டாடா நிறுவனம் புதிய போல்ட் ஹைட்ச்பேக் மற்றும் செஸ்ட் செடான் காரினை
பார்வைக்கு கொண்டு வந்துள்ளது. விஸ்டா பிளாட்பாரத்தின் மேம்படுத்தப்பட்ட
கார்களாக வெளிவரவுள்ள போல்ட் மற்றும் செஸ்ட் இந்திய சாலைகளில் டாடா
கார்களின் ஆதிக்கத்தினை அதிகரிக்க செய்யும் என பரவலாக
எதிர்பார்க்கப்படுகின்றது.செஸ்ட் காரின் சிறப்பு என்னவென்றால் கிளட்ச் பெடல் இல்லாத மேனுவல் மூலம் கியர் லிவரினை மாற்றி இயக்கி கொள்ளமுடியும். இதனை டாடா ஃஎப்-ட்ரானிக் நுட்பம் என பெயரிட்டுள்ளது.

செஸ்ட் மற்றும் போல்டில் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.
பாதுகாப்பு அம்சங்களில் ஏபிஎஸ் மற்றும் எலெக்ட்ரிக் பவர் ஸ்டீயரீங் வசதியினை கொண்டுள்ளது. மேலும் நவீன வசதிகள் கொண்ட தொடுதிரை தகவமைப்பினை கொண்டுள்ளது. இவ்வமைப்பில் மேப்மை இந்தியா வழிகாட்டியினை பெற்றுள்ளது.
போல்ட் மற்றும் செஸ்ட் இவ்வருடத்தின் மத்தியில் விற்பனைக்கு வரவுள்ளது.
Post a Comment