காச நோயினால் பீடிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஸ்டெம் செல்லைக்கொண்டு சிகிச்சை
அளிக்க முடியும் என சர்வதேச ஆராய்ச்சிக் குழு ஒன்று தெரிவித்துள்ளது.
இது காச நோய்க்கு எதிரான நிர்ப்பீடனத்தை தூண்டுவதற்கு உதவியாக இருக்கும் எனவும், பாதிப்புக்கு உள்ளான இழையங்களை சரிசெய்வதற்கு உதவியாக இருக்கும் எனவும் அக் குழு மேலும் தெரிவித்துள்ளது.
இக் குழு 2009ம் ஆண்டு தொடக்கம் 2011ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 21 வயதிலிருந்து 65 வயது வரையான 30 நோயாளிகளை அவதானித்து அதன் அடிப்படையாகக் கொண்டு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்துள்ளது.
இதேவேளை, கிழக்கு ஐரோப்பா, ஆசியா, தென் ஆபிரிக்கா போன்ற பகுதிகளில் சுமார் 450,000 பேர் காச நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது காச நோய்க்கு எதிரான நிர்ப்பீடனத்தை தூண்டுவதற்கு உதவியாக இருக்கும் எனவும், பாதிப்புக்கு உள்ளான இழையங்களை சரிசெய்வதற்கு உதவியாக இருக்கும் எனவும் அக் குழு மேலும் தெரிவித்துள்ளது.
இக் குழு 2009ம் ஆண்டு தொடக்கம் 2011ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 21 வயதிலிருந்து 65 வயது வரையான 30 நோயாளிகளை அவதானித்து அதன் அடிப்படையாகக் கொண்டு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்துள்ளது.
இதேவேளை, கிழக்கு ஐரோப்பா, ஆசியா, தென் ஆபிரிக்கா போன்ற பகுதிகளில் சுமார் 450,000 பேர் காச நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment