடிய நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தினை உருவாக்கியுள்ளார்.
எந்தவொரு அசுத்த நீரையும் குடிநீராக மாற்றும் இப்பொறிமுறையைக் கண்டுபிடித்த தீபிகா குரூப் என்ற இந்த மாணவிக்கு “அமெரிக்காவின் முதற்தர இளம் விஞ்ஞானி” பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை இம் மாணவிக்கு அமெரிக்காவின் Discovery Education மற்றும் 3M ஆகிய நிறுவனங்கள் 25,000 அமெரிக்க டொலர்களை வழங்கி கௌரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சூரிய சக்தியில் இயங்கும் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் கண்டுபிடிப்பு - 14 வயது மாணவி சாதனை (வீடியோ இணைப்பு)

ஸ்மார்ட் கைப்பேசி வகைகளுள் ஒன்றான iPhone மூலம் எண்ணற்ற பயன்களை பெற்றுக்கொள்ள முடியும் என்பது தெரிந்ததே.
இவற்றின் அடிப்படையில் தற்போது அமெரிக்காவிலுள்ள ஸ்டார் வூட் ஹோட்டல் ஒன்றில் iPhone இனை அறை சாவியாக பயன்படுத்தும் தொழில்நுட்பம் கையாளப்பட்டு வருகின்றது.
குறிப்பிட்ட அறையில் தங்கும் நபர் ஒருவர் தனது iPhone இற்கான விசேட அப்பிளிக்கேஷனை தரவிறக்கம் செய்து நிறுவுவதன் மூலம் இந்த வசதியினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த வசதியானது விரைவில் அன்ரோயிட் கைப்பேசிகளுக்கும் வரவுள்ளதுடன், 2015ம் ஆண்டளவில் 123 ஹோட்டல்களில் இவ்வசதி நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறை சாவியாக iPhone...

இலகுவான பிரயாணங்களுக்கு பயன்படுத்தப்படும் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு சக்கரங்களை கொண்டிருப்பதனால் அதனை செலுத்துபவர் சமநிலையை பேண வேண்டும்.
அவ்வாறில்லாத சந்தர்ப்பங்களில் சரியான முறையில் அவற்றை செலுத்த முடியாது. இதனால் பலர் மோட்டார் சைக்கிள்களை நினைத்தே பார்ப்பதில்லை.
இதை உணர்ந்து கொண்ட சன் பிரான்சிஸ்கோவில் அமைந்துள்ள Lit Motors நிறுவனமானது இருசக்கரங்களை கொண்டதும் சுயமாகவே சமநிலையைப் பேணக்கூடியதுமான மோட்டார் சைக்கிள்களை உற்பத்தி செய்துள்ளது.
இவை சாதாரண மோட்டார் சைக்கிள்களை போல் அல்லாது மூடிய தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

விபத்திலிருந்து தன்னை தானே காப்பாற்றி கொள்ளும் மோட்டார் சைக்கிள்

இன்ரர்நெட் உலகத்தையே ஆட்டிப் படைக்கும் கூகுள் நிறுவனம், உலகின் முதல்தர தேடுபொறியாக உள்ளது
இக் கண்ணாடி 2012ம் ஆண்டு இறுதியில் விற்பனைக்குவர உள்ளது. கம்பியூட்டர் செயல்பாடுபோல இயங்கும் இக் கண்ணாடியில் உள்ள அம்சங்களே தனி. இதில் ஜி.பி.எஸ் என்னும் செயற்கைக்கோள்(சட்டலைட்) வழிநடத்தல் இருக்கிறது.
இதனூடாக நடை பயணிகள் ஒரு சாலையை அல்லது வீட்டி இலகுவாகக் கண்டுபிடிக்க முடியும். வீடியோ படம் எடுக்க முடியும். எடுத்த படத்தை நன்பர்களுக்கு 1 செக்கனில் அனுப்பவும் முடியும். அதுமட்டுமா ! நான் சொல்லும் கட்டளைகளை அது நிறைவேற்ற வல்லது.
படம் எடு என்று மட்டும் சொன்னால் போதும் அது உடனே படம் எடுக்க ஆரம்பித்துவிடும். 4ம் தலைமுறை இன்ரர்நெட் வசதிகொண்டதாக அது அமைந்துள்ளது. சிறந்த தேடுபொறியாகவும் அதனைப் பயன்படுத்தலாம் மோபைல் தொலைபேசி உள்ளது.
அழைக்கும் நபரின் உருவம் கண்ணாடியில் தோன்றும். பிறிதொருவர் இதேபோல ஒரு கண்ணாடியை அணிந்திருந்தால், அவர் உங்கள் நண்பராக இருந்தால் அதனையும் அது காட்டவல்லது.
அந் நபர் எவ்வளவு தூரத்தில் இருக்கிறார் என்பதனைக் கூட அது துல்லியமாகக் காட்டிவிடும். கூகுள் வெளிவிடும் இக் கண்ணாடி குறித்த காணொளியை இணைத்துள்ளோம். அதனைப் பார்த்தால் மீதம் விளங்கும்.

கூகுள் கண்ணாடி: உலகில் மிக அதிசயமான தொழில் நுட்பம்

smartphones_tablets_phablets
ஸ்மார்ட் போன்கள், ரெப்லட் கருவிகள் போன்றவற்றை பிள்ளைகள் அதிக நேரம் பயன்படுத்துவது நல்லதல்ல என்று சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள்.
இந்தப் பழக்கம் அடிமைத்தனத்தைத் தூண்டி, பிள்ளைப்பராய அபிவிருத்தியைப் பாதிப்பதாக அவுஸ்திரேலிய உளவியல் நிபுணர் ஜொசலின் ப்ருவர் தெரிவித்துள்ளார்.
கூடுதலான நேரம் திரையைப் பார்த்துக் கொண்டிருக்கும் சமயம் மூளையில் ஒருவகை இரசாயனங்கள் கூடுதலாக சுரக்கின்றன. இந்தப் போக்கு பாவனையார்களை பதற்றமான நிலைக்கு இட்டுச் சென்று, புறவுலகின் விடயங்களில் இருந்து தனித்து விடச் செய்கிறதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேஸ்புக், ட்விற்றர் முதலான பிரயோகங்களின் கூடுதலான பயன்பாடு நீண்டகால அடிப்படையில் மூளையில் மாற்றங்களை ஏற்படுத்துவதாகவும் தெரிகிறது.

அதிகநேர தொடுதிரை பாவனையால் பிள்ளைகளுக்கு பாதிப்பு

iphone_hotel_key_001
ஸ்மார்ட் கைப்பேசி வகைகளுள் ஒன்றான iPhone மூலம் எண்ணற்ற பயன்களை பெற்றுக்கொள்ள முடியும் என்பது தெரிந்ததே.
இவற்றின் அடிப்படையில் தற்போது அமெரிக்காவிலுள்ள ஸ்டார் வூட் ஹோட்டல் ஒன்றில் iPhone இனை அறை சாவியாக பயன்படுத்தும் தொழில்நுட்பம் கையாளப்பட்டு வருகின்றது.
குறிப்பிட்ட அறையில் தங்கும் நபர் ஒருவர் தனது iPhone இற்கான விசேட அப்பிளிக்கேஷனை தரவிறக்கம் செய்து நிறுவுவதன் மூலம் இந்த வசதியினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த வசதியானது விரைவில் அன்ரோயிட் கைப்பேசிகளுக்கும் வரவுள்ளதுடன், 2015ம் ஆண்டளவில் 123 ஹோட்டல்களில் இவ்வசதி நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறை சாவியாக iPhone

Boost_maxமுற்கொடுப்பனவு மொபைல் வலையமைப்பு சேவையை வழங்கிவரும் Boost நிறுவனம் Boost Max 5.7 எனும் Android Phablet இனை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
5.6 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய திரையினைக் கொண்ட இச்சாதனமானது 1.2GHz வேகத்தில் செயற்படக்கூடிய Processor மற்றும் பிரதான நினைவகமாக 1GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளதுடன் சேமிப்பு நினைவகமாக 8GB கொள்ளளவினையும் உள்ளடக்கியுள்ளது.
மேலும் 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 1 மெகாபிக்சலை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா ஆகியவற்றினையும் கொண்டுள்ள இச்சாதனத்தின் பெறுமதி 299.99 டொலர்கள் ஆகும்.

விரைவில் அறிமுகமாகும் Boost Max 5.7


 

வெற்றிகரமாக 2013 ம் ஆண்டை நாம் இன்னும் இரண்டு வாரங்களில் நாம் கடக்க இருக்கிறோம்.
இந்த 2013 ஆம் ஆண்டில், நம்மைக் கலக்கிய மால்வேர் புரோகிராம்களில், மிகப் பெரிய அளவில் சேதத்தினை ஏற்படுத்திய மால்வேர் புரோகிராம்களை, அவற்றின் தன்மை அடிப்படையில் இங்கு காணலாம்.
ADVERTISEMENT
அவற்றினால், வரும் 2014 ஆம் ஆண்டில் எத்தகைய பாதிப்பு ஏற்படும் என்பதனையும் ஆய்வு செய்திடலாம்.
"தவறு இழைத்துவிட்டீர்கள்' எனக் குற்றம் சாட்டிப் பயமுறுத்திப் பணம் பறித்த வைரஸ்கள், மொபைல் சாதனங்களில் புதுமையான வழிகளில் பரவிய மால்வேர் புரோகிராம்கள், மேக் கம்ப்யூட்டரிலும் பரவிய அபாய புரோகிராம்கள் எனச் சென்ற ஆண்டு வைரஸ் தாக்குதல்களைப் பிரிக்கலாம்.
முன்பெல்லாம், எஸ்.எம்.எஸ். மூலமும், உங்களுக்கு ஸ்பானிஷ் லாட்டரியில் பரிசு விழுந்தது எனக் கூறும் ஸ்பேம் மெயில்களும், வைரஸ்களில் நம்மை விழ வைக்கும் தூண்டில்களாக இருந்து வந்தன.
ஆனால், 2013 ஆம் ஆண்டில், இவற்றின் வழிகளும், தந்த அபாயங்களும் முற்றிலும் மாறுபட்டவையாக இருந்தன. இந்த வழிகளை நாம் அறிந்து வைத்துக் கொள்வது நாம் எச்சரிக்கையாக இருக்க உதவும். மால்வேர் பைட்ஸ் என்னும் அமைப்பு, தன் வலைமனையில் இதனை ஓர் அறிக்கையாகவே தந்துள்ளது.
                  
நம் வாழ்க்கை எப்படியாவது, ஏதேனும் ஒரு வகையில், இணையத்தைச் சார்ந்ததாக மாறிவிட்டது. நம்மைப் பற்றிய தகவல்கள் இணையத்தில் பதிந்து வைத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
நாம் கையாளும் நிதிப் பரிவர்த்தனைகள், இணையத்தின் வழியாகவே நடைபெறுகின்றன. இதே வழிகளையே, டிஜிட்டல் உலகின் திருடர்கள், தங்கள் கொள்ளைகளுக்குப் பயன்படுத்துகின்றனர்.
நம் டிஜிட்டல் வாழ்க்கையினைச் சிறைப்படுத்தி, அவர்கள் இலக்கு வைக்கும் பணத்தை எடுத்துக் கொள்கின்றனர். 2013 ஆம் ஆண்டில், இவர்கள் பின்பற்றிய மிக மோசமான வழிகளைப் பார்க்கலாம்.

பிணைக் கைதியாக்குதல் (Ransomware)

புதுவகையான மால்வேர் புரோகிராம். இதன் மூலம் நம் பெர்சனல் கம்ப்யூட்டர்கள், இந்த புரோகிராம் அனுப்பியவர்களின் கட்டுப்பாட்டிற்குள் சென்று, நம் பைல்களை அவர்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்கின்றனர்.
பின்னர், நமக்கு செய்தி அனுப்பி, குறிப்பிட்ட அளவில் பணம் செலுத்தினால்தான், அவற்றைப் பெற முடியும் என எச்சரிக்கின்றனர். இந்த வகை அச்சுறுத்தல்களை, அதற்கெனப் பயன்படுத்தப்படும் புரோகிராம்களை Ransomware என அழைக்கிறோம்.

இணையத்தில் விற்பனை செய்யப்படும் சாப்ட்வேர் தொகுப்புகள் அல்லது கூடுதல் வசதிகளைத் தரும் புரோகிராம்கள் வழியே Ransomware வைரஸ்கள் பரவுகின்றன.

மொபைல் போனில் ஸ்கேம் (Phone scam)

"உங்கள் கம்ப்யூட்டரில் வைரஸ்கள் பல புகுந்துவிட்டன' என்று எச்சரிக்கை செய்தி கொடுத்து, "அவற்றை இலவசமாகவே காட்டுகிறோம்' என்று இயங்கி, பல வைரஸ்கள் இருப்பதாகப் போலியாகப் பட்டியலிட்டு, பணம் பறிக்கும் வழிகளை முன்பு பல ஹேக்கர்கள் பயன்படுத்தி வந்தனர்.
இனி, வரும் காலத்தில், மொபைல் போன்களில் இதே வழிகளில் பணம் பறிக்கும் வேலைகள் மேற்கொள்ளப் படலாம். ""மைக்ரோசாப்ட் சட்டப் பிரிவு அலுவலகம்'' என்ற போர்வையில், போன்களுக்கு இந்த மால்வேர் புரோகிராம்களை அனுப்புபவர்கள் செய்தி அனுப்புகின்றனர்.

மொபைல் போன்கள் வழி நாம் நிதி பரிவர்த்தனை மேற்கொள்ள ஆரம்பித்திருப்பதால், தற்போது இந்த வகை ஸ்கேம் மெசேஜ்கள் நிறைய வரத்தொடங்கி உள்ளன. இவை குறித்து கவனமாக இருக்க வேண்டி எச்சரிக்கைகள் இருந்தாலும், பலர் ஏமாந்துவிடுகின்றனர்.

ஆண்ட்ராய்டில் மால்வேர்

மொபைல் போன்கள் பயன்பாடு தொடர்ந்து புயல் போலப் பரவி வருவதால், அதில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பத்தினையே பயன்படுத்தி, மால்வேர் புரோகிராம்கள் அனுப்பப்படுவதும் அதிகரித்து வருகிறது.
இவற்றில் SMS trojans எனப்படும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் இருக்கின்றன. இவை அதிகக் கட்டணத்தில் அனுப்பப்படும் டெக்ஸ்ட் மெசேஜ்களை, போன் பயனாளருக்குத் தெரியாமலேயே அனுப்புகின்றன.

ஆண்ட்ராய்டில் மால்வேர்

மொபைல் போன்கள் பயன்பாடு தொடர்ந்து புயல் போலப் பரவி வருவதால், அதில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பத்தினையே பயன்படுத்தி, மால்வேர் புரோகிராம்கள் அனுப்பப்படுவதும் அதிகரித்து வருகிறது.
இவற்றில் SMS trojans எனப்படும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் இருக்கின்றன. இவை அதிகக் கட்டணத்தில் அனுப்பப்படும் டெக்ஸ்ட் மெசேஜ்களை, போன் பயனாளருக்குத் தெரியாமலேயே அனுப்புகின்றன.

தேவையற்ற புரோகிராம்கள்

சுருக்கமாக கக்கண் என அழைக்கப்பட்ட இந்த வகை புரோகிராம்களில், மிகப் பெரிய அளவில் சேதம் விளைவிக்கும் தன்மை இல்லாவிட்டாலும் கூட, நமக்கு எரிச்சலை ஊட்டும் வகையில் இவை இயங்கின.
இந்த புரோகிராம்கள், டூல்பார்கள், தேடல் சாதனங்கள் என எவற்றையேனும் நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பிரவுசர்களில் பதிக்கின்றன. இந்த வகை சாப்ட்வேர் புரோகிராம்கள் தானாக, நம் கம்ப்யூட்டரில் பதியப்படுவதால், நம் ராம் நினைவகம், கம்ப்யூட்டரின் திறன் ஆகியவை இவற்றால் பயன்படுத்தப்படும்.

அப்போது நமக்குக் கிடைக்கும் கம்ப்யூட்டரின் திறன் குறைந்துவிடும். ஆனால், சென்ற மாத இறுதியில், இந்த வகை மால்வேர்களையும் பயன்படுத்தி, பணம் பறிக்கும் வேலைகள் சில கம்ப்யூட்டர் பயனாளர்களிடம் நடை பெற்றதாக, மால்வேர் பைட்ஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

வரும் ஆண்டு

அப்படியானால், வரும் 2014 ஆம் ஆண்டு எப்படி இருக்கும்? நம் கம்ப்யூட்டர்களைச் சிறைப்பிடித்து, நம் டாகுமெண்ட்களை பிணைக் கைதிகளாக வைத்துக் கொள்ளும் Ransomware புரோகிராம்கள், இந்த ஆண்டில் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
விண்டோஸ் சிஸ்டம் மட்டுமின்றி, ஓ.எஸ். சிஸ்டம் மற்றும் மொபைல் போன்களிலும் இவற்றின் திருட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, நாம் பயன்படுத்தும் மொபைல் டிஜிட்டல் சாதனங்களை, இந்த மால்வேர் புரோகிராம்கள் தங்கள் இலக்குகளாக மேற்கொள்ளும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது ரஷ்யாவில் பரவி வரும் எஸ்.எம்.எஸ். அடிப்படையிலான கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள், மற்ற ஆசிய நாடுகளிலும், ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளிலும் அதிகம் இயங்கும் நிலை ஏற்படும்.





2013 ல் கம்பியூட்டர்களை தாக்கிய சில மோசமான வைரஸ்கள்....!

jan 30 - pizza 3dவிண்வெளி வீரர்களுக்கு சுடச்சுட பீட்சா தயாரிக்கும் 3டி பிரின்டரை அமெரிக்காவில் உள்ள இந்திய இன்ஜினியர் உருவாக்கியுள்ளார்.இந்த 3டி பிரின்டர் 30 ஆண்டு காலம் உழைக்கும் திறன் படைத்தது. விண்வெளியில் நீண்ட கால ஆராய்ச்சி மற்றும் செவ்வாய் கிரக ஆராய்ச்சிகளுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் போதும், இந்த இயந்திரம் உணவு தேவையை ஈடுகட்ட மிகவும் உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது.

விண்வெளி பயணம் மற்றும் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானிகளுக்கு பலவிதமான பாக்கெட் உணவுகள் மற்றும் டின் உணவுகள், குளிர் பானங்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. இருந்தாலும் அவைகள் சரிவிகித ஊட்டச்சத்து உணவாக அமைவதில்லை. மேலும், விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கி நீண்ட கால ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானிகளுக்கு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் உணவுப் பொருட் களை விண்கலம் மூலம் அனுப்பி வைக்கப்பட வேண்டியுள்ளது.
விண்வெளியிலேயே உணவு தயாரிக்கும் நவீன இயந்திரத்தை உருவாக்க அமெரிக்காவின் நாசா மையம் விரும்பியது. இதற்காக நாசா விடுத்த டெண்டரை, அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் உள்ள இந்திய மெக்கானிக்கல் இன்ஜினியர் அஞ்சன் என்பவர் நடந்தும் ‘சிஸ்டம்ஸ் அண்ட் மெட்ரியல்ஸ் ரிசர்ச் கார்பரேஷன்’ (எஸ்.எம்.ஆர்.சி) என்ற நிறுவனம் ஸி78 லட்சத்துக்கு கடந்த ஆண்டு பெற்றது.
விண்வெளியில் சுடச்சுட பீட்சா தயாரிக்கும் 3டி பிரின்டரை, அஞ்சன் உருவாக்கியுள்ளார். இங்க் ஜெட் கலர் பிரின்டரில் இருக்கும் காட்ரிட்ஜ்கள் போல இந்த 3டி பிரின்டரில் இருக்கும் காட்ரிட்ஜ்களில் மைதா மாவு, தக்காளி பவுடர், சமையல் எண்ணெய், தண்ணீர், புரோட்டீன், மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ், ஸ்டார்ச், மசாலா மற்றும் நறுமண பவுடர்கள் இருக்கும்.
பட்டனை கிளிக் செய்தால் போதும், 3டி பிரின்டர் முதலில் மாவை தண்ணீரில் கலக்கி, கீழே பொருத்தப்பட்டுள்ள சூடான தகட்டில் ஸ்பிரே செய்யும். அது வெந்து கொண்டிருக்கும்போதே, தக்காளி பவுடர், எண்ணெய், ஸ்டார்ச், புரோட்டீன், மசாலா என ஒவ்வொரு பொருட்களையும் 3டி பிரின்டர் அடுக்கடுக்காக ஸ்பிரே செய்யும். 70 வினாடிகளில் சூடான பீட்சா தயாராகிவிடுமாக்கும் .

விண்வெளியில் சுடச்சுட பீட்சா தயாரிக்கும் 3டி பிரின்டர் – இந்திய இன்ஜினியரின் கண்டுபிடிப்பு!


 
2013 ஆண்டு மைக்ரோசாப்ட் பல வெற்றி திட்டங்களை செயல்படுத்தினாலும் சிலவற்றை நிறுத்தியது அதிர்ச்சிக்குரியது தான் அது என்ன என்பதை பார்ப்போமா.
டெக்நெட்:
இந்த 2013 ஆம் ஆண்டில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் கைவிடப்பட்ட பெரிய திட்டம் டெக்நெட் என்பதாகும். இதனைப் பலர் தவறாகப் பயன்படுத்துவதாகவும், திருட்டுத்தனமாகக் காப்பி எடுத்துப் பயன்பாட்டிற்கு பரப்புவதாகவும் கூறி மைக்ரோசாப்ட் இதனை நிறுத்தியது.
ADVERTISEMENT
தகவல் தொழில் நுட்ப துறையில் இயங்கும் வல்லுநர்களுக்கு, விண்டோஸ் க்ளையண்ட் மற்றும் சர்வர் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கு, நிலைத்த உரிமம் வழங்குவதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
பயனாளர்கள் இதனைத் தவறாகப் பயன்படுத்தியதால், பாதுகாப்பு நிறைந்த எம்.எஸ்.டி. என். நெட்வொர்க்கிற்கு (MSDN network) பயனாளர்களை மாற்றிவிட்டு, டெக் நெட் திட்டத்தினை மைக்ரோசாப்ட் மூடியது.

லைவ் ப்ராடக்ட்ஸ்

இந்த 2013 ஆம் ஆண்டில், தன்னுடைய பல திட்டங்களை குழுக்களாக மைக்ரோசாப்ட் ஒருங்கிணைத்தது. அதன் ""லைவ் ப்ராடக்ட்ஸ்'' பல பிற புரோகிராம்களாக மாற்றி அமைக்கப்பட்டது.
லைவ் மெயில் மற்றும் ஹாட் மெயில் அவுட்லுக் டாட் காம் (Outlook.com) உடன் இணைக்கப்பட்டது. லைவ் மெஷ் (Live Mesh) திட்டம் ஸ்கை ட்ரைவ் இருப்பதால் கைவிடப்பட்டது. இந்த ஆண்டு தொடக்கத்திலேயே லைவ் மெசஞ்சர் (Live Messenger) ஸ்கைப் உடன் இணைக்கப்பட்டு மூடப்பட்டது.

சர்பேஸ் ப்ரோ

 

2013 பிப்ரவரியில் வந்த இந்த திட்டம், அக்டோபரில் கைவிடப்பட்டது. ஆனால், இதனைக் கைவிட்டதற்கு மைக்ரோசாப்ட் சரியான காரணத்தினைத் தெரிவித்திருந்தது. சர்பேஸ் ப்ரோ 2 டேப்ளட் பி.சி., சென்ற சர்பேஸ் ப்ரோவினைக் காட்டிலும் அதிக மேம்பாட்டு திறனுடன் வடிவமைக்கப்பட்டதால், சர்பேஸ் ப்ரோ கைவிடப் பட்டது. இதன் பேட்டரி திறன் 75 சதவீதம் கூடுதலாகவும், பொதுவான இயங்கும் திறன் 20% கூடுதலாகவும் இருப்பதாக, மைக்ரோசாப்ட் அறிவித்தது.

விண்டோஸ் ஸ்மால் பிசினஸ் சர்வர்

விண்டோஸ் சர்வர் 2012 வெளியான பின்னர், இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் சிறிய வர்த்தக ரீதியான சர்வர் சிஸ்டத்தினை வெளியிடப் போவதில்லை என இத்திட்டத்தை மூடியது.
இதற்குப் பதிலாக, சிறிய வர்த்தக நிறுவனங்கள், மைக்ரோசாப்ட் வழங்கும் க்ளவ்ட் சொல்யூசன்ஸ் வசதியைப் பயன்படுத்த கேட்டுக் கொண்டது. எனவே, இந்த சர்வர் அமைப்பை விரும்புபவர்கள், அஸூர் (Azure), எக்சேஞ்ச் சர்வர் மற்றும் ஷேர் பாய்ண்ட் அல்லது சர்வர் 2012க்கு மாறிக் கொள்ளலாம்.

என்கார்டா

மைக்ரோசாப்ட் விண்டோஸ் சிஸ்டம் பதித்த கம்ப்யூட்டர்களை வாங்கியவர்களுக்கு, ஒரு சிறிய அரும்பொருள் களஞ்சியமாக ""என்கார்டா'', சிடியில் பதியப்பட்டு தரப்பட்டது.
இது முதலில் 1993ல் வெளியிடப்பட்டது. விக்கிபீடியாவின் தகவல்கள் சரியானவையா என்ற சர்ச்சை இருந்ததால், மைக்ரோசாப்ட் வழங்கிய என்கார்டா, அனைவராலும் விரும்பப் பட்டது. இணைய தளப் பதிப்பும் வெளியிடப்பட்டது. இதனால், கவரப் பட்ட மைக்ரோசாப்ட், என்சைக்ளோபீட்யா பிரிட்டானிகாவை வாங்கிட முயற்சித்தது. ஆனால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை.

ப்ளைட் சிமுலேட்டர்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மிகப் பழைய திட்டம் இந்த ப்ளைட் சிமுலேட்டர். 1978ல் இதனை சப் லாஜிக் (subLOGIC) என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
பின்னர், இந்நிறுவனத்தினை மைக்ரோசாப்ட் 1982ல் வாங்கியது. இது ஒரு ஆர்வமூட்டும் கம்ப்யூட்டர் விளையாட்டு. இதற்கென தனி ஆர்வலர்கள் இருந்தனர். மைக்ரோசாப்ட் இந்த விளையாட்டினை மூடியபோது இவர்கள் மிகவும் கவலைப்பட்டனர்; ஆத்திரப்பட்டனர்.

ப்ளைட் சிமுலேட்டர்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மிகப் பழைய திட்டம் இந்த ப்ளைட் சிமுலேட்டர். 1978ல் இதனை சப் லாஜிக் (subLOGIC) என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
பின்னர், இந்நிறுவனத்தினை மைக்ரோசாப்ட் 1982ல் வாங்கியது. இது ஒரு ஆர்வமூட்டும் கம்ப்யூட்டர் விளையாட்டு. இதற்கென தனி ஆர்வலர்கள் இருந்தனர். மைக்ரோசாப்ட் இந்த விளையாட்டினை மூடியபோது இவர்கள் மிகவும் கவலைப்பட்டனர்; ஆத்திரப்பட்டனர்.

ஸூன்

நானும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திலிருந்து வந்த ப்ராடக்ட் தான்'' என்று தன்னை அடையாளம் காட்டிக் கொண்டது ஸூன். டிஜிட்டல் மியூசிக் சந்தையில் சற்று தாமதமாக இது வந்தது. 2007ல் அறிமுகமாகி, ஐ பாட் முன் தாக்குப் பிடிக்க முடியாமல், 2011ல் மூடப்பட்டது. ஆனால்,இந்த சாப்ட்வேர் பிளேயர் இன்னும் எக்ஸ்பாக்ஸ் லைவ் மற்றும் விண்டோஸ் போன் 8ல் இடம் பெற்றுள்ளது.

விண்டோஸ் ஹோம் சர்வர்


வீடுகளிலும், சிறிய அலுவலகங்களிலும், கம்ப்யூட்டர்களை இணைத்துப் பயன்படுத்த, இந்த விண்டோஸ் ஹோம் சர்வரை, 2007 ஆம் ஆண்டு நடந்த நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் அரங்கில், பில் கேட்ஸ் அறிமுகப்படுத்தினார்.
பைல் பகிர்தல், டேட்டா பேக் அப், பிரிண்ட் சர்வர், ரிமோட் இணைப்பு எனப் பல வசதிகள் இதன் மூலம் கிடைத்தன. ஆனால், இதனைத் தன் ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் மைக்ரோசாப்ட் விற்பனை செய்திடவில்லை. இதனை டவுண்லோட் செய்து, பெர்சனல் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடும் வகையில் மைக்ரோசாப்ட் வழங்கி வந்தது. அதனாலேயே, இது தானாகவே மறைந்து போனது.

விண்டோஸ் ஹோம் சர்வர்

அதிகம் புழக்கத்திற்கு வராமலேயே பலவற்றை மைக்ரோசாப்ட் கைவிட்டது. அவற்றில், Microsoft Works, FrontPage, Microsoft Expression, IronRuby, Microsoft Money, Windows Live OneCare மற்றும் Xbox One DRM ஆகியவை முக்கியமானவையாகும்.
இவ்வாறு பல ஆண்டு ஆய்வுக்குப் பின்னர், வெளியாகும் பல சாப்ட்வேர் திட்டங்களை, அனைத்து சாப்ட்வேர் நிறுவனங்களும், பல சூழ்நிலைகளில் கைவிட்டுவிடுகின்றன.
எனவே தான், எதனையும் நம்பி, முழுமையாக ஒன்றைப் பயன்படுத்த முன்வரும் முன், நாம் சற்றுப் பொறுமையாக இவற்றின் பயன்பாட்டு சூழ்நிலைகளைக் கவனிக்க வேண்டியுள்ளது.







 
 
 

மைக்ரோசாப்டால் செய்ய முடியாதவை...!

jan 29 Plastic_to_oil_தற்போது உலக நாடுகள் முழுவதிலுமே தவிர்க்க முடியாத பொருளாகி விட்டன பிளாஸ்டிக் பைகள்.காய்கறி வாங்குவதில் தொடங்கி, கம்ப்யூட்டர் பேக்கிங் செய்வது வரை அனைத்துக்கும் பிளாஸ்டிக் கவர்கள்தான் பயன்பட்டு வருகின்றன. பிளாஸ்டிக் மக்கும் தன்மையற்றவை; இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு, உடலுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடியது என்று எவ்வளவோ எடுத்துக் கூறினாலும் யாராலும் தவிர்க்க முடியாத பொருளாக பிளாஸ்டிக் பைகள் மாறிவிட்டன. இந்நிலையில், நாம் அன்றாடம் பயன்படுத்தி விட்டு வீணாகத் தூக்கி எறியும் பிளாஸ்டிக் பைகளை காருக்கான எரி பொருளாக மாற்றும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர் இந்திய ஆராய்ச்சியாளர்கள்.

இதுகுறித்து வாஷிங்டனில் வெளியாகும் “சர்வதேச சுற்றுச்சூழல் மற்றும் கழிவு மேலாண்மை இதழில்’ வெளியான கட்டுரையில்,” ஒடிஸா மாநிலத்திலுள்ள செஞ்சுரியன் தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை பல்கலைக்கழகத்தின் வேதியியல் நிபுணர் அச்யுத் குமார் பாண்டா மற்றும் ஒடிஸாவிலுள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் வேதியியல் பொறியாளர் ரகுபன்ஷ் குமார் சிங் ஆகிய இருவரும் இணைந்து பிளாஸ்டிக்கிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் தொழில் நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ஆய்வில், பிளாஸ்டிக் பைகளை வெண் களிமண் (அலுமினியம் சிலிக்கேட்) ஊக்கியுடன் 400 முதல் 500 டிகிரி செல்சியஸ் வரை வெப்பப்படுத்தப்பட்டது.அதன் காரணமாக பிளாஸ்டிக்கின் நீண்ட மூலக்கூறுத் தொடர் உடைந்து, எரி பொருளுக்குரிய கரியமிலம் நிறைந்த சிறிய மூலக்கூறுகளை வெளிப்படுத்துகின்றன.அது, வேதிவினைக்கு உட்படுத்தப்படும்போது எரிபொருளாக மாற்றப்படுகிறது” என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆராய்ச்சி வெற்றியுடன் நடைமுறைப்படுத்தப்பட்டால் ஆங்காங்கே பூமியை நிரப்பி வரும் பாலிதீன் பைகளின் எண்ணிக்கை குறைவதேடு, சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் என்பது நிச்சயம்.

பிளாஸ்டிக் கவர்களிலிருந்து எரிபொருள்! – இந்திய ஆராய்ச்சியாளர்களின் தொழில்நுட்பம்!

அடுத்த மாதம் நடைபெற இருக்கும் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ்(MWC) ல் சாம்சங் காலக்ஸி எஸ்5 வெளிவர இருப்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது.
ஸ்பெயின் நாட்டில், பார்சிலோனா நகரில், அடுத்த காலக்ஸி வரிசை வெளியாகும். மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் அங்கு பிப்ரவரி 24-27 நடை பெற இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் வடிவமைப்புப் பிரிவின் துணைத் தலைவர், அண்மையில் கொரியாவின் சீயோல் நகரில் ஒரு பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார்.
காலக்ஸி எஸ் 5 வடிவமைப்பில், புதிய பொருள் ஒன்று பயன்படுத்த இருப்பதாகவும், அதன் மூலம், போன் டிஸ்பிளே வளையும் தன்மை கொண்டதாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ADVERTISEMENT
எனவே, காலக்ஸி எஸ் 5 இரண்டு மாடல்களில் வரும். ஒன்று முழுவதுமாக மெட்டல் அமைப்பிலும், இன்னொன்று பிளாஸ்டிக் அமைப்பிலும் வரும். இவற்றின் விலையிலும் வேறுபாடு இருக்கும்.

அடுத்த மாதம் கேலக்ஸி S5 வெளியீடு...!

மெட்டல் அமைப்பில் உருவாகும் போன் காலக்ஸி எப் (Samsung Galaxy F) என அழைக்கப்படலாம்.
சென்ற 2013 ஏப்ரல் மாதம் வெளியான, சாம்சங் காலக்ஸி எஸ்4, இதுவரை வெளியான ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களில் அதிகம் விற்பனையான போன் என்ற பெயரை எடுத்துள்ளது.
அறிமுகமாகி இரண்டு மாதங்களிலேயே, 2 கோடி போன்கள் விற்பனையாயின. வேகமாக விற்பனையான போன் எனவும் பெயர் எடுத்தது. இதுவரை மொத்தம் 4 கோடி போன்கள் விற்பனையாகியுள்ளன.

அடுத்த மாதம் கேலக்ஸி S5 வெளியீடு...!

1/30/2014


 
இன்று அனைத்து வயதினரும் பயன்படுத்தும் பொது தளமாக பேஸ்புக் மாறிவிட்டது, முன்பெல்லாம் 18 முதல் 25 வயதுள்ளவர்களே அதிகம் இதை பயன்படுத்தி வந்தனர்.

ஆனால் இன்றோ நிலைமை அப்படியில்லை 18 வயது மகள் பேஸ்புக் அக்கவுன்ட் வைத்திருந்தால் அந்த பெண்ணின் அப்பாவும் பேஸ்புக்கில் இருக்கிறார், அம்மாவும் பேஸ்புக்கில் இருக்கிறார்,
மேலும் இன்று 30 வயது முதல் 50 வயது உடையவர்களும் அதிக அளவில் பேஸ்புக்கில் ஆக்டிவாக இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.
மற்றும் சிலர் பெண்களை கவர்வதற்காகவே போலியான அக்கவுன்ட்களை ஆரம்பித்து தங்களது சித்து வேலைகளை காண்பித்துதான் வருகிறார்கள்,
சரி, அத விடுங்க பாஸ் நம்ம கதைக்கு வருவோம் பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளதால், விதிமுறைகளின் படி, தன் தளத்தில் இயங்குபவர்கள் குறித்த தகவல்களை பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.


உலக அளவில், மாதந்தோறும் இதனை 115 கோடியே 30 லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர். இவர்களில் 14.9% பேர் போலியானவர்கள். அல்லது பொய்யான அக்கவுண்ட் வைத்துள்ளனர். எனவே இவர்களின் எண்ணிக்கை 14 கோடியே 9 லட்சம் ஆகும்.

இந்த பொய்யான அக்கவுண்ட்கள் மூன்று வகைப்படும். முதலாவதாக ஒருவரே ஒன்றுக்கு மேற்பட்ட அக்கவுண்ட் வைத்திருத்தல். ஒரு சிலர் தங்களின் வசதிக்காகவும், என்ன செய்கிறோம் என்று அறியாமலும், தங்களுக்கு ஒரே பெயரிலும், அல்லது வேறு வேறு பெயரிலும் அக்கவுண்ட்களை உருவாக்குகின்றனர்.


இந்த பொய்யான அக்கவுண்ட்கள் மூன்று வகைப்படும். முதலாவதாக ஒருவரே ஒன்றுக்கு மேற்பட்ட அக்கவுண்ட் வைத்திருத்தல். ஒரு சிலர் தங்களின் வசதிக்காகவும், என்ன செய்கிறோம் என்று அறியாமலும், தங்களுக்கு ஒரே பெயரிலும், அல்லது வேறு வேறு பெயரிலும் அக்கவுண்ட்களை உருவாக்குகின்றனர்.

அடுத்து 4.6% அக்கவுண்ட்கள் எந்த வகை என பகுத்தறிய முடியாதவையாக உள்ளது. சிலர் தங்கள் நிறுவனத்திற்காக என தனி மனித அக்கவுண்ட்களை உருவாக்கி இயக்குகின்றனர்.
சிலர் தங்கள் செல்லப் பிராணிகளுக்காகத் தங்கள் பெயரில் அல்லது கற்பனைப் பெயரில் அக்கவுண்ட்களை உருவாக்குகின்றனர். இவற்றை எந்த வகையில் பகுத்து வைப்பது என்பதனை எளிதில் முடிவு செய்திட முடிவதில்லை.
அடுத்ததாக, விரும்பத்தகாத அக்கவுண்ட்கள் 3.5% உள்ளன. இவை பேஸ்புக் நிறுவனம் விரும்பாத, தடை செய்திடும் பணிகளுக்கெனவே பொய்யான அக்கவுண்ட்களாக உருவாக்கப்பட்டு இயக்கப்படுகின்றன.



 

பிரம்மிக்க வைக்கும் பேஸ்புக் அக்கவுன்ட் விவரங்கள்...!

http://www.redeemedreader.com/wp-content/uploads/2013/11/gifts.jpg
இணையத்தளம் வழியாக நண்பர்களுக்கு பரிசுகளை அனுப்புவதற்கு ஒரு புதுவிதமான வழியை அறிமுகப்படுத்தியுள்ளது Toy Say Hello என்ற இணையம்.
புகைப்படங்கள் மற்றும் மின்னஞ்சல் வாசகங்களுடன் ஒருவரது குரல் பதிவையும் இணைத்து அனுப்பும் புதுமையான வசதியை கிவிப்ஸ் என்ற இணையத்தளம் வழங்குகிறது.
இந்த சேவையை போல பரிசுப் பொருட்கள் மற்றும் வாழ்த்து அட்டைகளோடு குரல் பதிவை இணைத்து அனுப்பும் வசதியை வழங்குகிறது டு சே ஹலோ இணையதளம்.
உதாரணமாக கைப்பட எழுதப்பட்ட வாழ்த்தை பார்க்கும் போது அதில் அனுப்பியவரின் அன்பை காணலாம். அதே போல தான் கைபேசியில் வாழ்த்து சொல்வதை காட்டிலும் நேரிலேயே சென்று கைகுலுக்கி வாழ்த்து சொல்லிவிட்டு வருவது.
இணையத்தை பொருத்தவரை பலவித அணுகூலங்கள் இருந்தாலும் இந்த தனிப்பட்ட டச்சை காண்பிப்பது கொஞ்சம் கடினம் தான்.
வாழ்த்து அட்டை, பரிசு பொருள் போன்றவற்றை இணையத்திலேயே தெரிவு செய்வது சுலபமானது தான். ஆனால் பரிசளிப்பவரின் தனிப்பட்ட அக்கறையை அவற்றில் பிரதிபலிக்க செய்வது எப்படி?
டு சே ஹலோ தளம் இந்த வசதியை தான் தருகிறது. வாழ்த்து அட்டைகள் மற்றும் இணைய பரிசு பொருட்களுடன் குரல் மூலம் வாழ்த்து செய்தியை பதிவு செய்து இணைத்து அனுப்ப இந்த தளம் உதவுகிறது.
இந்த தளத்தில் உள்ள பரிசு பொருட்களை தெரிவு செய்து விட்டு அதனுடன் வாழ்த்தாக சில வார்த்தைகள் பேசி, அதன் ஒலி பதிவை இணைத்து அனுப்பலாம். பரிசை பெறுபவர்களுக்கு நீங்களே பேசி வாழ்த்து சொல்லி பரிசளித்தது போல நெகிழ்ச்சியாக இருக்கும்.
இணையத்தள முகவரி

இணையத்தில் பரிசுப் பொருட்களை அனுப்புவதற்கு மிகச்சிறந்த வழி

வரும் 2016ல் இந்தியாவில் 45 கோடி மொபைல் போன் விற்பனையாகும் என இந்திய மொபைல் விற்பனைக் கழகம் தெரிவித்துள்ளது.
மேலும், நடப்பு 2013 ஆம் ஆண்டில், மொபைல் போன் விற்பனை 40 கோடியே 10 லட்சத்தைத் தாண்ட உள்ளது. இது கடந்த 2012 ஆம் ஆண்டு விற்பனையைக் காட்டிலும் 26.3% கூடுதலாக இருக்கும்.
ADVERTISEMENT
இந்திய மொபைல் போன் விற்பனைச் சந்தையில் கடும் போட்டி நிலவுகிறது. மொபைல் போன் தயாரித்து விற்பனை செய்வதில், ஏறத்தாழ 150 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
இவற்றில் பெரும்பாலான நிறுவனங்கள், குறைந்த விலை மொபைல் போன்களைத் தயார் செய்வதில் கவனம் காட்டி வருகின்றன.

2016 ல் இவ்வளவு மொபைல்கள் விற்பனை இலக்கு...!

மொத்தத்தில் 91% போன்கள் இந்த வகையில் குறைந்த விலை மொபைல் போன்களாக உள்ளன.
ஸ்மார்ட் போன் வாங்குவது அதிகரித்து வருவதும், முதல் முறையாக போன்கள் வாங்குவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதும், இந்நிலையில் இயங்கும் நிறுவனங்களுக்குச் சவாலாக அமைந்து வருகின்றன.
சீன நிறுவனங்களும் பல்வேறு வழிகளில், பன்னாட்டு நிறுவனங்களுக்கு போட்டியாக இயங்குகின்றன.
இவற்றால், இந்திய நிறுவனங்கள் மிகக் கஷ்டப்பட்டே தங்கள் விற்பனைச் சந்தையைத் தக்க வைக்க முடிகிறது.

2016 ல் இவ்வளவு மொபைல்கள் விற்பனை இலக்கு...!

http://media1.santabanta.com/full1/Miscellaneous/Baby/baby-86a.jpg
குழந்தைகளை கவனிக்க யாருமே இல்லாத பட்சத்தில் குழந்தை அழுதால் அறியத்தருவதற்கு ஒரு மென்பொருள் உள்ளது. இதன் பெயர் CRY GUARD.
இந்த மென்பொருளை ஒரு கைபேசியில் நிறுவிக் கொண்டு மற்றொரு கைபேசியின் நம்பரை கொடுக்க வேண்டும். மென்பொருள் நிறுவிய கைபேசியை குழந்தையின் அருகில் வைத்து விடுங்கள்.
மற்றொரு கைபேசி உங்களிடம் இருக்க வேண்டும். உங்களது குழந்தை அழுதாலோ அல்லது சிறு அசைவுகள் ஏற்பட்டாலோ உங்களுடைய கைபேசிக்கு அழைப்பு வரும்.

குழந்தை அழுதால் தெரிவிக்கும் மென்பொருள்

சாம்சங்கின் மொபைல் வரலாற்றில் அதற்கு மிகப்பெரும் வெற்றியை தேடித்தந்த மொபைல் சாம்சங்கின் கேலக்ஸி S3 தான் இந்த மொபைலின் விற்பனையை கண்டு ஆப்பிளே ஆச்சர்யத்தில் ஆழ்ந்தது.
மேலும் விரைவில் இது சாம்சங்கின் கேலக்ஸி S5 மாடல் மொபைலை வெளியிட உள்ளது கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான S4 ஐ போனை ஒப்பிட்டால் அதன் விற்பனை மிகவும் குறைவு தான்.
ADVERTISEMENT
இதனால் வர இருக்கின்ற அடுத்த மாடல் மொபைலான S5 ல் பல புதிய ஆப்ஷன்களை புகுத்தி வெளியிட சாம்சங் திட்டமிட்டுள்ளது.

சாம்சங் S3 க்கு இன்று முதல் ஜெல்லி பீன் அப்டேட்...!

மேலும் தற்போது S3 பயன்படுத்தும் மொபைல் யூஸர்ஸூக்கு அதன் லேட்டஸ்ட் அப்டேட் ஆன ஆண்ட்ராய்டு ஜெல்லி பீன் 4.3 யை இன்று முதல் இலவசமாச இந்தியாவில் அப்டேட் செய்து கொள்ளலாம் என்றும் சாம்சங் கூறியுள்ளது.
S5 குறித்த முறையான அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என சாம்சங் தெரிவித்துள்ளது.

சாம்சங் S3 க்கு இன்று முதல் ஜெல்லி பீன் அப்டேட்...!

http://assets.hardwaresphere.com/uploads/2009/03/hotelicopter-flying-hotel-flying.jpg
ஊரிலிருக்கும் முனியாண்டி வில்லாசிலிருந்து உலகிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்ல்கள் வரை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் Hotelicopter எனும் அந்தரத்தில் பறக்கும் நட்த்திர ஹோட்டல் பற்றி கேள்விப்பட்டிருக்கீர்களா?
மிகப்பிரமாண்டமான உலங்கு வானூர்தியில் இப்பறக்கும் ஹோட்டல் காணப்படுவதனால் இதற்கு Hotelicopter என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் நீளம் 42மீட்டர்களாகவும், அகலம் 28 மீட்டர்களாகவும் காணப்படுவதுடன் 105850 கிலோகிராமை காவிச்செல்லக்கூடியது. அத்துடன் மணிக்கு 237 கிலோமீட்டர் வேகத்திலும் பறக்கக்கூடியது.
இருந்தும் இப்பறக்கும் ஹோட்டல் இன்னும் பரிசோதனை ரீதியாகவே இருக்கின்றது. இங்குள்ள படங்கள், காணொளிகள் அனைத்தும் விளம்பரம் ஒன்றிற்காக உருவாக்கப்பட்டவையாகும்.

அந்தரத்தில் பறக்கும் நட்சத்திர ஹோட்டல் (வீடியோ இணைப்பு)

முன்பேல்லாம் போட்டோஷாப் செய்து சுமாரா இருப்பவங்கள சூப்பரா பண்ணுவாங்க ஆனா இப்பலாம் நிலைமையே வேறங்க.
நல்லா அழகா இருக்கறவங்கள போட்டோஷாப் பண்றேண்ணு பண்ணி பழைய இத்து போன 5 பைசா மாதிரி மூஞ்ச மாத்திடறாங்க.
அப்படித்தாங்க இங்கயும் சிலர் அவுங்க முகத்த போட்டோஷாப் பண்ணிருக்காங்க அது எப்படி இருக்குன்னு பாருங்க....

போட்டோஷாப் இனி மெல்லச் சாகும்...

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com