இன்று இணைய தளம் வழியே சமூக சேவைகளை வழங்குவதில், கூகுள் நிறுவனத்தை அடித்துக் கொள்ள வேறு எந்த நிறுவனத்தாலும் முடியவில்லை.
புயல்
வேகத்தில் தன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொண்டு, இந்த
பூமியில், அனைவரின் வாழ்க்கை தடங்களைப் பதிவு செய்திடும் ஓர் தளமாக, கூகுள்
தளம் இயங்கி வருகிறது.
இதில் கடந்த சில மாதங்களில், கூகுள் ப்ளஸ்
வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதாக, இணையப் பயன்பாட்டை
ஆய்வு செய்திடும் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
சென்ற 2011 ஆம்
ஆண்டு, ஜூன் மாதம் கூகுள் ப்ளஸ் சேவை, பயனாளர்கள் தரும் அழைப்பின் பேரில்
வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது. தொடக்கத்திலிருந்து, தன் சேவைகள் ,
ஜிமெயில், யு ட்யூப் மற்றும் கூகுள் டாக்ஸ், ஆகியவற்றை ஒருங்கிணைத்து
இயக்கும் வகையில், கூகுள் ப்ளஸ் தொடங்கப்பட்டது.
ஆனால்,
பயனாளர்களுக்கு இந்த கட்டமைப்பின் மீது நம்பிக்கை கொள்ள சிறிது காலம்
தேவைப்பட்டது. இக்காலத்தில், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் சமூக இணைய தளங்கள்
பால் மக்கள் அதிக ஆர்வம் கொண்டு பயன்படுத்தி வந்தனர்.
ஆனால்,
தொடர்ந்த காலத்தில், பயனாளர்கள் கூகுள் ப்ளஸ் பக்கம் தங்களை இணைத்துக்
கொண்டு, அதன் சேவைகளைப் பயன்படுத்த தொடங்கினார்கள். தற்போது மொத்த
வாடிக்கையாளர் எண்ணிக்கையில், ட்விட்டர் தளத்தினை கூகுள் ப்ளஸ்
மிஞ்சிவிட்டது.
இருப்பினும் ட்விட்டர் மற்றும் கூகுள் ப்ளஸ் இணைந்த
எண்ணிக்கை, பேஸ்புக் எண்ணிக்கையை எட்ட இயலவில்லை. ட்விட்டரிடம் 23 கோடி
பயனாளர்கள் உள்ளனர். கூகுள் ப்ளஸ், தன்னிடம் 36 கோடி பதிவாளர்களைக்
கொண்டுள்ளது. பேஸ்புக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 125 கோடியைத்
தாண்டிவிட்டது.
கூகுள் ப்ளஸ் தளத்தின் அதீத வளர்ச்சி, கடந்த அக்டோபர்
மாதத்திற்குப் பின்னரே ஏற்பட்டது. அக்டோபர் மாதம் இதன் வாடிக்கையாளர்கள்
25 கோடியாக இருந்தனர்.கூகுள் நிறுவனத்தைப் பொறுத்தவரை, அதன் நோக்கம்,
பேஸ்புக் தளத்தினை வாடிக்கையாளர் எண்ணிக்கையில் வெற்றி கொள்வதல்ல.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment