2/09/2014

மனித தோலில் இருந்து குருத்தணுக்கள்: மகத்தான சாதனை

            http://tech.lankasri.com/photos/full/2014/02/stem_cells_002.jpg

மனித தோலில் உள்ள அணுக்களில் இருந்து குருத்தணுக்களை (ஸ்டெம் செல்) உருவாக்கும் நெடுநாள் ஆராய்ச்சியில் அமெரிக்க- ஜப்பானிய மருத்துவ ஆராய்ச்சி குழுவினர் வெற்றியடைந்துள்ளனர்.
பிறந்த குழந்தையின் வயிற்றில் இருக்கும் தொப்புள் கொடியில் தாயின் கருப்பயில் வளர்ந்த ஏராளமான குருத்தணுக்கள் தேங்கியுள்ளன. எனவே, இவற்றை சேமித்து வைப்பதன் மூலம் பின்நாட்களில் அந்த குழந்தை முதுமை அடையும்போது ஏற்படும் கொடிய நோயின் தாக்கத்தை எதிர்த்து போராட இந்த குருத்தணுக்களை பயன்படுத்த முடியும் என மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
இதையும் கடந்து, செயற்கை முறையில் குருத்தணுக்களை உருவாக்கும் ஆராய்ச்சியில் மாசாச்சூசெட்ஸ் மருத்துவ பல்கலைக்கழகத்தின் முன்னேறிய குருத்தணு ஆராய்ச்சி கூடத்தில் பணியாற்றும் அமெரிக்கா மற்றும் ஜப்பானை சேர்ந்த டாக்டர்கள் கூட்டாக ஈடுபட்டிருந்தனர்.
இதற்காக பரிசோதனை கூடத்தில் வளர்க்கப்படும் எலிகளின் மேல்தோலில் உள்ள உயிரணுக்களை எடுத்து வீரியம் குறைந்த சிட்ரிக் அமிலக் கலவையில் சுமார் அரை மணி நேரம் ஊற வைத்து காத்திருந்தபோது அந்த வியத்தகு மாற்றம் நிகழ்ந்தது.
அமிலத்தில் ஊறிய அந்த உயிரணுக்களில் இருந்து புதிய கரு முளை (எம்ப்ரியோ) உருவானது. இந்த கருமுளையை வைத்து குருத்தணுவை உருவாக்கும் சோதனை முயற்சியும் வெற்றி பெற்றதால், இதே முறையில் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மனித தோலையும் சோதித்து பார்த்தனர்.
இதிலும், எலியின் தோலில் இருந்து எடுக்கப்பட்ட உயிரணுவில் நிகழ்ந்த அதே மாற்றம் ஏற்பட்டதை கண்ட ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர்.
இப்படி செயற்கை முறையில் உருவாக்கி உயிரூட்டப்படும் குருத்தணுக்களை கொண்டு பார்கின்சன் நோய் எனப்படும் முதியோர்களுக்கு உண்டாகும் நடுக்குவாதம் உள்பட இதய நோய் வரை பல பாதிப்புகளுக்கு நோயாளியின் தோலை கொண்டே சிகிச்சை அளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், இந்த வியத்தகு மருத்துவ முன்னேற்றத்தில் சில பின்னடைவுகளும் இருப்பதாக பாஸ்டன் நகரில் உள்ள பிரிகாம் மகளிர் மருத்துவமனையில் திசு பொறியாளராக பணியாற்றும் மருத்துவர் சார்லஸ் வகண்ட்டி கூறியுள்ளார்.
இந்த நவீன மருத்துவ தொழில்நுட்பத்தின் மூலம் மனித தோலில் இருந்து உயிரணுக்களை சேகரித்து, அதனை குருத்தணுவாக மாற்றி, அந்த குருத்தணுவின் மூலம் கிடைக்கும் கரு முளையை வளர வைத்து, அவற்றை மனித விந்தாகவும், கருமுட்டையாகவும் விரைவில் மாற்றிவிட முடியும்.
இப்படி தயாரிக்கப்படும் விந்துடன் கருமுட்டையை செயற்கையாக இணைத்து ‘குளோனிங்’ முறையில் சிலர் மனித உயிர்களை உருவாக்க முயற்சித்தால் அது மனித குலத்துக்கே பெரிய தீங்காக அமைந்து விடும்.
பலவீனமடைந்து விட்ட மனித திசுக்களுக்கு புத்துணர்வு அளித்து, கொடிய நோய்களை எதிர்த்து போராட உதவும் குருத்தணு மேம்பாட்டு ஆராய்ச்சியானது மரணத்தில் இருந்து உயிர்களை காப்பாற்றி, ஆயுளை நீட்டிக்க உதவும் என்பது உண்மைதான்.
இருப்பினும், இந்த ஆராய்ச்சியின் வெற்றியானது, எதிர்பார்த்ததற்கு மாறான எதிர்விளைவையும் ஏற்படுத்தி விடும் ஆபத்தும் உள்ளது என எச்சரித்துள்ளார்.

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com