12/30/2013

ஜிஎஸ்எல்வி-டி5 ராக்கெட் ஜனவரி 5ம் தேதி விண்ணில் ஏவப்படும்

GSLV
ஜி.எல்.எல்.வி.- டி5 என்ற ராக்கெட்டை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ உருவாக்கியுள்ளது. இந்த ராக்கெட்டை இயக்கும் கிரயோஜெனிக் என்ஜின் இந்திய விஞ்ஞானிகள்உருவாக்கியுள்ளனர்.
மூன்று நிலைகள் கொண்டது:
இந்த ராக்கெட் 3 நிலைகளை கொண்டது. 414 டன் எடையும், 49 மீட்டர் உயரம் உடையது. ஜிசாட்-14 என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோளுடன் கடந்த ஆகஸ்டு 19-ந்தேதி விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் ஏவப்படுவதற்கு 75 நிமிடங்களுக்கு முன்பு ராக்கெட்டின் 2-வது தளத்தில் உள்ள உந்துவிசை டேங்கில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டது. அதை தொடர்ந்து ராக்கெட் செலுத்துவது தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது.அதில் ஏற்பட்ட பிரச்சினை தற்போது சரி செய்யப்பட்டுவிட்டது. அதையடுத்து இந்த ராக்கெட் வருகிற ஜனவரி 5-ந்தேதி மாலை 4.18 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவானின் 2 தளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது.இத்துடன் ஜிசாட்-14 தகவல் தொடர்பு செயற்கைக்கோளும் அனுப்பப்படுகிறது. இந்த தகவலை இஸ்ரோ தலைவர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
டிசம்பர்-27ல் அதிகாரபூர்வ வெளியீடு:
ராதாகிருஷ்ணன் மேலும் அவர் கூறுகையில், இந்த ராககெட் அனுப்பும் குழு வருகிற 27-ந்தேதி சந்தித்து ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான அறிவிப்பை அதிகாரமாக வெளியிடுவார்கள் என்றும்,ஜி.எஸ்.எல்.வி.- 5டி ராக்கெட் பரிசோதனை முழுமையாக முடிந்து விண்ணில் செலுத்த தயார் நிலையில் உள்ளது என ராதாகிருஷ்ணன் தெரிவித்தார் அவ்வாறு தெரிவித்தபோது அவருடன் இஸ்ரோ செய்தி தொடர்பாளர் தேவிபிரசாத் கார்னிக் உடன் இருந்தார்.

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com